Posts

Showing posts from October, 2018

குடும்ப தெய்வங்கள், குல தெய்வங்கள், கிராம தெய்வங்கள் ?

Image
குடும்ப தெய்வங்கள், குல தெய்வங்கள், கிராம தெய்வங்கள் ,காவல் தெய்வங்கள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குடும்பத்தை அளத்தங்கரை குடும்பம் என்பார்கள்.பொன்னார் குடும்பம் பெண் வழி உறவின் நிமித்தம் இங்கே வந்தவர்கள்.ராஜாக்கமங்கலம் உப்பளத்தை திருவிதாங்கூர் ராஜாக்கள் காலத்தில் உரிமையாளராக வைத்து நடத்தியவர்களின் குடும்பம் அது .பெரிய குடும்பம் .இன்றும் பெரிய குடும்பமே. எங்களுடைய குடும்பத்திற்கும் அவர்களுக்கும் உறவு உண்டு.அவர்களுடைய குடும்ப தெய்வத்தின் பெயர் மனோன்மணி .இன்று வரையில் அவர்கள் குடும்பத்தின் ரகசிய தெய்வமாக மனோன்மணி திகழ்கிறாள்.குடும்பத்தினர் எங்கெங்கோ பரந்து விரிந்து பரவியிருந்தாலும் ஆண்டின் எல்லா நாட்களிலும் மனோன்மணிக்கு விளக்கு போட வேண்டும்.ஒவ்வொரு நாளும் குடும்ப அங்கத்தினர் யாரேனும் ஒருவர் எங்கிருந்தாலும் வந்து செய்ய வேணும்.ஒவ்வொரு நாளுமென ஆண்டு முழுவதற்கும் யார்யார் செய்ய வேண்டும் என்பதனை அவர்கள் பகுத்து வைத்திருக்கிறார்கள்.தவறாமல் செய்து வருகிறார்கள். உங்கள் உயிருக்கும் உடமைக்கும் இந்த குடும்ப தெய்வங்களே அரண் .உடலுக்கோ உடமைக்கோ இடர்பாடு ஏற்படுகிறதெனில் மனோன்மணி முன்னி

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

Image
வெயிலாள்  டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ் ஜெயமோகனும் ,அருண்மொழி நங்கையும் திறந்து வைக்கிறார்கள் காமராஜ் சிலை தெற்கு பக்கம் ,தெங்கம்புதூர் நாள் 19 -10 - 2018  காலை 9  - 10  இருபது வருடங்களுக்கு முன்பு நான் கடுமையாக தோல்வியடைந்த தொழில் இது.மீண்டும் ஒரு சுற்று சுற்றி திரும்பி இந்த இடத்திற்கு வந்து சேர இருபது வருடங்கள் ஆகியிருக்கின்றன.அப்போது தொழில் பற்றியெல்லாம் எதுவுமே எனக்குத் தெரியாது.இப்போது ஏதேனும் தெரியுமா ? என்று கேட்டால் தெரியாது என்பதே எனது பதிலாக இருக்கும் .தெரிவதால் எல்லாம் சிறப்பாகி விடும் என்றும் இல்லை.அவன் நினைக்க வேண்டும்.அவள் அருள் செய்ய வேண்டும் . பகவானை நம்பி அவனுடைய வேலைக்காரனாக மீண்டும் முயற்சிக்கிறேன்.பகவான் இந்த தொழிலின் உரிமையாளன்.நான் அவனுடைய பணியாள் எங்கும் விற்பதைக் காட்டிலும் குறைவான விலையில் எனக்கு பொருட்களை தர முடியும் என்பதை மட்டுமே உத்திரவாதமாகச் சொல்ல முடியும்.கடன் கொடுப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.பழைய அனுபத்திலிருந்து பட்ட வடு அது அருகாமையில் உள்ளோர் இதனையே அழைப்பாக ஏற்று வந்து உங்கள் வாழ்த்துகளை சொல்லுங்கள்.நீங்கள் வருக

வசியம் அல்லது செட்யூஸ்

Image
வசியம் அல்லது செட்யூஸ் இந்த பிரபஞ்சத்தில் ஆண் என்கிற உயிரி உள்ளளவும்,பெண் என்கிற விலங்கு உள்ளளவும் ஒருவரையொருவர் வசியம் செய்ய முயன்று கொண்டுதான் இருப்பார்கள்.இப்படி இதனை இல்லாமலாக்குவதற்கான ஒரு மந்திரமும் ஒருவரிடம் கிடையாது .அடிப்படை அன்பும் காதலும், உறவும் கலவியும் இதன் பாற்பட்டவையே.வயதோ நெறிகளோ அதற்கு ஒருபோதும் பொருட்டாவதில்லை. இந்த ஆதாரமான அடிப்படை உணர்ச்சியை கைவிட்டு விட்டது போன்று பாசாங்கு செய்ய முடியுமே தவிர அனைத்து ஆற்றல்களுக்கும் அடிநாதமாக விளங்குவது இது.ஆண் எப்போதும் வசியம் செய்ய முயன்று கொண்டிருப்பதையும் பெண் ஆணை வசியம் செய்ய முயன்று கொண்டிருப்பதையும் ஒன்றுமே செய்வதற்கில்லை.அவர் இப்படி செய்யலாமா என்றால் ? அவள் இப்படி செய்யலாமா என்றால் ? அதற்கு விடையேதும் கிடையாது. சக்தியும் சிவனும் மேற்கொண்டிருக்கும் திருவிளையாடல் இது.அனைத்து மாயையும் புகைமூட்டத்துடன் கிளம்புகிற தாய் நதி இது.இந்த ஆதார உணர்ச்சியிலிருந்து விலகும் எவர் ஒருவரும் அவர் தம் அளவில் வன்முறையாளர்களாக இருக்கிறார்கள்.அவர்கள் நாளடைவில் அன்பற்றவர்களாகச் சுருங்கி விடுகிறார்கள்.இதற்கு அர்த்தம் ; காண்போர் அத்தனை ப