Posts

Showing posts from October, 2016

கோணங்கிக்கு பிறந்தநாள் வாழ்த்தாக... இக்கவிதை

Image
ஊன்றுகோல் குக்கரின் ஓசையும் கலந்து பருகிய தேநீரில் ஏழு எண்ணங்கள் காட்சிகளாயின முதல் எண்ணத்தில் படிந்திருந்த தூசியைத்தட்டி வெளியேற்றினேன் ஒடுங்க மறுத்த சுய மரணத்தை உள்ளே தள்ளி கொலையின் எண்ணத்தைக் கையிலெடுத்துப் பார்த்தேன் பளபளப்புடன் மினுங்கியது அது எல்லா புறங்களிலும் சவரக்கத்தியின் கூர்மையில் இருந்ததை உருளையாக்கிக் கைத்தடியாக்கிக் கொண்டேன் குருதியும் பழியும் பாவமும் ஊன்றுகோலானது எடுத்து நடக்கத் தொடங்கியதும் வந்து வழி மறித்தது கொலையுண்டிறந்தவனின் ஒரு கவிதை * கொலையுண்டிறந்தவனின் தாயை நீங்கள் பார்க்காமலிருக்கக் கடவது முகமெல்லாம் ஆயுதமாக கொலையைக் கண்களில் வைத்திருக்கிறாள் மகனை நீங்கள் நோகாமலிருக்கக் கடவது அவன் எல்லா பொழுதுகளிலும் சவத்தைச் சுமக்கிறான் பிரேத அறையின் முடுக்கம் அவனில் நிறைந்திருக்கிறது . மனைவியொரு பழந்தெய்வம் அவளிப்போது வைரமாயிருக்கிறாள் மகளை நீங்கள் சலிக்காமலிருக்கக் கடவது அவள்தான் இப்போது அன்னையாயிருக்கிறாள் [ கோணங்கிக்கு பிறந்தநாள் வாழ்த்தாக... கல்குதிரையில் முன்பு வெளிவந்த இக்கவிதை ]

மலிவான சர்க்கஸின் கதை

Image
மலிவான சர்க்கஸின் கதை அங்கு நடக்கிற சர்க்கஸ் பார்க்க சகிக்கவில்லை என்று நண்பன் கூறினான் . அப்போதுதான் கண்டிப்பாக அந்த சர்க்கஸை சென்று பார்த்துவிடவேண்டும் என அவன் உறுதிஎடுத்தான்.அரவிந்தனின் " தம்பு"திரைப்படத்தைப் பார்த்திருப்பார்கள் பலர் என்று இக்கதை உத்தேசிப்பது மிகச் சிலரைத்தான்,தம்பு திரைப்படத்தில் வருகிற சர்க்கஸ் குழுவைக் காட்டிலும் சற்று மேம்பட்ட ஒரு குழுவினரே இந்த மலிவான சர்க்கஸை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள் .தம்பு சர்க்கஸ் முதலீட்டலானைக் காட்டிலும் இந்த சர்க்கஸ் முதலீட்டாளன் சற்று மேம்பட்டவன் .எனினும் மடத்தனத்தில் இருவருமே சமதையானவர்கள் .போட்டி போடுபவர்களும்கூட .அழிவின் விளிம்பில் நின்ற வண்ணம் காலந்தவறிய இந்த இடத்தில கொட்டகையை அமைத்திருந்தார்கள் . அவன் அந்த சர்க்கஸை ராவணனின் பத்து தலையோடு சென்று பார்க்கவே விரும்பினான் .காலை முதலே அதற்கான ஆயத்தத் தயாரிப்புகள் தொடங்கப்பட்டன . மீசை வைத்துக் கொள்வதில் தலைகளுக்கு உள்ள ஆர்வம் காரணமாக தகுதி வாய்ந்த ஒரு சவரக்கடையினுள் நுழைந்தான் .பத்து தலைகளின் பதிமுன்று ஆடி பிம்பங்களை ஒரே சமயத்தில் இளைஞன் சரி செய்தான்.அப்போது அங்கே உத

