Posts

Showing posts from February, 2017

நிழற்தாங்கலில் "ஜெயமோகனுடன் ஒரு நாள் " மார்ச் 26 ஞாயிறு

Image
நிழற்தாங்கலில் "ஜெயமோகனுடன் ஒரு நாள் " மார்ச் 26 ஞாயிறு நாகர்கோயில் "நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளியின்" சிறப்பு நிகழ்வாக மார்ச் 26 ஞாயிறு "ஜெயமோகனுடன் ஒரு நாள் " சந்திப்பு நடைபெற உள்ளது.காலை அமர்வு 8 மணிக்கு கவிஞர் பா.தேவேந்திரபூபதி Devendhira Poopathy Bhaskarasethupathy கவிதைகள் வாசித்து இந்நிகழ்வைத் தொடங்கி வைப்பார்.மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் என்னுடைய Lakshmi Manivannan சில கவிதைகள் வாசிப்புடன் மதிய அமர்வு தொடங்கும். நாங்கள் ஏற்பாடு செய்த சில நிகழ்வுகளில் ஜெயமோகனுடன் சரியாக உரையாட இயலவில்லை என்கிற குறை வாசகர்களுக்கும் ,சக படைப்பாளிகளுக்கும் உள்ளது.அவர்கள் பலமுறை இதுகுறித்துத் எங்களிடம் தெரிவித்து விட்டார்கள்.அக்குறையை அகற்றும் விதமாகவும் நிழற்தாங்கல் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து வருகிறது. ஆசை பலமடங்கு இருப்பினும் கூட ஐம்பது பேருக்கும் அதிகமாக இப்போது இந்நிகழ்வில் பங்கேற்பாளர்களை அனுமதிக்கும் சூழ்நிலை இல்லை.ஐம்பது பேருக்கு உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கு கட்டணங்கள் ஏதும்

படைப்பாளியின் இருத்தல் சு.வேணுகோபால்.

Image
படைப்பாளியின் இருத்தல் சு.வேணுகோபால். எழுத்தாளர் சு .வேணுகோபால்  நாகர்கோவிலில் நடைபெற்ற "அனக்கம்" கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.நெடுநாட்களுக்குப்  பிறகு அரசியல் வாடையற்ற படைப்பாளியின் மாறுபட்ட கண்ணோட்டத்தை மட்டுமே வெளிப்படுத்திய உரையாக அது இருந்தது.இதுதான் இங்கே பற்றாக்குறையாகவும் இருப்பது. ஒரு பொது அரங்கில் இது போன்ற உரையைக் கேட்டு வெகு நாட்களாயிற்று.படைப்புக் கண்ணோட்டம் அற்ற நாலாந் தரமான நபர்கள் பெரும்பாலும் தங்கள் குறுகிய கால அரசியல் கருத்துக்களால் சூழலை முடக்குகிறார்கள்.படைப்புக்  கண்ணோட்டம் அற்றவர்களுக்கு அரசியல் கருத்துக்கள் புகலிடங்களாக அமைந்து விடுகின்றன.அவற்றுக்கும் படைப்புக் கண்ணோட்டத்திற்கும் தொடர்பேதும் கிடையாது என்பதை வாழ்வு முழுதும் அவர்கள் அறிவதுமில்லை. படைப்பாளி இந்த அரசியல் தற்காலிகத்தில் சற்று மங்கி தெரிந்தாலும் கூட அவனுடைய கண்ணோட்டமே ஜீவனுள்ளது என்பதை உணர்த்தியது அவருடைய  உரை.தன் படைப்பின் தருணங்கள் எவ்வாறு உருக்கொள்கின்றன என்பவற்றை அவர் ஒரு குழந்தையைப் போல விவரித்த விதம் வசீகரிப்பு மிக்கதாக இருந்தது . சமகாலத்தில் சில படைப்பாளிகளின் மீது ஏனோ சரியாக

