Posts

Showing posts from November, 2020

அளத்தங்கரை "கோயில் வீடு" இந்து நாடார் குடும்பம்

Image
  அளத்தங்கரை "கோயில் வீடு" இந்து நாடார் குடும்பம் எட்டு தலைமுறைக் குடும்பம். எட்டாவது தலைமுறையில் பேரன் பேத்திகளுடன் மரகதம்மாள்.நிறைந்த தேஜஸ் .எட்டு தலைமுறை கடந் து செல்வதென்பது சாதாரணமான காரியமில்லை.மூன்றாவது தலைமுறையே பெரும்பாலும் கசந்து விடும்.நாலில் ஷீணம் உண்டாகும் .முரண்படும்.மன சஞ்சலங்கள் தோன்றும். அதனையெல்லாம் ஒரு குடும்பம் கடந்து செல்வதென்பது தெய்வ காரியமின்றி வேறில்லை.ஐந்து தலைமுறை கடந்தாலே அரசியல் அதிகாரம் ஏற்பட்டு விடும்.முதல் தலைமுறையிலேயே ஏற்படுகிற அரசியல் அதிகாரத்திற்கும் இதற்கும் அநேக வித்தியாசங்கள் உண்டும்.மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த குடும்பத்தைச் சார்ந்தவர். எட்டு தலைமுறை என்பது கிளைகிளையாக மொத்த சமூகத்திலும் ஊடுருவி இருக்கக் கூடியது . அளத்தங்கரை குடும்பம் இதற்கு உதாரணம்.இந்த குடும்பத்திற்கு கிழக்கு வடக்காக ஏராளமான கிளைகள்.முகிலன் குடியிருப்பு,ஈச்சன் விளை,மணிகெட்டிப்பொட்டல் என்றும் அதிகமாகவும்.இன்று இந்தியா முழுவதிலும் இருக்கிறார்கள்.உள்ளூரிலும் மருத்துவர்கள் , வழக்கறிஞர்கள் ,பொறியாளர்கள் என்று பலவாறாக.அளத்தங்கரை குடும்பம் என்றால் இன்றும் பெரியவர்

தப்பித்தலுக்கான ஒற்றைச் சாத்தியம்

Image
  உறுதித்தன்மையற்ற அதிகாரம்                           " தப்பித்தலுக்கான ஒற்றைச் சாத்தியம்" நிரந்தர அரசியல். அப்படியொரு காலகட்டம் இருந்தது.இப்போது அது பழமையானது. எல்லாவற்றிற்கும் வக்காலத்து வாங்கி கொண்டு ஒரே தரப்பிலிருந்து உயிர் மூச்சு விடுவது அந்த பழைய முறை.பழைய காங்கிரஸ்காரர்கள் ,தி.மு.கவினர் இப்படி. கம்யூனிஸ்டுகள் தலைமுறை தலைமுறைக்கு இருந்த இடம் விட்டு மாறமாட்டார்கள்.ஆனால் மாற்றம் பற்றி பேசவும் செய்வார்கள்.இன்றைய அரசியலில் அது பழமைவாத முறை . பிரச்சனைகளை அடைப்படையாகக் கொண்டு மட்டுமே நிலைப்பாடுகள் எடுக்கப்பட வேண்டும். ஒருநாள் தி.மு.கவிற்கு ஆதரவாக ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டி வரலாம்.மறுநாளில் அ.தி.மு.கவை ஆதரிக்க நேரலாம்.கெஜ்ரிவாலை ஆதரித்து அரை நொடிக்குள் பி.ஜெ.பியை ஆதரிக்கும் அவசியம் ஏற்படலாம்.மாயாவதியின் ஒரு விஷயம் கவர்ந்த மறுநிமிடத்தில் மம்தாவை எதிர்க்க வேண்டி வரலாம்.பி.ஜெ.பியின் ஒரு கொள்கையை எதிர்த்துக் கொண்டே மற்றொன்றில் ஆதரிப்பதும் சாத்தியமே . ஒரு விஷயத்தில் ஒரு நல்ல முடிவை எட்டும் கட்சி மற்றொன்றில் தலை கவிழ்ந்து விழலாம்.அதற்கான சாத்தியப்பாடுகள் இன்று எல்லா கட்சிகளிலும் உ

