நான் ஒரு இந்து

நான் ஒரு இந்து

பச்சையான இந்து.இந்துமதம் நிச்சயமாக ஒரு சார்பான சித்தாந்தங்களையோ,தத்துவங்களையோ ,வழிபாட்டு முறைகளையோ கொண்ட ஒரு மதம் அல்ல.ஏற்கத்  தெரிந்த மதம் இந்து மதம்.இந்துமதத்தின் எல்லா கிளைகளும் தனியானவை தனித்தன்மை வாய்ந்தவை.எல்லா கிளைகளும் சம முக்கியத்துவம் வாய்ந்தவை.இந்து மதத்தின் இந்த பகுதிதான் ஆகச் சிறந்தது,மற்றதெல்லாம் ஆகக் குறை என்கிற வாதங்கள் போக்கற்றவை.அப்படியேதும் கிடையாது.வேதங்களும் முக்கியம் ,வேதங்களை எதிர்ப்போரும் இங்கே முக்கியம் .இந்துமதத்தின் பிரதானமான பிரிவுகளில் இருந்தபடியே  வைதீக கழிவுகளை சாடியிருப்பவர்கள் ஞானிகள் இந்துமதத்தில் ஏராளம்பேர்.கடைசியில் வருபவர் ஸ்வாமி விவேகானந்தர்.இந்துமதம் பற்றிய கண்ணோட்டங்களை ஒருவர் பரிசீலிக்க விரும்பினால் விவேகானந்தரை நோக்கி முதலில் செல்வதே சிறப்புடைய செயல்.

எங்கள் ஊரில் ஒரு தேர்தலின் போது பா.ஜ.கவிற்கு எதிராக நாங்கள் தெருமுனைகள் தொடங்கி பொது இடங்கள் அனைத்திலும் பரப்புரையில் ஈடுபட்டிருந்தோம்.அப்போது ஒருவர் நீங்கள் நல்ல இந்துவாக இருக்கிறீர்கள் .பின்னே எதற்காக பா.ஜ.கவை எதிர்க்கிறீர்கள் ? என்று கேட்டார்.பா.ஜ.கவை எதிர்க்காமல் எனக்கு தூக்கமே வராது  என்பதற்காக நான் பா.ஜ.கவை எதிர்ப்பவன் இல்லை.ஆனால் அவரிடம் ; இந்துவாக இருப்பதால்தான் பா.ஜ.கவை எதிர்க்கிறேன் என்று பதில் சொன்னேன்.இந்துமதம் ஆரம்பித்த அரசியல் கட்சியா பா.ஜ.க என்ன ? பா.ஜ.கவிடம் உள்ள சகிப்பின்மைக்கும் இந்து மதத்திற்கும் தொடர்பே கிடையாது.இந்து மதம் சகிப்பின் தாய்மடி .இதனை உணராத ஒருவர் ஒருபோதும் இந்துமதத்தின் சாராம்சங்கள் அறிந்தவர் இல்லை.

எனக்கு ஆழ்வார்கள் எந்த அளவிற்கு முக்கியமோ அதேயளவிற்கு நாயன்மார்கள் ,சித்தர்கள்,கிளைமரபுக்களை சார்ந்த அனைவருமே முக்கியம்.இதில் அது பெரிது இது சிறிது என்பதெல்லாம் நோயுற்றோர் கொண்டியங்கும் கொள்கைகள்.நடராஜர் யார் என்று தெரியாத ஒருவனுக்கு கிருஷ்ணன் யாரெனவும் விளங்காது.எப்போதுமே நீங்கள் ஆன்மீகத்தில் ஒன்றைத் தொட்டீர்கள்  எனில் மற்றதும் துலங்கும்.அனுபவங்களில் சாதகத்தைப் பொறுத்து சிற்சில மாற்றங்கள் உண்டு.அவை மாயை உருவாக்கும் உருமாற்றம் அன்றி வேறில்லை.புனைவுகளை ,புராண பதிவுகளைத் தாண்டி கடந்து செல்லும் இடம் உண்டு.வைஷ்ணவத்திற்கும் சைவத்திற்கும் இடையிலான ஊதுபத்திகள் அனைத்தையும் இந்துமத ஞானியர் கரை கண்டு கரைத்திருக்கிறார்கள்.பத்மநாப சாமி ஒரு அனுபவம் எனில் அதைக் கொண்டு நடராஜரைப் பழிவாங்கக் கூடாது.ஒன்று கடல் மற்றொன்று மலை என்று எளிமையில் வைத்துப் புரிந்து கொண்டீர்களேயாயினும் கூட இரண்டுமே முக்கியமானவை.சுடலையும் ,இசக்கியும் இந்துமதத்தின் விஷேச அலங்காரங்கள்.இதுபெரிது அது பெரிது என்போன் வீடு பேறு  அடையமாட்டான் என்பதை எழுதி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.

சிறுநெறி செல்லாத் திறனளித்து அழியாது
உறுநெறி உணர்ச்சிதந்து ஒளிஉறப் புரிந்து...

- வள்ளலார்.

மதம் யாதாயிலும் செரி
மனிதன் நன்னாயிருந்தால் மதி

-ஸ்ரீ நாராயண குரு

தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்
- வைகுண்ட சாமிகள்

நாயிற் கடையாய் கிடந்த அடியார்க்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவமே

- மாணிக்க வாசகர்

நட்ட கல்லை தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணென்று சொல்லுமந்திரம் ஏதடா

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை
அறியுமோ ?

- சிவ வாக்கியர்

எல்லோரும் எனக்கு முக்கியம்.  இவர்கள் எல்லோரும் எனக்குச் சமம் 

Comments

  1. I have a question here. To which religion does the Holy text Manusmirti belongs to?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"