இந்து விரோத மனப்பான்மை

Image
இந்து விரோத மனப்பான்மை இந்து மதம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்,வழிபாடுகள் போன்றவற்றைப் பற்றிய விமர்சனங்கள் எழும்போது இங்குள்ள முற்போக்கு முகமுடியணிந்த கிறிஸ்தவர்களும் ,முஸ்லீம்களும் கூட்டு சேர்ந்து தாக்குகிறார்கள்.அந்த இனிய தருணங்களுக்காகக் காத்திருக்கிறார்கள். அதற்காகத்தான் அவர்கள் முற்போக்குகளாக இருக்கிறார்களோ ? என சந்தேகிக்கும் அளவிற்கு.எனக்கு  இந்து சமயம் சார்ந்த நிறுவனங்களில் விமரிசனம் இல்லாமல் இல்லை.ஆனால் கிறிஸ்தவர்கள்,முஸ்லீம்கள் ஆகியோரிடம் இருந்து இத்தகைய சந்தர்ப்பங்களில் வெளிப்படும் காழ்ப்புணர்ச்சி நெருடலாக இருக்கிறது.நிறுவனங்களில் ஏற்படும் சிக்கல்கள் ,இடர்பாடுகள் எல்லா மதம் சார்ந்த நிறுவனங்களிலும் உண்டு.இஸ்லாமிய ,கிறிஸ்தவ நிறுவனச் சிக்கல்கள் வரும்போது இந்துக்கள் இவ்வளவு தூரத்திற்கு தங்கள் முற்போக்கு அங்கியுடன் வந்து மோதுவது குறைவு என்றே கருதுகிறேன். அமிர்தானந்தா பற்றி ,பங்காரு பற்றி இன்னும் பலரைப் பற்றி தொடர்ந்து வேற்று மதத்தினர் காட்டுகிற தாக்குதல் ஆர்வம் ஒரு நோய்க்குறி என்பதில் சந்தேகமே இல்லை.ஒவ்வொரு விதமான மத பிரிவுகளும் அதனதன் தளத்தில் சில பங்களிப்புகளை செய்து கொண்டிர

தமிழ்நாட்டு மாணவர்கள் பரிசோதனை எலிகளா மோடி ?

Image
தமிழ்நாட்டு மாணவர்கள் பரிசோதனை எலிகளா மோடி ? மார்ச் ஒன்றாம்  தேதியுடன் நீட் நுழைவுத்  தேர்விற்கான விண்ணப்பிக்கும் கால வரையறை ,கெடு  முடிகிறது.இன்னும் மீதம் இருப்பவை ஏறக்குறைய பத்து நாட்கள்.இதுவரையில் மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஒரு பதிலும் சொல்லவில்லை.மாநில அரசாங்கம் சட்டசபையில் நீட் தேர்வை எதிர்த்து மசோதா  நிறைவேற்றியதுடன் அதனை முன்னோக்கிச் செலுத்த ஏதும் காரியங்கள் செய்யவில்லை.மருத்துவப்படிப்பை விரும்பும் தமிழ்நாட்டு கிராமப்புற மாணவர்களும் அவர்தம் பெற்றோரும் அடைந்திருக்கும் குழப்ப நிலைக்கு யார் பொறுப்பு ? இந்த மாணவர்களுக்கு இந்த காலம் மீண்டும் ஒருமுறை திரும்பி வருமா என்னா ? இரண்டு விபரங்களை அறியத் தருகிறேன்.மருத்துவப் படிப்பில் சேர விரும்புகிற ஒரு தமிழ்நாட்டு மாணவன் நீட் நுழைவுத் தேர்வின் அடைப்படையில் செல்ல வேண்டுமாயின் அதற்கு அவன் படிக்க வேண்டிய ,பயிற்சி எடுக்க வேண்டிய முறை வேறு. மாநில பாடங்களில் அவன் அதிக அக்கறை செலுத்த வேண்டியதில்லை.ஐம்பது விழுக்காடு பெறுவதற்கான உழைப்பை மாநில பாடத்திட்டத்தில் செலுத்தி விட்டு நீட்டுக்கான சி.பி.எஸ் .சி பாடத்திட்டத்தை அவன் பூரண ம

