Posts

Showing posts from March, 2017

முஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை

Image
முஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம்  தருவதில்லை முஸ்லீம்கள்  கூட்டாக சேர்ந்து வாழும் பகுதிகளில் பிறருக்கு வீடு கொடுப்பதில்லை என்பதே உண்மை.இந்துக்களுக்கு என்றில்லை .அது போன்று கூட்டாகவும் தன்னிறைவோடும் வாழும் பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கும் அவர்கள் வீடு தர மாட்டார்கள். இதனைக் குறையாகச் சொல்லவில்லை.பொருளாதாரத்  தன்னிறைவு பெற்று ,குழுவாக வாழுகிற பல சமூகங்கள் பிறரை அனுமதிப்பதில்லை .இல்லையெனில் அனுமதிப்பதில் சுணக்கம் கடை பிடிப்பார்கள்.இதன் காரணங்களும் எளிமையானவை அல்ல.முஸ்லீம்கள் கூட்டாக இணைந்து வாழுகிற பகுதிகளில் பிறர் வாடகைக்கு அமர்த்த பட்டிருக்கிறார்களா ? நினைவைத் திரட்டி யோசித்துப் பாருங்கள் உண்மை விளங்கும்.நடைமுறை தெரியும் .திருவல்லிகேணியிலிருந்து ,மேட்டுப் பாளையம் ,இடலாக்குடி என எங்கு வேண்டுமாயினும் நீங்கள் சுற்றியலைந்தும் பார்க்கலாம்.நடைமுறை உண்மையல்லாத சில சுயவெறுப்புக்  கருத்துக்கள் பேரில் இங்கிருப்போரின் கவர்ச்சியை மையமிட்ட கழிவிரக்கக் கசடுகள் பொத்தாம் பொதுவாக உண்மைக்கு எதிராகப் பேசுகின்றன.இந்த கழிவிரக்கக் கசடுகள் பேசுவதில் , உண்மை நிலவரம் மறைக்கப்பட்டு பொது விருப்பம் பொங்கும் போது

நான் யார் ?

Image
நான் யார் ? சில வருடங்கள் இருக்கும் .என்னை தொடர்பு கொண்ட ஒருவர் சிலேட் இதழுக்கு சந்தா செலுத்த வேண்டும்.நீங்கள் யார் ? என்று கேட்டார்.எனக்கு விளங்கவில்லை.நான் யாராக இருக்கக்கூடும் ? கொஞ்சம் அறிமுகம் உள்ளவர் எனில் நான் ஒரு பக்கிரியாக்கும் என்று சொல்லியிருப்பேன்.இதில் உள்ள ரி -யை எடுத்து விட்டு பக்கி என்றால் அதுவும் கூட சரியாகத்தான் இருக்கும் என்று சொல்லியிருப்பேன்.எனக்கு தெரியவில்லையே ! அதனால்தான் கவிதைகள் ,கதைகள் என்று எழுதி பார்க்கிறேன்.எப்படியேனும் தொடர்பு கொண்டு உங்களிடம் தெரிவித்து விடமுடியாதா என்கிற ஏக்கத்தில் . அவருக்கு திருப்தி ஏற்படவில்லை .சில மாதிரிகளை தந்து இவற்றில் ஏதேனும் ஒன்றினைத் தேர்வு செய்து சொல்லுங்கள் என்றார்.நல்லது ஆனால் இது போன்ற பல அரசாங்கத் தேர்வுகளில் வெற்றிபெற இயலாமையிலும் சேர்ந்துதானே நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் ? இப்படியான ஒரு தேர்விலேனும் வெற்றிபெற இயன்றிருந்தால் இந்த இடத்தில் இருந்திருப்பேனா தெரியவில்லை.ஒருவேளை கடவுள் எல்லா தேர்வுகளிலும் தோல்பித்ததே இந்த முட்டுச் சந்திற்குள் வந்து சேருவதற்காகத்தானோ என்னவோ ? பள்ளி கல்லூரி படிப்புகளை பொறுத்தவரையில் ஒன்

இரட்டையிலை முடக்கம் ஒரு அரசியல் பலாத்காரம் !

