Posts

Showing posts from April, 2020

வாடா மலர்

Image
வாடா மலர் 1 அயர்ன் பாக்ஸை நோக்கி விரைந்து வந்த சிற்றெறும்பை அதனோடு ஒட்டியிருந்த சிறுமியின் நளினம் கசங்காமல் எடுத்து தரையில் விடுகிறான் மகன் தன்னைச் சுற்றி சிறிது தடுமாற்றத்துடன் கிறங்கிய சிற்றெறும்பு மீண்டும் தன் உலகிற்குள் நுழைகிறது , தன்னுடைய பாய்ச்சலில் இருந்த சிறுமியின் நளினத்தை மகனின் கைகளில் பரிசளித்து விட்டு காப்பாற்றிவிட்டேன் என்று இங்கோர் கூச்சலும் இல்லை பரிசளித்து விட்டேன் என்றோர் பேச்சும் இல்லை 2 அந்த தாய் திண்ணையின் ஓரத்தில் சுருண்டு படுத்திருக்கிறாள் முதலில் தனக்குள்ளிருந்த குழந்தையை வெளியேற்றினாள் குழந்தை விட்டு வெளியேறிய இடத்தில் பிரகாசமாயிருக்கிறது தாயின் முகம் அந்த தாய் நாற்காலியில் அமர்ந்திருக்கிறாள் மனதின் சிறுமி வெளியேறிய தடத்துடன் பூரித்துப் போயிருக்கிறது வெளிப்படும் சொல் அந்த தாய் ஓலைக்கீற்றில் பாய் முடைந்து கொண்டிருக்கிறாள் தனது உள்ளத்தில் இருந்த மாமியாரை வெளியேற்றிய பின்னர் அவளிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறாள் இப்போதைய அன்னை அந்த தாய் பிரகாரத்தில் வந்து அமர்ந்திருக்கிறாள் அனைத்தையும் வெளியேற்றிய பின் காதலுடன