"எனது பூர்வீகம் இங்கில்லை" சமீபத்திய கவிதைகள்

Image
"எனது பூர்வீகம் இங்கில்லை" சமீபத்திய கவிதைகள் 1 பத்து முகங்களில் ஒன்றை பதுங்கு குழிக்குள் ஒளித்து வைத்தேன். வெண்ணை திருடிய முகத்தை அது வேவு பார்த்தது பையில் வைத்திருந்த முகம் கையில் வைத்திருந்த முகம் இரண்டும் நான் சொல்லிக் கொண்டு திரிந்த என் முகம் பார்த்து சிரித்தது பழிவாங்கலில் சிரிக்கும் முகம் அதற்கு காரணங்கள் பேசிய முகத்துக்கு களபம் பூச சந்தனத்தைத் தோலுரித்துக் கொண்டு வெளியேறியது பூதமுகம் கண்ணாடி போட்டுக் கொண்டு காட்சி தருகிற என் முகத்துக்குத் தெரியும் கண்களே இல்லாதது பத்தாவது முகம் என்று ஆகமொத்தம் பத்து முகம் பத்து முகம் மறைக்க இப்போது பதினொன்றாவது ஒரு முகமூடி என் சட்டை பொக்கட்டில் இருக்கிறது சரட்டுத் திரி காட்டாமல் போ.. போயிருந்தது விளக்கெண்ணெய் பூசிக்கொள் பொலிவானாலும் ஆகலாம் உந்தன் திருமுகங்கள். 2 நான்கு வழிச் சாலையில் எனது மோட்டார் சைக்கிளில் கைநடுங்குவது எனது தவறில்லை அய்யாவே அந்த சாலையில் கீறி உள்ளே உள்ளே பாருங்கள் திறந்து , அங்கேயிருக்கிறது நான் செல்ல வேண்டிய சொகுசுப் பாதை , சுற்றிலும் செந்தெங்கிளநீர் கண்டீரோ பூவரசில் பீப்

காதல் என்பது சுயத்தின் தெளிந்த விழிப்பு நிலை.

Image
காதலர் தின நல்வாழ்த்துக்கள் காதல் என்பது சுயத்தின் தெளிந்த விழிப்பு நிலை. அடைதல் தொடர்பான விஷயம் இல்லை .பருவத்தின் பரவசமும் இல்லை.பயமும் இல்லை.சந்தேகித்தலும் உடமை மோகமும் இல்லை.பொறுப்பெடுத்துக் கொள்ளுதலும் இல்லை.பொறுப்பெடுத்துக் கொள்ளுதலின் பெயர் அமைப்பு, குடும்பம் .கூட்டு சேர்ந்து வாழ்தலும் இல்லை. உணர்தலே அது.ஈடுபடுதலே அது. அகத்தின் புற ஊற்று காதல்.புறத்தை உயிரால் ஈடு செய்தல்.. காதலே கர்மாவின் பயன் மதிப்பு.காதலின்றி உயரிய காரியங்கள் ஏதுமில்லை. நமது சமூகம் பெரும்பாலும் காதலை பருவங்களின் பரவச உணர்வு என அர்த்தம் கொள்ளப் பார்க்கிறது.அடைதலை நோக்கி அது நகர வேண்டும் என முயற்சி செய்கிறது.அடைதலில் கொள்ளும் இடர்பாடுகளை துயரங்களை அது பாசாங்கு செய்கிறது. இணை சேர்தலும் வசப்படலாம்.அப்படியாயின் நன்று ஒரு பறவையைப் போன்ற கதி நிலையில். .ஆனால் ஒன்றில் மட்டும் இணை சேர்தல் அல்ல காதல் .புறம் அத்தனையிலும் இணை சேர்தல் .புறஉலகின் உயிர் ஊற்றுடன் கொள்ளும் தொடர்பிலிருந்து ஒன்றைப் பற்றி கொள்ளுதலாகவும் இருக்கலாம். கலையை , கவிதையைப் பற்றிக் கொள்ளுதலைப் போல. நமது அர்த்தங்கள் பொருட்களில் இணை சேர்தல் என்கிற கற்பிதம்

இந்த வழக்கை ஏன் இப்போது எடுக்கிறீர்கள் ; இதன் பெயர் உள்நோக்கம் இல்லையா ?

