tag:blogger.com,1999:blog-1531264265074312187.post6567182759722120391..comments2024-03-13T22:29:01.638-07:00Comments on லக்ஷ்மி மணிவண்ணன்: கமல் ஹாசனுக்கு உண்மையாகவே அரசியல் தெரியவில்லை.லக்ஷ்மி மணிவண்ணன்http://www.blogger.com/profile/17371992911982493753noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1531264265074312187.post-9951730334297175162017-07-21T21:56:44.458-07:002017-07-21T21:56:44.458-07:00கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியவில்லை என்று சொல்கிற உங...கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியவில்லை என்று சொல்கிற உங்களுக்கு அரசியல் தெரிகிறதா மணிவண்ணன். ஒரு அரசின் ஊழல் பற்றிப் பேசுவதற்கு என்ன பெரிய அரசியல் தெரிய வேண்டி இருக்கிறது. குடகா ஊழலில் நேரடியா சம்பந்தபட்டவருக்கு வெளிப்படையாக பதவி உயர்வு கொடுத்து ஊக்குவிக்கிறது எடப்பாடி அரசு. எதற்கு? பயப்படாதே, நாங்கள் இருக்கிறோம், எங்களைக் காட்டிக் கொடுத்து விடாதே என்கிற பயத்தினால் தானே! எல்லா ஆட்சிகளிலும் ஊழல் இருக்கத் தான் செய்தது - காமராஜர் ஆட்சி உட்பட. இலைமறை காய்மறையாக இருக்கும். ஆனால் கருணாநிதியின் ஆட்சியில் கொஞ்சம் வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால் ஜெயலலிதா ஆட்சியிலும் எடப்பாடி ஆட்சியிலும் தான் அப்பட்டமாக இருக்கிறது. ஜெயலலிதாவோ கருணநிதியோ ஊழலில் சம்பந்தப்பட்டவருக்கு உடனேயே பதவி உயர்வு கொடுத்து ஊக்குவித்தது நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. உச்சநீதி மன்றமே ஊழல் செய்து தான் சொத்து சேர்த்தார் என்று தண்டனை வழங்கி ஜெயலலிதாவின் சொத்துக்களைப் பறிமுதல் பண்ண உத்தரவிட்டிருக்கிறது என்பதை மனதில் வையுங்கள் நண்பரே! அவரைத்தான் தலையில் வைத்துக் கொண்டு கொண்டாடிக் கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு. ஊழலில் ஜெயலலிதா, எடப்பாடிகளோடு கருணாநிதியை எப்படி ஒப்பிடுகிறீர்கள் என்றே தெரியவில்லை. கருணாநிதி எந்த நீதிமன்றத்தாலும் குற்றவாளி என்று சுட்டிக் காட்டப்படவில்லை நண்பரே! அதிமுக வை விமர்சிப்பதால் அதன் அமைச்சர்கள் கமல்ஹாசனின் மீது காட்டமாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இதில் பிஜேபி எதற்கு லபோதிபோ என்று கமல்ஹாசன் மீது விழுந்து புரள்கிறது. நீங்கள் சொன்னது மிகச் சரி. அதிமுக அரசு தொடர வேண்டுமென்பதில் அதிமுகவினரை விடவும் பிஜேபியினருக்கு அதிக ஆர்வம் இருக்கிறது என்பதற்கான அப்பட்டமான சாட்சியம் தான் இது.silviamary.blogspot.inhttps://www.blogger.com/profile/14357815408292965612noreply@blogger.com