சிலேட் அறிவிப்பு ,வேண்டுகோள்

Image
சிலேட் அறிவிப்பு ,வேண்டுகோள் அடுத்த இதழுக்காக வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம்.டிசம்பர் மாதத்தில் இதழைக் கொண்டுவரவேண்டும்.சிலேட் இதழின் அவசியத்தை உணரும் நண்பர்கள் ,வாசகர்கள் ,இது தேவையெனக் கருதுவோர் அவசியம் சந்தா செலுத்தி விடுங்கள். வாசகர்கள் இந்த இயக்கத்திற்கு உறுதுணையாய் இருப்பதே முதன்மையானது. ஆண்டு சந்தா ரூ 400/- இரண்டாண்டு சந்தா ரூ 800/- மூன்றாண்டு சந்தா ரூ 1200/- வெளிநாட்டிலிருந்து இதழைப் பெற விரும்புகிறவர்கள் தபால் செலவை கருத்திற்கொண்டு அந்த தொகையை இணைத்து சந்தாவுடன் செலுத்துங்கள்.வெளிமாநிலங்களுக்கு அனுப்ப தபால் செலவு ஒரு இதழுக்கு ரூ 85 /- செலவாகிறது . இது இதழின் விலையில் முக்கால்வாசிக்கும் அதிகம்.நாங்கள் நிறுவனங்கள் எதனுடைய பின்புலமும் அற்றவர்கள் .ஏற்படும் நட்டங்கள் எங்களை நோக்கி மட்டுமே திரும்புபவை.திரும்பிக் கொண்டிருப்பவை. வழக்கமாக இதழ் கேட்டுப் பெறுபவர்கள் இதழுக்காக தொகையையோ ,சந்தாவையோ செலுத்த மறந்து விடுகின்றனர்.நானும் நினைவுபடுத்துவதில்லை.அதிலும் ஆக்ரோஷமாகக் கேட்டுப் பெறுபவர்கள் செலுத்தவே போவதில்லை என்பது எனக்குத் தெரியும்.இருந்தாலும் இவற்றை ஏன் சொல்கிறேனெ

குறுங்கதை - கியூபின் சேம்

Image
குறுங்கதை கியூபின் சேம் லக்ஷ்மி மணிவண்ணன் கியூபின் சேம் ரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவன் .அவன் ஹெப்ரான் மெட்ரிக் பள்ளியில் படிக்கிறான் . முதலில் அவனை அழைத்துக்கொண்டு அவனது பெற்றோர் கிழப்பாதிரி ஒருவரை சென்று பார்த்தனர் . கிழப் பாதிரிக்குள் கிறிஸ்து பலமாக அலைக்கழிந்த வண்ணமிருந்தார் .அவர் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர் .கிழப்பாதிரி தன்னுடனேயே கிறிஸ்த்துவை எப்போதும் பராமரிக்க வேண்டுமென விரும்புபவரும்கூட.கிழப்பாதிரி மதுக்குவளையைத் தொடும்போது கிறிஸ்து தள்ளாடுவார்.பொதுவாகவே தற்காலத்தில் தள்ளாடுகிற கிறிஸ்துவையே பெரும்பான்மை மக்கள் விரும்புகிறார்கள் .தள்ளாடும் கிறிஸ்துவிடம் கருணை சற்று அதிகம் என்பதும் உண்மை .கிழப்பாதிரி அவ்வாறாக கருணை மிகுந்திருந்த ஒரு சமயத்திலேயே கியூபின் சேம் கிறிஸ்துவின் முன்பாக நிறுத்தப்பட்டான்.கிறிஸ்து அப்போது தள்ளாடிய வண்ணம் "உன் பெயரென்ன குழந்தை ?" என்று கியூபின் சேமிடம் கேட்டார் .அதற்கு கியூபின் சேம் எந்த பதிலையும் தரவில்லை .அப்போது அவனது பெற்றோர் கிறிஸ்துவின் முன்பாகப் பதற்றமுற்றனர் .சில விஷயங்களைச் சொல்லத்தலைப் பட்டனர் .ஆனால் கிழப்பாதிரி அவ