Image
இரட்டையிலை முடக்கம் ஒரு அரசியல் பலாத்காரம்! இரட்டையிலையை முடக்குவதற்கு ஆளும் மத்திய பி.ஜெ.பி அரசு முயற்சிக்கிறது,உட்கட்சி பிளவுகளில் அது அரசியல் லாபம் பெற முயற்சிக்கிறது என்பது போன்ற மக்களின் சந்தேகங்கள் உண்மையாகியிருக்கின்றன .தேர்தல் கமிஷன் நடவடிக்கைக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு  ? என்ற மக்கள்  சந்தேகங்களை நோக்கி பி.ஜெ.பியினரும் கேள்வி கேட்டார்கள்.ஆனால் சந்தேகம் சரிதான் என்பது இப்போது வெளிப்படுகிறது. ஆளும் அரசின் தாக்கம் இன்றி முடிவுகளை எடுக்கும் தனித்த அமைப்புகள் என்று இந்தியாவில் தற்போது எந்த அமைப்பும் கிடையாது.நீதித்துறை,தேர்தல் கமிஷன் உட்பட .இன்னும் அரசாங்க தலையீடுகள் அற்ற அமைப்புகள் இந்தியாவில் உள்ளன என்று ஒருவர் கருதிக் கொண்டிருப்பாரேயானால் அவர் நிச்சயமாக கற்காலத்தைச் சேர்ந்தவராகத் தான் இருக்க முடியும்.அரசின் நேரடியான ,மறைமுகமான தாக்கங்கள் அனைத்தையுமே தலையீடாகவே கருத வேண்டும்.ஜெயலலிதா காலமான பின்னர் பி.ஜெ.பி தமிழ்நாட்டில் மேற்கொண்டு வருகிற அரசியல் சதிகள் "எரிகிற வீட்டில் பிடுங்குகிற வரைக்கும் லாபம் "என்கிற மனோபாவத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன பி.ஜெ.பியின்

குடியில் இருந்து வெளியேற முடியும்.

Image
குடியில் இருந்து வெளியேற முடியும். உள்ளே நுழைந்து விட்டோம் வெளியேறும் வழி தெரியவில்லை என்னும் மனநிலையில் இருப்போருக்கு இந்த செய்தி முக்கியமானது. குடிநோய்  முதலில் பழக்கமாக வந்து தொற்றக் கூடியது.ஒவ்வொரு பழக்கமும் வந்து சேருவதற்கு பல வாசல்கள் இருப்பது போலத்தான் குடிக்கும் .ஏதேனுமொரு விருந்தில் தொடங்கியிருப்பார்கள்.சாகசம் கருதி தொடங்கப் பட்டிருக்கலாம்.கவர்ச்சி  காரணமாக இருந்திருக்கக் கூடும்.செல்லமான வற்புறுத்தல்கள் சிலருக்கு குடியைக் கொண்டு வந்து சேர்த்திருக்கும்.பணியிடம் ,மனச் சோர்வு என வேறு பல காரணிகள் சரிவர பொருந்திப் போயிருக்கலாம்.இவையல்லாத பிற  காரணங்களும் இருக்கக் கூடும்.எப்படியிருந்தாலும் முதலில் பழக்கமாகத் தொற்றிக் கொள்ளும் குடி நாளடைவில் நோயாக மாறுகிறது.குடிநோய் என்பது மனம் சம்பத்தப்பட்ட உடல் சம்பந்தப்பட்ட இரண்டும் இணைந்த ஒரு வியாதி.ஒருவர் நான் ஏன் குடிக்கிறேன் என்பதற்கான காரணத்தை சொல்லத் தொடக்கி விட்டாரெனில் குடிநோய் அவருள் இறுகி விட்டதென்று அர்த்தம்.குடி பழக்கத்திலிருந்து நோயாக மாற்றமடைந்த பின்னர் குடிதான் காரணமேயன்றி சொல்லும் பிற காரணங்கள் பொய்யானவை. நான் குடிக்கத் தொடங

