Posts

Showing posts from 2021

10 கவிதைகள்

Image
 10 கவிதைகள்  1 எல்லா சராசரியும் ஒன்றில் சராசரி மற்றொன்றில் மேதை எல்லா மேதையும் ஒன்றில் மேதை மற்றெல்லாவற்றிலும் சராசரி 2 இன்று பொறிக்குள்ளிருந்து வெளியே வந்து பொறிக்கான பொறியொன்றை வாங்கி பொறிக்குள் திரும்பினேன் அதனை மேஜையாக்கி அதன் மீது சில வார்த்தைகளை வைத்தேன் வெளியில் நின்றொருவன் மதுக்குவளையுடன் பொறிக்குள்ளிருக்கிறாய் தெரியவில்லையா உனக்கு என கத்திக் கொண்டிருந்தான் மேஜையிலிருந்த வார்த்தைகள் இதுவொரு கனவென்பது உனக்கு விளங்கவில்லையா? என்று கேள்வி கேட்கின்றன அவனை நோக்கி 3 காய்ச்சலில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் எப்படி மறைக்க முயன்றாலும் காய்ச்சல் தனக்கு வெளியே தெரிகிறது 4 இன்றைய காலை இளவெயிலுக்கு மிதமான காய்ச்சல்,உடல் வேதனை மங்கலாக கண்கள் கூசுகின்றன தென்னைவோலைகளில் ஒளி வைர மின்னல் பாராசிட்டமால் 650 தந்திருக்கிறேன் மதியத்திற்குள் என் மதியம் திரும்பிவிடும் என் வெயில் எவ்வளவு என சரியாகக் காண்பேன் அல்லது காணாமலும் இருப்பேன் எப்படியாயினும் அதுவே வெயிலின் என்னுடைய சரியான அளவு இந்த இளவெயிலொரு மிகை 5 யாரும் பார்க்காத ஒரு பாம்பு சட்டையை தடயமென விட்டுச் சென்றது மீட்டர் பெட்டிக்குள் கிடந்த சட்டை

விக்ரமாதித்யனை வகைசெய்வது கடினம் - லக்ஷ்மி மணிவண்ணன்

Image
  விக்ரமாதித்யனை வகைசெய்வது கடினம் - லக்ஷ்மி மணிவண்ணன் 1 அவர் மரபின் தொடர் அல்லவா ? என்று ஒருவர் சொன்னாலும் அதனை மறுப்பதற்கில்லை.எல்லா இடங்களிலும் எல்லைகளை மீறுகிறாரே என்றாலும் மறுப்பதற்கில்லை.இரு வேறுபட்ட நிலைகளை வகுக்கவும்,வேறுபடுத்திக் காணவும் தொகுத்துக் கொள்ளவும் உள்ள கருவிகளே நம்மிடமிருப்பவை.நாம் அப்படித்தான் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம்.அவருடைய கவிதைகளைப் பொறுத்து அவர் எப்போதுமே இருவேறுபட்ட நிலைகளுக்கு இடையில் இருக்கிறார்.இருவேறுபட்ட நிலைகளை மறுப்பதற்கும் அல்லது ஏற்பதற்கும் என தனியே அவரிடம் சிறப்பாக எதுவும் இல்லை.பல தரப்புகளுக்கு மத்தியில் இருந்து அவருடைய கவிதை நம்மை நோக்கி வருகிறது.அது தன்னுடைய தனித்துவத்தைக் கவனி என்றோ,நான் பார்த்ததைப் பார் என்றோ தன்னை முன்வைக்க வில்லை.அவருடைய தரிசனங்களும் கூட தனிப்பட்டவை அல்ல பொதுவானவை.' விதியை நம்பிய போதும் வெறுமனே இருப்பதில்லை யாரும் "என்கிற எளிய வரியில் எளிய கவிதையும் உள்ளது.அது மிகவும் எளிய தரிசனத்தால் உரு ஆகிறது.இந்த எளிய பழ மொழியை ஒத்த தரிசனம் தனிப்பட்ட ஒருவரிடம் இருந்து வரவில்லை.பொதுவான ஒன்றில் இருந்து அதன் கூட்டான சரடு ஒன்றில