Image
இந்த வழக்கை ஏன்  இப்போது எடுக்கிறீர்கள் ; இதன் பெயர் உள்நோக்கம் இல்லையா ? இந்த வழக்கின் ஆவணம் ஜெயலலிதா எதிரி என்று சொல்கிறது.அவர் மறைந்து காயம் இன்னும் ஆறியபாடில்லை.அவர் விடுதலையான வழக்கும் கூட இது.பின்னர் மேல்முறையீட்டில் பேரில் தேதி   குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்ட வழக்கு . பொதுவாக தேதிக் குறிப்பிடப்படாமல் ஒத்தி  வைக்கப்படும் வழக்குகளை தேர்வு செய்வது நீதிமன்றம் மட்டுமே என்றால் ,அதனை நோயுற்ற குரங்கிடம் போய் சொல்வதே நலமானது .இப்படி தேதி குறிப்பிடாமல் முடங்கியிருக்கும் வழக்குகள் இந்தியாவில் இன்றைய தேதியில் எத்தனை இருக்கும் ? தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படும் வழக்குகள் பொதுவாக உடனடி தீர்வுகள் எட்டமுடியாமல் காலத்தை இழுக்கும் தன்மை கொண்டவை என்பது நீதிமன்றங்களின் மறைமுக பொருள் .இந்த வழக்கோ ஜெயலலிதாவை முதல் எதிரியாகக் கருதும் வழக்கு .இதனை இந்த நேரத்தில் எடுப்பதற்கு என்ன அவசியம் வந்தது ? நீதிபதிகளும் நீதிமன்றங்களும் அரசியல் நடைமுறைகளில் அலைவரிசைக்கு ஏற்ப இந்தியாவில் மாற்றம் பெறுவது நிச்சயமாக ஒரு நல்ல அறிகுறியல்ல.இது போன்று நடைமுறைக்கு வருகிற செயல்கள் யாரை வேண்டுமானாலும் எப்போத

சசிகலாவை ஏன் ஆதரிக்க வேண்டும் ?

Image
சசிகலாவை ஏன் ஆதரிக்க வேண்டும் ? இரண்டு காரணங்கள் பிரதானமானவை.முதலில் அ.தி.மு.க என்ற கட்சி காப்பாற்றப்பட்டாக வேண்டும்.அது வெற்றிடமாகக் கூடாது.அப்படியொரு வெற்றிடம் ஏற்படுமேயானால் அதுவே இப்போது பிளவை ஏற்படுத்துபவர்களின் ஆசையில் இருக்கிறது.அந்த வெற்றிடத்தில் தங்களைப் பொருத்திக் கொள்ள முடியும் என நினைப்பவர்களின் ஆசை பலிக்கக் கூடாது.பா.ஜ.க இப்படியொரு முயற்சியை எடுத்துக் பார்க்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.பன்னீர் அவர்களுக்குத் தோதான ஒரு நபராக தற்போது அவர்களுக்குத் தென்படுகிறார்.பன்னீரை முதன்மைப்படுத்தி மாநில அதிகாரத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று பா.ஜ .க கருதுகிறது. பா.ஜ.க தமிழ்நாட்டை தங்கள் கைவசம் கொண்டுவந்தாலும் எனக்கு அதில் ஒன்றுமில்லை.ஆனால் வெறும் வெற்றிடம் நிரப்பிகளாக அவர்கள் இங்கே வந்து சேரக் கூடாது.ஜனநாயக ரீதியில் இந்த இடத்திற்கு அவர்கள் வர வேண்டுமே அல்லாது இது போன்ற குறுக்குவழிகளில் அவர்கள் வரக் கூடாது.இந்தியாவின் பல மாநிலங்களில் பா.ஜ.கவின் இந்த குயுக்தி பற்றிய விமரிசனங்கள் உள்ளன.அகிலேஷ் யாதவ் போன்றவர்களும் ஏற்கனவே இந்த குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார்கள

பின்னிருந்து இயக்குபவனின் பெயர்தான் கடவுள்.