" இடைவெளி " எண்பதுகளை நினைவூட்டும் சிற்றிதழ்

Image
" இடைவெளி " எண்பதுகளை நினைவூட்டும் சிற்றிதழ்     சம்பத்தின் பிரபலமான நாவல் தலைப்புடன் "இடைவெளி " சிற்றிதழ் முதல் இதழ் வெளிவந்திருக்கிறது.மரணம் பற்றிய விசாரணைகளால் நிரம்பிய இந்த நாவலை சம்பத் புத்தகமாகப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை.அந்த நாவல் அடைந்த பிரமிப்பு தமிழ் சூழலில் என்ன என்பதும் அவருக்குத் தெரியாது.அந்த காலத்தில் இடைவெளி நாவலை பிடித்த நாவல்கள் வரிசையில் சொல்வதென்பது ஒரு அறிவுஜீவிக் குறியீடாக இருந்தது.அது ஒரு நல்ல காலமும் கூட .அதுவொரு இறந்த காலம் என்பதால் மட்டும் அதனை ஒரு நல்ல காலம் என்று நான் சொல்லவில்லை.நவீன காலம்தான் ஆனால் இவ்வளவு தொழில்நுட்ப தாக்கம் அப்போது கிடையாது.அது இலக்கியத்திற்கு நிறைய அவகாசத்தைக் கொண்டிருந்தது.வெற்றுப்  பேப்பரில் கையெழுத்திடுவது போல எழுதித் தள்ளினால் யாரும் சீந்தவே மாட்டார்கள்.ஒரு கதை எழுதினால் கூட அது குறுகத் தறித்ததாக இருக்க வேண்டும்.இப்போதைய பெரும்புகழ்க்காரர்கள் பலருக்கு அப்போது நாதியிருந்ததில்லை.பெரியவர்கள் ஒரு கவிதையையோ கதையையோ பாராட்டிக் கேட்க அப்படியினிக்கும் .எளிதில் அது நிகழாது.பாராட்டும் ,மதிப்பும் வெற்றுச் சம்பிரதாய

இஸ்லாமியர்கள் அனைவரையும் கரித்துக் கொட்டாதீர்கள்

Image
ஒரு கொலையை முன்வைத்து இஸ்லாமியர்கள் அனைவரையும் கரித்துக் கொட்டாதீர்கள் ஒரு தீய சம்பவத்தை முன்வைத்து ,அதற்கு காரணமானவரின் மொத்த சமூகத்தையும் பொறுப்பேற்கக் கோருவதை போன்ற மடத்தனம் வேறில்லை. உங்கள் மகனோ,மகளோ ஒரு தவறு செய்தால் ஒட்டுமொத்த குடும்பமுமே காரணம் என்று முடிவிற்கு வருவீர்களா ? இந்து மதத்தவருடனும் , பிறருடனும் இன்னும் திறந்த மனதுடன் இணக்கத்தை இஸ்லாமியர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.அதேசமயத்தில் இப்போது நடைபெற்றிருக்கும் கொலையைக் காரணம் காட்டி மொத்த இஸ்லாமியர்களையும் குற்றம் சாட்டுவோரிடம் எச்சரிக்கை அவசியம்.இணக்கத்திற்கு எதிராகக் காத்திருப்போரை விட்டு அகலுங்கள்.அவர்கள் எல்லோருமே இஸ்லாமியர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என்று இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முழக்கமிடுகிறார்கள்.அது உண்மையல்ல.அவர்கள் நமது சகோதரர்கள்.அவர்கள் அந்நியர்கள் இல்லை .நமது சொந்தங்கள்.அடுத்த தெருவில் வசிக்கிறார்கள் , அவ்வளவுதான் விஷயம். ஒரு திருடன் பிடிபடுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள் .அவனை திருடனாகக் காண்பது ஒரு வகை .திருட்டைச் செய்தவனின் இனமே ,சாதி முழுதுமே ,மதத்தை சேர்ந்தவர்கள் அனைவருமே திர