சிறுகதை - கொலையாளி விட்டுச்சென்ற சட்டை

Image
சிறுகதை லக்ஷ்மி மணிவண்ணன் கொலையாளி விட்டுச்சென்ற சட்டை அன்று எதற்காக அந்தச் சட்டையை முடிவு செய்தேன் என்பது சரியாக விளங்கவில்லை.எனது உடல்வாகுக்கு அது ஏற்றதாகவும் இல்லை .சற்று பெரியது . பச்சை வண்ணத்தில் தங்க நிறக் கோடுகள் குறுக்கு நெடுக்காக பதிக்கப்பட்ட சட்டை அது . தோளின் இருபுறமும் பட்டைகள் தைக்கப்பட்டிருந்தன .அதுபோல முழுக்கையை மடக்கி பொத்தான்களில் இணைத்துக்கொள்ளும் வண்ணம் ஒரு சிறப்பு அமைப்பும் இருந்தது . பச்சை வண்ணத்தில் தங்கக் கோடுகளின் பளபளப்பு அந்த சட்டைக்கு ஒரு வசீகரத்தை வீசிற்று .எப்படிப் பார்த்தாலும் அது வழக்கமான சட்டையாக இல்லை .தையல்காரர் அச்சட்டையில் தனது செயலை ஏற்றியிருந்தார் .தனது காதலியைப் பழிவாங்கும் நோக்கம் ;அவர் இந்த சட்டையை உருவாக்கும்போது ;அவரது மனதில் ஓடிற்று என்பதை சட்டை வெளிப்படுத்திற்று .பேரலன்காரம் என்றெல்லாம் சொல்ல முடியாது .எனினும் சட்டைக்கு தனிச்சிறப்பு இருந்தது .ஆனால் நீங்கள் நினைத்துக்கொள்வதைப் போன்று சட்டை தோல் போன்று விறைப்புத் தன்மை கொண்டதில்லை .மாறாக மிருதுவானது . சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு நள்ளிரவில் இளம் கொலையாளியொருவன் என்னிடம் இந

மகிழ்ச்சியை ஏற்றுக் கொள்ள பழகுதல்

Image
வெடிவழிபாடு - மகிழ்ச்சியை ஏற்றுக் கொள்ள பழகுதல் எல்லாவிதமான பண்டிகைகளுக்குப் பின்னரும் அதனைத் தாங்கிப் பிடித்த வண்ணம் நிற்கும் ஒருவனோ ஒருத்தியோ உண்டு.அப்படியான தியாகங்கள் இல்லாமல் மகிழ்ச்சியில்லை.மகிழ்ச்சிக்குப் பின்னிருக்கும் திருவுருவம் அது.பல சமயங்களில் அது வெளிப்டையாகத் தெரியாது.உள்ளடங்கியிருக்கும்.மகிழ்ச்சியின் உள்முகமாக இருக்கும் பிசின் அது.பதற்றமானதும் கூட . தானாக ஒன்றை உருவாக்க முயல்பவர்களுக்கெல்லாமே இந்த பதற்றம் பொதுவானது.வாழ்வை எந்த நிலையிலும் எதிர்கொள்ள துணை நிற்கும் சக்தி நிறைந்ததிந்த பதற்றம். கன்னியாகுமரி மாவட்டத்தைத் தாண்டி கேரளாவிற்குள் நுழைபவர்கள் குழித்துறை பாலத்தைக் கடக்கும் போது சாஸ்தா கோவிலில் இருந்து கேட்கும் வெடிவழிபட்டுச் சத்தத்தை போகும் போதும் , வரும் போதும் கேட்கமுடியும்.முழுநேர வெடிவழிபாடு கொண்ட கோவில் அது.சபரிமலையில் வெடிவழிபாடு விஷேசம் .ஒரு சத்தம் முடிய அடுத்த சத்தத்திற்கு மருந்தடைத்து திரி கொளுத்துபவனை ஒருமுறையேனும் கவனித்துப் பாருங்கள்.கரியடைந்து கசக்கிப் போயிருப்பான்.அது துன்பமெல்லாம் இல்லை.கரியடைந்து  கசங்காமல்  சப்தமில்லை. திருமணங்களைத் தாங்கி