Image
பின்னிருந்து இயக்குபவனின் பெயர்தான் கடவுள். தூய அரசியல்வாதிகள் பற்றிய கற்பனைகள் எனக்கில்லை.அப்படியொருவர் உளரேயாயின் அவரை நான் விரும்பவில்லை.அவர் பற்றிய புனித உருவங்களை உருவாக்குபவர்களின் , உள்ளீடுகளின் பூதகணங்கள் அச்சுறுத்தக் கூடியவை.ஏனெனில் அப்படியொருவர் இன்று சாத்தியமாயின் அதுபோன்ற பெரும் பொய் ஒன்றிருக்க இயலாது.இன்றைய எதிர்பார்ப்புகள் ஓரளவிற்கு ஐம்பது சதமானம் காலத்தின் தொடர்பில் இருக்கிறாரா என்பதை பற்றியதுதான். அப்படியொருவர் இருந்ததாக பலரும் தங்கள் நினைவில்  பேசிக் கொண்டிருக்கிறார்கள்.அவர் நினைவில் இருக்கிறார் என்பதே உண்மை.அவருக்கு கால்கள் கிடையாது. அப்படியொருவர் இருந்தால் எப்படியிருக்கும் ? .அவருக்கு கால்கள் இல்லாதிருக்கும் .அன்றாடத்துடன் தொடர்பற்ற கற்பனைகளை முன்வைக்கும் போது பெரும்பாலும் பிற உருவங்களில் ஒப்படைக்க தயாராகி விடுகிறோம்.பொறுப்பெடுக்க தயாரில்லை என்பதை உணர்த்துகிறோம்.தூய கற்பனைகளை வைத்துப் பூட்டுவதற்கு ஒரு அரசியல் உடல் தேவைப்படுகிறது.இந்த சமர்த்தான கற்பனை என்னுடைய தாத்தா நோயற்றவராக இருந்தார் என்பதைப் போன்றதுதான்.உப்பு சப்பில்லாதது.அப்படியொருவர் வாய்த்தால் நமது பொற

நிழற்தாங்கல் – லக்ஷ்மி மணிவண்ணனின் புதிய முயற்சி -ஜெயமோகன்

Image
நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளி ஜெயமோகன் ,கோணங்கி,நாஞ்சில் நாடன் ,யூசுப் மற்றும் வந்திருந்து வாழ்த்திய படைப்பாளிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி  .உறுதுணையாக இருக்கும் பால பிரஜாபதி அடிகளார்,கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பாளர் G  .தர்மராஜன் I  .P  .S ,அருட்பணி M .C .ராஜன் ஆகியோருக்கு எங்கள் வணக்கங்கள். நிழற்தாங்கலில்  வந்திருந்து தங்கி தங்களுடைய படைப்பு முயற்சிகளை செய்ய விரும்புபவர்கள் எங்களைத்  தொடர்பு கொள்ளுங்கள்.மது,போதை  பழக்கம் கொண்டவர்களுக்கு அனுமதியில்லை.மது ,போதை ,பழக்கத்திலிருந்து விடுபட நினைக்கும் எண்ணம் கொண்ட படைப்பாளிகளுக்கு எங்களால் உதவ முடியும்.பழக்கத்திலிருந்து விடுவித்து நிழற்தாங்கல் அவர்களை இணைத்துக் கொள்ளும். எங்களுடன் இந்த பணியில் உடன் நிற்கும் ,நிற்கவிருக்கிற நல்ல உள்ளங்களுக்கு எப்போதும் கடன்பட்டிருக்கிறோம்.லக்ஷ்மி சாகம்பரி ,மணி சேஷன்,ஈஸ்வரன் , கால பைரவன் ,சரவணன் சந்திரன் , ஜீனத் நஜீபா ஆகியோருக்கு எங்கள் நன்றி தொடர்புக்கு ; லக்ஷ்மி மணிவண்ணன் , செயலாளர் ,நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளி C  /O  மதுசூதன பெருமாள் , 7  / 131  E பறக்கை @ அஞ்சல் கன்னியாகுமரி மாவட

அ .தி .மு.க என்னும் பேரியக்கம் உடைவது நல்லதல்ல.