கவிதை கேளுங்கள்

Image
கவிதை கேளுங்கள்  ஒன்று -1 எவரைப் பார்ப்பதற்கும் வெறுங்கையோடு  சும்மா வருவதில்லை நான் மடங்கி மடங்கிச் செல்லும் மலைத்தொடரில்  நடுவில் தோற்றங்காட்டும் பௌர்ணமியை கொண்டு வந்தேன்  நேற்று உங்களிடம் மொய் எழுதாமல் சோற்றில் கைவைக்கும் பழக்கம்  எனக்கில்லை  வழிநெடுக உதிர்ந்து கிடந்த மஞ்சள் பூந்தரையை மரங்களுடன் அள்ளியெடுத்து வருவது எனது வாடிக்கை கைபிடித்து என்னை வரவேற்றுப் பாருங்கள்  நீங்கள் விட்டகலும் காட்சிகளின் வெப்பம் உண்டு என் கையில் சிறுவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு பேருந்துக்கு வெளியே  ஓடிக்கொண்டிருக்கும் தாவரங்கள்  யுவதிகளுக்கோ பகலில் தருவேன்  இரவின் நட்சத்திரங்கள் எனினும் குழந்தைகள் வசிக்கும் வீட்டில்  வேடிக்கையைத் தரயியலாமல் வெறுங்கையோடு செல்பவர்கள்  துரதிர்ஷ்டவசமானவர்கள் கூர்ந்து என் கண்களை பார்க்கச் செய்தவர்களுக்குக் கடல் காட்டுவேன் இரண்டு - 2 பாமா இல்லத்தில்  யார் வாயிலில் நின்றாலும்  பாமாவே தோன்றுகிறாள் முன்பக்க கேட் நான்கடியகலம் ஒரு பக்கம் சற்றே திறந்திருக்க வேண்டும் திறந்த ஒருபக்க கேட் மேல் நுனி பிடித்து 

உங்களுக்கு அவமானமாக இல்லையா ?

Image
உங்களுக்கு அவமானமாக இல்லையா ?  இந்திய பீனல் கோட் எத்தனையாவது பிரிவில் வருகிறது ! கனம் கோர்ட்டார்  அவர்களே ! இந்தியாவில் நீதிபதிகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசத் தொடங்கினார்கள்.முதலில் இவர்கள் பேசத் தொடங்கியதும் எல்லோரும் எழுந்து நின்று கரகோஷம் செய்தோம் .இனியொரு புதிய விடியல் தொடங்கப் போகிறது என்பது போல .போலீஸ் பீவர் சினிமாக்களில் வெளிப்படுவது போல ,இந்த அதிகார பீவர் ஏற்படுத்திய ஒரு வகையான புதிய விடியல் மனோபாவம் இந்தியாவில் பரவலாக, வைரலாக  மூக்கு சிந்த தொடங்கி பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன என நினைக்கிறேன்.தேர்தல் கமிஷனர்கள் பேசத் தொடங்கியதில் மயக்கமடைந்து நீதிபதிகளும் ஊதுபத்தி கொளுத்தினார்கள்.நீதிபதிகள் தங்கள் சொந்தக் கருத்துக்களை ,ஊதுபத்தி அபிப்ராயங்களை பேசிக்கூடாது என்பதல்ல. தனிப்பட்ட அவர்களின் உதிபத்திக் கருத்துக்களுக்கும் ,நீதிக்கும் ,சட்ட திட்டங்களுக்கும் இடைப்பட்ட வேறுபாடு தெரிந்து பேசவேண்டும்.நீதிமன்றம் என்பது இவர்கள் ஊதுபத்தி விற்பனை செய்வதற்கு உரிமம் வழங்கப்பட்ட இடம் அல்ல.நீதிபதிகள் அரசின் தரப்பாக உருமாற்றமடைந்து வரும் இதே காலகட்டங்களில்தான் அநேகமாக அவர்கள் குற்றவுணர்ச்சிகளை மறைத்த