"விஷ்ணுபுரம் விருது" தொடர்பான ஜெயமோகனின் கோரிக்கை

Image
"விஷ்ணுபுரம் விருது" தமிழ்நாட்டில் படைப்பாளிகள் ,கவிஞர்கள்,வாசகர்கள் இவர்களை மட்டுமே முன்வைத்து ஆக்கப்பூர்வமாக செயல்படும் ஒரேயொரு விருது என்று "விஷ்ணுபுரம் விருது" என்பது எனது அபிப்ராயம். தன்னிச்சையான படைப்பாளிகளுக்கு வேறு காரணங்கள் எதுவுமின்றி படைப்பின் காரணத்தை மட்டுமே முன்வைத்து வழங்கப்படும் விருது இது.எனக்கு இவ்விருதின் பேரில் மதிப்பிருப்பதற்கான காரணம் இது ஒன்றுதான்.விருது வழங்குவதை ஒட்டி அவர்கள் படைப்புகளை வாசகர்களோடு விவாதிக்கும் விதம் அருமையானது.நேரடியாகவே இதனை உடனிருந்து பார்த்திருக்கிறேன். விருதிற்குரியவரை உண்மையாகவே படைப்பை முன்வைத்து அவர்கள் கௌரவப்படுத்துகிறார்கள்.படைப்புத் தேர்வுகளில் வேறுபட்ட எண்ணங்கள்,வேறுபாடுகள் இருக்கலாம்.இருக்கத்தானே வேண்டும் ? அதன் செயல்பாடு பொருள் சார்ந்த காரணங்களால் குன்றக் கூடாது.இதுபோல நமக்கு வேறு முன்னுதாரணங்கள் இல்லை . சொல்லப்போனால் இதுபோல தமிழுக்கு மேலும் சில உத்வேகங்கள் தேவை.இலக்கிய செயல்பாடுகள் பேரில் மதிப்பு கொண்டோர் உள்ளன்போடு இந்த விண்ணப்பத்தை கருத்திற்கொள்ள வேண்டுகிறேன். படைப்பாளிகள

தொல்.திருமாவளவன் + பொன்.ராதா கிருஷ்ணன்

Image
தொல்.திருமாவளவன் + பொன்.ராதா கிருஷ்ணன் தமிழ்நாட்டில் சமீபகாலங்களில் நடைபெற்ற அரசியல் நகர்வுகளில் எனக்கு ஆர்வம்முட்டுகிற விஷயமாகவும்   , புத்திசாலித்தனமாகவும் தெரிந்த ஒன்று என்று தொல்.திருமாவளவன் ,பொன்.ராதா கிருஷ்ணன் சந்திப்பைச் சொல்வேன்.அது வெறுமனே ஸம்ப்ரதாயமானதொரு  சந்திப்பாகக் கூட இருக்கலாம்.ஆனால் முக்கியத்துவம் கொண்டது. இன்று பா.ஜ.க.இடைநிலை சாதிகளின் அரசியல் அதிகாரத்தை கொண்ட ஒரு கட்சியென்பது உண்மைதான்.ஆனால் அது வருங்காலங்களில் தலித்துகளின் அரசியல்  அதிகாரம் நோக்கி சாயும் தன்மை கொண்டது என்பதில் சந்தேகமேயில்லை.இதனை ஒரு நல்ல நிலையென்றோ அல்லது கெட்ட நிலையென்றோ வகைப்படுத்துவது எனது எண்ணமில்லை.அப்படி வகைப்படுத்துவது அரசியல் ஸ்லீப்பர் செல்களின் வேலை.நிரந்தர ஒரு  கருத்தாளர்களின் நோய் அது.இந்தியாவைப் பொறுத்தவரையில் அடுத்த இருபது வருடங்களுக்குள் தலித்துகளின் அரசியல் அதிகாரம் வெகுசன அரசியல்  அதிகாரமாக மாறியாக வேண்டும்.அதற்கு காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் அனுசரணையானது பா.ஜ.க மட்டும்தான். அரசியல் கட்சிகளை பொறுத்தவரையில் நிரந்தர கருத்தாக்கங்களையும்,நிரந்தர தரப்புகளையும் கொண்டவையே மிகவும் ஆப