Image
அ .தி .மு.க என்னும் பேரியக்கம் உடைவது நல்லதல்ல. அப்படி உடைந்தால் அது தி.மு.கவிற்கும் கூட நல்லதல்ல.இந்த இரண்டு கட்சிகளுக்கும் அதிக வயசும் ,அலுப்பும் ஆகிவிட்டது என்பது உண்மைதான்.இவை இரண்டுமே நல்ல கட்சிகள் என்கிற எண்ணமும் எனக்கு இல்லை.ஆனால் நமது ஏற்பட்ட அல்லது ஏற்பாட்டுக்கு கொண்டிருக்கும் சமூக உளவியலின் அடிப்படையிலேயே இவை உள்ளன.சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்  ?  ஒப்பீட்டளவில் வேறு வாய்ப்புகள் நமக்கு இல்லை என்பதே நிதர்சனம்.தவிர உள்ள கட்சிகளில் விடுதலைச் சிறுத்தைகளை தவிர்த்து பொருட்படுத்தத் தகுந்த கட்சிகளும் இல்லை.திருமாவளவன் நல்லதொரு தலைமைக்கு ஏற்றவர்தான் ஆனால் அவர் இன்று அனைத்து தரப்பினராலும் ஏற்கப்படக்கூடிய தலைவர் இல்லை.அவர் தலைமையில் இடதுசாரிகளும் இணைந்து ஒரு அணியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளும் தற்போது இல்லை.இடதுசாரிகள் அதற்கு இணங்கவோ , முயலவோ மாட்டார்கள்.காரணம் எளிமையானதுதான்.இடதுசாரிகள் தமிழ்நாட்டில் அரசியல் அதிகாரத்தில் எடுபிடிகளாக இருந்தே பழகி விட்டார்கள்.புதிய பழக்கங்களுக்கு அவர்கள் வந்து சேர இன்னும் ஐம்பதாண்டு காலங்கள் ஆகும் .அதற்குள் நமது பிள்ளைகள் பேரன்பேத்தி கண்

ஓ ... வேலைக்காரியா வரட்டுமே !

Image
ஓ ...  வேலைக்காரியா வரட்டுமே ! எதிராளிக்கு வாக்கு சேகரிப்பது எப்படி ? சசிகலா வரும் தேர்தலில் வெற்றி பெற பரப்புரை தொடக்கி விட்டது. சசிகலா ஒரு வேலைக்காரியா ? அப்படியானால் அதுதானே நல்லது.மக்களுக்கு வேலை செய்வதற்குத்தானே இங்கே ஆட்களும் அதிகாரமும் வேண்டும் ? வேலைக்காரி என்று திட்டும்போது மக்கள் இப்படி மாற்றி சிந்திப்பார்கள் என்பது கூடவா உங்களுக்கெல்லாம் தெரியவில்லை ? எதிராளிக்கு வாக்கு சேகரிப்பது எப்படி என்பதை இவர்களிடம்தான் கற்க வேண்டும் ? பாலியல் வசைகள் ,வேலைக்காரி பட்டங்கள் என்று சசிகலாவுக்கு ஆதரவாக மக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணி இனிதே தொடங்கியிருக்கிறது.இப்படியே போனால் தமிழ் நாட்டில்  அடுத்தடுத்து வருகிற இரண்டு தேர்தல்களை சசிகலா அடைத்து நிற்பார் என்பதில் சந்தேகமே இல்லை.கீழிருந்து வருகிறார்கள் என்கிற கோணத்திலோ அல்லது தகுதியற்று வருகிறார்கள் என்கிற கோணத்திலோ விமர்சனங்கள் வருமாயின் மக்கள் அந்த தரப்பே தங்களுக்குகந்தது என்று தேர்வு செய்வார்கள்.மக்களுக்கு எல்லோருடைய தகுதிகளும் தெரியும். பொதுவாக இது போன்ற ஒரு அணுகுமுறையை சாதாரணமானவர்கள் சொல்லும் போது அதில் காரியமில்லை.ஸ்டாலின் போ