கமல் ஹாசனின் பேஸ் வாய்ஸ் அரசியல்

Image
கமல் ஹாசனின் பேஸ் வாய்ஸ் அரசியல் கமல் ஹாசன் தமிழில் எனக்குப் பிடித்த நடிகர்.அவர் நடித்த படங்கள் எவ்வளவு கோளாறாக இருந்தாலும் கூட எனக்கு பார்க்கப் பிடிக்கும்.திரும்பப் பார்க்கவும் பிடிக்கும் .நிறைய நுட்பமான அவதானிப்புகளை உடலில் வெளிப்படுத்தத் தெரிந்தவர்.மலையாளம் போன்ற மொழிகளில் இத்தகைய பண்பிற்கு உதாரணம் சொல்ல நிறைய நடிகர்கள் உண்டு.தமிழில் கமல் ஒரு அபூர்வம்.குரலிலும் நடிக்கத் தெரிந்தவர் கமல்.நான் அவருடைய ரசிகரும் கூட.கமல் சினிமாக்களில் கதாபாத்திரங்களை மெருகேற்றக் கூடிய அவருடைய குரலும் அவரது பேஸ் வாய்ஸும் ; அவருடைய அரசியல் பேச்சில் குளறுகிறது.உளறுகிறது.ஒரு துறையில் சிறந்து விளங்குவதற்கும் ,சம்பந்தமற்ற மற்றொரு துறையில் கருத்து சொல்வதற்கும் தொடர்பேதும் இல்லை என்பதற்கு கமலும் ஒரு உதாரணம்.இதனையே ஒரு சாமானியன் சொன்னால் அது ஒரு தேநீர்க் கடை பேச்சு போலத்தான் இருக்கும்.அவரே குறிப்பிடுவதை போல தமுக்கு அடிப்பவரைப் பொறுத்து மேளச் சத்தம் ஒலிக்கிறது ,அதுவே வேறுபாடு. எல்லோருக்குமே அரசியல் ஆர்வமும் முதலமைச்சர் ஆசைகளும் நாட்டில் ஏற்படுவது நல்லதுதான்.தமிழ்நாட்டில் யாராக இருந்தாலும் ஒரு நாளேனும் முதல

கொலைகளில்,தற்கொலைகளில் உற்சாகம் அடையாதிருங்கள்

Image
கொலைகளில்,தற்கொலைகளில் உற்சாகம் அடையாதிருங்கள் கொலைகள் ,விபத்துகள் ,தற்கொலைகள் ஆகியவற்றின் போது உற்சாகம் அடைவதைப் போன்றதொரு தீமை வேறில்லை.கையில் வைத்திருக்கிற அரசியலை நிரூபிக்க கடைசி சந்தர்ப்பம் இதுதான் என்பது போல நடந்து கொள்வது அபத்தம் .மனித உயிர் பெயரில் மதிப்பற்ற செயல் இது .இங்கே கொலைகள் நடைபெறும் போது தங்கள் அரசியல் திராணியை நிரூபிப்பதற்கான கடைசி வாய்ப்பு இதுவென ; கொலையை அரசியல் ஆகாரமாகப் பார்ப்பவர்கள் மிகவும் சிக்கலானவர்.இந்த நாடு கொலைகார நாடு ,கற்பழிப்பு நாடு என்றெல்லாம் வேகமெடுப்பவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.பல சமயங்களில் இவர்களே பிரச்சனையின் கொதிநிலையை வாட வைத்து நீர்த்துப் போகச் செய்கிறார்கள்.ஒரு பிரச்சனை ஏற்படும் போது மொத்த அதிருப்தியையும் கொண்டு எல்லாருடைய தலையிலும் கொண்டு கொட்டுவதற்கு தயாராக இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருத்தல் நலம்.ஒதுங்கி கொள்ளுதல் மேலானது.சகல பிரச்சனைகளிலும் அதிருப்தியின் அத்தனை சாறையும் கொண்டு இறக்குகிற அரசியல் குரல்களுக்கு கண்ணில் புலப்பட மறுக்கும் வேறுபல முகங்கள் உண்டு. பிரச்சனைகள் தனித்து கையாளப்பட வேண்டுமே அல்லாமல் அதற்கு தொடர்பற்ற அரசியல