பட்டணங்கள் ஒளிக் காடாய் ஜொலிக்கின்றன

Image
பட்டணங்கள் ஒளிக் காடாய் ஜொலிக்கின்றன பண்டிகைகளைக் கொண்டாட சிறு பட்டணமாக இருந்தாலும் கூட அது தயாராவதே அழகுதான்.முதலில் நாசுக்காக அது தொடங்கி பண்டிகையை நெருங்குங்குந்தோறும் நெருக்கடியுடன் கசங்குகிறது.பண்டிகை எந்த பண்டிகையாக இருப்பினும் அது கூட்டான ஜொலிப்பு.ஒருங்கிணைந்த மக்கள் மனோபாவம் பொங்கும் இடம் அது.கூடுதல் குறைவு , பொறாமை ,கசப்பு ,நிறைவு நிறைவின்மை எல்லாவற்றையும் அடக்கியதுதான் பண்டிகைகள்.இருப்பினும் ஒவ்வொருவரின் சிறகிலும் அது புதியதொரு வண்ணத்தை மெருக்கேற்றாமல் இருப்பதில்லை. பண்டிகைக்கு பட்டணம் தயாராவது ஒருபுறம் எனில் தனிமனிதன் எவ்வாறு தயாராக வேண்டும்? உங்கள் வட்டத்திலுள்ள எவரேனும் ஒருவர் பண்டிகையை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கலாம்.நிச்சயமாக இருப்பார்கள்.நீங்கள் பண்டிகைக்கு தயாராகும் ஒவ்வொரு கணத்திலும் அவர் நினைவையும் சேர்ந்தணைத்துக் கொள்ள வேண்டும்.நீங்கள் அவருக்கு ஏதேனும் செய்ய இயலலாம்.இல்லை இயலாமற்போகலாம்.அது பிரச்சனையில்லை.ஆனால் சிந்தையை மறுபக்கமாக சாத்திக் கொள்ளவே கூடாது.சாத்தினால் பண்டிகை முழுமையுறாது.பண்டிகையை ஏக்கத்துடன் அணுகும் ஒருவரை பற்றிய சிந்தை உங

கவிஞர் விக்ரமாதித்யனுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்குங்கள் .

Image
சாகித்ய அகாதமிக்கு ஒரு கோரிக்கை. "விக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம்" தமிழ்க் கவிதையில் பாரதி இனி எப்படி சாத்தியமில்லையோ,அது போலவே விக்ரமாதித்யனும் .நிகழ்ந்த அற்புதங்கள். மறுபடி மீண்டும் சாத்தியங்கள் அற்றவை. குற்றாலம் கவிதைப் பட்டறையில் திருமேனியும் ,முத்து மகரந்தனும் ஆளுக்கொரு பக்கமாக கைத்தாங்கலாக விக்ரமாதித்யனை தூக்கிக் கொண்டு வந்த காட்சி இப்போதும் என்மேல் நிலவுகிறது. தள்ளாடிய மகா ராஜன் பல்லக்கில் வருவது போல அக்காட்சி.திருமேனியும் சரி , முத்து மகரந்தனும் சரி அப்போது இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கையூட்டிய கவிஞர்கள்.திருமேனியின் கவிதைகளை கைப்பிரதியாக ஒரு முறை சுந்தர ராமசாமி படிக்கக் கொடுத்து படித்திருந்தேன்.நிகழ்ச்சி நடைபெறும் திவான் பங்களா வாசலில் இருந்து தொடங்கிய இந்த பல்லக்கு பவனி ; திவான் பங்களாவின் உள்ளறைக்கு வர சாமி இறக்கி வைக்கப்பட்டார்.படையலுக்கு தினுசான பலவகை ரசாயனங்கள்.உண்டியை யாரும் பொருட்படுத்துவதில்லை.ஆனால் அவையும் வேடிக்கைக்காக வந்து உட்கார்ந்திருந்தன. திரவ ஆகாரத்தின் மீது மட்டும் நம்பிக்கை கொண்ட கூட்டமே அப்போது அவரை வட்டமடித்துக் கறங்குவது .அது வெறுமன