நிழற்தாங்கல் விருதுகள் - 2017

Image
நிழற்தாங்கல் விருதுகள் - 2017 இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழில் கலையிலக்கியத் துறைகளில் வாழ்நாள் சாதனைகள் புரிந்த அரிய ஆளுமைகளுக்கு நிழற்தாங்கல் விருது வழங்க முடிவு செய்திருக்கிறோம்.நிழற்தாங்கல் விருதுகள் - 2017 கவிதை ,புனைகதை ,பிற கலைவடிவங்கள் என மூன்று விருதுகளை உள்ளடக்கியது.பிற கலை வடிவங்கள் ஓவியம்,நடனம்,இசை ,சினிமா ,நாடகம் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டது.மூன்று விருதுகளும் ஒரே சமயத்தில் "நிழற்தாங்கல் விருதுகள் - 2017 "  கலையிலக்கிய  விழாவில் வழங்கப்படும். துறை சார்ந்த நிபுணர்கள் தங்கள் பரிந்துரைகளை உரிய காரணங்களுடன் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். எங்கள் செயல்களில் நம்பிக்கை கொண்டோர் எப்போதும் போல எங்களுக்கு துணை நில்லுங்கள்,பங்கேற்பு செய்யுங்கள் .எல்லோரும் இணைந்தால்தான் ஏதேனும் செய்ய இயலும் . தொடர்புக்கு - லக்ஷ்மி மணிவண்ணன் , C / O மதுசூதன பெருமாள் , செயலாளர் ,"நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளி" , 7  / 131 E பறக்கை @ அஞ்சல் கன்னியாகுமரி மாவட்டம் 629002 தொடர்பு எண் - 9362682373

கோணங்கி ,நாஞ்சில்நாடன்,ஜெயமோகன் மற்றும் பல படைப்பாளிகளுடன்

Image
சந்திப்போம் வாருங்கள் கோணங்கி ,நாஞ்சில்நாடன்,ஜெயமோகன் மற்றும் பல படைப்பாளிகளுடன் "நிழற்தாங்கல் திறப்பு விழா படிகம் நூல்கள் வெளியீட்டு விழா" இடம் - பறக்கை [அரசு நடுநிலைப்பள்ளி அருகில், நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மணக்குடி செல்லும் பேருந்தில் 15 நிமிடம் பறக்கைக்கு தனியே மினி பஸ் உண்டு.] கன்னியாகுமரி மாவட்டம் காலை 9 மணி முதல் 12 மணிவரை தொடர்பு எண் - 9362682373

நீட் எதிர்ப்பு மசோதாவிற்காக பன்னீர்செல்வம் அவர்களுக்குப் பாராட்டுக்கள்

Image
நீட் எதிர்ப்பு மசோதாவிற்காக பன்னீர்செல்வம் அவர்களுக்குப் பாராட்டுக்கள் நிறைய வாய்ப்பேச்சில் பேசிக் கொண்டிருப்பதைக்  காட்டிலும் சாமர்த்தியமாக செயல்களில் ஈடுபடுவது சிறந்தது.ஒரு சாதாரணனின் தன்னடக்கத்துடன் பன்னீர் செல்வம் சில காரியங்களை முன்னெடுப்பது தமிழ்நாட்டிற்கு புதிய வகை. நாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் சாதுர்யமாக சில காரியங்களை சாதிப்பதை ஒப்ப மத்திய அரசிடம் காரியங்களை சாதிக்க முயல்கிறார் . பொதுவாக குறைபாடு என பலர் கருதுகிற அவருடைய சுபாவத்தில் ,இந்த தன்மை இப்போது சாமர்த்தியமாக மினுங்குகிறது. NEET  CBSE என்றுதான் இந்த தேர்விற்கான  விண்ணப்படிவமே உள்ளது.அப்படியானால் இது CBSE  மாணவர்களுக்கு மட்டுமே உரிய தேர்வுதானே ? ஸ்டேட் போர்டில் பயிலும் மாணவர்கள் மருத்துவப் படிப்பிறகு தகுதியற்றவர்களா ? என்பதை முதலில் இந்த தகுதி பேசும் அறிஞர்கள் விளக்கட்டும். நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு அரசு சட்டசபையில்  கொண்டு வந்துள்ள மசோதாவை அனைவரும் ஒருங்கிணைந்து சாத்தியமாக்க வேண்டும்.கல்வி , உயர்கல்வி ஆகியவை மாநிலங்களில்   இருந்து துண்டிக்கப்படுவதும் , மத்திய அரசாங்கத்திற்கு தாரை வார்க்கப் படுவது