எதையேனும் விட்டால் எதுவேனும் வருகிறது

Image
  எதையேனும் விட்டால் எதுவேனும் வருகிறது அடிப்படைப் பண்புகளில் ஒவ்வொன்றைக் கைவிடும்போதும் அதற்கே இணையான அதனினும் மேலான ஒன்று வந்து சேருகிறது.குடியும் காமமும் வேறல்ல.பொய்யும் களவும் வேறல்ல.சுயநலனும் ஊழலும் வேறல்ல.இவை ஒட்டிப் பிறந்தவை உடன் பிறந்தவை கவிஞர் ஷங்கர்ராம்சுப்ரமணியனும் நானும் தெருவில் ஒன்றாகச் சுற்றித் திரிந்த காலங்கள் உண்டு.தெருவில் என்னோடு அதிகம் சுற்றித் திரிந்த நபர் அவர்தாம்.வயிற்றுப் பசிக்காக திருஷ்டித் தேங்காயை எடுத்து உண்ணும் பழக்கம் எனக்கு போதாத காலங்களிலும் கூட இருந்ததில்லை.பசிக்கு உணவு தான் சாப்பிட்டாக வேண்டும்.இரந்தென்றாலும் உண்பதே நல்லது.எடுத்தென்றாலும் உண்பதே நல்லது.பறித்தென்றாலும் உண்பதே நல்லது.பசிக்கு அன்னம்.திருஷ்டித் தேங்காய் அல்ல. திருவல்லிகேணியின் இரவுத் தெருக்களில் அலைந்து கொண்டிருந்த போது ஒருமுறை அவர் சொன்னார்.திருஷ்டித் தேங்காயை எடுத்து தின்னவே கூடாது.அது மிகவும் ஆபத்து என்று.சத்திய வாக்கு அது.வயிற்றுக்கு எடுத்து கொள்ளத் தகாத பொருட்களில் அது ஒன்று.நான் ஆமாம் என்று சொன்னேன்.சென்னையில் வணிகர்கள் நிறையபேர் திருஷ்டித் தேங்காய் உடைத்து கடை சாற்றுவது வழக்கம்.தின்

குரோதத்திற்கு இயற்பெயர் இல்லை

Image
  குரோதத்திற்கு இயற்பெயர் இல்லை ஏனெனில் அது உடன்பிறந்தது,ஒட்டிப் பிறந்தது.ஒடுக்க முடியாதது,எடுக்க முடியாதது,ஒன்றுமே செய்ய முடியாதது.பங்காளிப் பகைகளை ஒன்றும் இயலாமல் போவதற்கு இதுவே காரணம்.யோசித்துப்பார்த்தால் உண்மையில் அது வெளியில் இல்லை.நம்முடைய உள்ளில் இருந்து பிறந்து வெளியில் நடமாடிக் கொண்டிருக்கிறது.நமக்கு அதன் அடையாளம் தெரிவது போலவே அதற்கும் நமதடையாளம் நன்கு தெரியும் குரோதம் பெரும்பாலும் அதனை விட்டுவிட்டு நாம் தனித்து மேலெழுவதால் மேலெழுகிறது.நாம் விட்டுவிட்டா மேலெழுந்தோம் என்று யோசித்துப்பார்த்தால் "ஆம்" என்கிற விடையே வரும்.இல்லை என்று பதில் வருமானால் அது குரோதம் அல்ல.வேறுவகைப் பகை .எதிர்கொள்ள இயலும் பகை.வெறுப்பு.குரோதத்தை எதிர்கொள்ளவே இயலாது.விட்டு அகலாமல் மேலெழுந்திருக்க முடியுமா என்றால் ,முடியாது என்பதே பதில்.அப்படியானால் என்னதான் செய்வது ? வேறுவகைப்பகைகளில் ,வெறுப்புகளில் நீங்கள் அதில் விலகிச் சென்றால் கடந்துவிடலாம்.முகம் நோக்குவதைக் கைவிடலாம்.அதை சிந்திப்பதை நிறுத்தினால் அது அணைந்து போகும்.நீங்கள் அதனைப் பற்றி சிந்திக்கின்றவரையில் அது இருக்கும்.போதுவாகவே பகையெல்லாமே