Posts

Showing posts from September, 2016

தூய்மைவாதத்தின் மீதான மக்கள் கவர்ச்சி

Image
பாசிசத்தின்,தூய்மைவாதத்தின் மீதான மக்கள் கவர்ச்சி ஓராண்டோ ஒன்றரை ஆண்டோ இருக்கும் இந்த கட்டுரையை எழுதி.தி இந்து நாளிதழில் வேறொரு தலைப்பில் இது வெளி வந்தது .நிறு வனங்களின் இறுக்கத்தின் காரணமாகவோ அல்லது அரசின் செவி கேளாத்தன்மை காரணமாகவோ மக்களிடம் பாசிசத்தின் மீதான கவர்ச்சி ஏற்பட்டிருப்பதை உணர்கிறேன் .அமர்த்தியா சென்னும் இது போன்ற தன்மை கொண்ட ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.ஏகதேசம் அவரும் இந்த கட்டுரையிலிருப்பதைப் போன்ற கருத்தையே முன்வைக்கிறார். அரசின் செவிகேளா தன்மை காரணமாக தூய்மையை இலக்காகக் கொண்ட தனிமனித ஆளுமைகள் அவதார புருஷர்களைப் போன்று தோன்றி தங்களின் தரப்பில் நீதியை நிலை நிறுத்த வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள்.ஆனால் இத்தகைய நீதியை நிலை நாட்டவருகிற தனிமனித ஆளுமைகளும்,தூய்மைவாதிகளும் தான் சகலத்தையும் சுதந்திரத்தையும் முடக்கக் கூடிய பாசிசத்தை நோக்கி மக்களை நகர்த்தக் கூடிவர்கள் என்பதை அவர்கள் அறிவதில்லை.அறிய வைக்கவேண்டிய அறிவுஜீவிகளும் இங்கே தொழில் படவில்லை என்பதே வேதனைக்குரியது.இன்றைய தினத்திலும் இதற்கு இருக்கும் பொருத்தப்பாடை முன்னிட்டு இந்த கட்டுரையைப் பதிகிறேன் .அரசின் செயல்ப

வீரலட்சுமி

Image
வீரலட்சுமி யோனி தைத்தடைத்த இடத்திலிருந்து முளைத்துப் பரவியதொரு வீரலட்சுமி கோயிலில் நகரத்து மக்கள்  பொங்கலிட்டார்கள் மந்திரம் ஜெபித்தார்கள் சுற்றி வந்தார்கள் சுற்றி வருபவர்களால் குடை ராட்டினமாய் சுற்றிக் கொண்டிருந்தது கோயில் . யோனி தைக்கப்பட்ட இடங்களில் பெருகுகிற பிற அம்மன்கள் ஜொலிக்க சந்தனக் காப்பு ரூ 350/- மக்கள் நெரித்த பஜனைகள் ஆராதனைகள் அபிஷேகங்கள் மணியொலிகள் பெரிய பூட்டுடன் , விலகி நின்ற இரும்புக் கதவின் எதிரில் வாய் பூட்டப்பட்ட உண்டியல்குடம் மனம் பிறழ்வான உடலாய் சங்கிலியில் பிணைந்து கிடந்தது சிறிய கம்பித்தூணில். அம்மனின் தட்டத்தில் யாரேனும் கைவைத்து விடக் கூடும். நுழையக் கூடாதவர்களின் வரவைக் கண்காணித்து நிற்கும் கண்கள் துப்புரவுப் பணிகளை மேற்பார்வை செய்கின்றன நகரம் இந்த முறை நவீன பளிங்கறையின் மணிச்சத்தத்திலிருந்து தொடங்குகிறது. நீதிபதிகளும் சிறைக் காவலர்களும் பத்திரிக்கைக்காரர்களும் மனநல மருத்துவர்களும் பணிக்குக் கிளம்புகிறார்கள் . கர்ப்பக் கிரகத்திலோ யோனி தைக்கப்பட்ட அம்மன் கால்விரித்து வேதனிக்கிறாள் புட்டம் காட்டித் திரும்பி உள் எழுந்து நின்று தைக்கப்பட்ட யோனியை வ

தொடர்வண்டியில் தொங்கும் இளவரசி

Image
தொடர்வண்டியில் தொங்கும் இளவரசி ஆடும் கைப்பிடிகளிரண்டினிடையே உடலைக் கோர்த்துத் தொங்கவிட்டபடி ஆடிக் கொண்டிருக்கிறாள்  தொடர்வண்டியில் தொங்கும் இளவரசி நள்ளிரவில் புறப்படும் புறநகர் தொடர்வண்டியில் உடல் தொங்காத கைப்பிடிகள் இளவரசிகளுக்காக ஆடியபடி காத்திருக்கின்றன . புலப்படாத இளவரசிகள் ஒருவேளை அந்தக் கைப்பிடிகளில் உடலைக் கோர்த்திருக்கக் கூடும் கடவுள் பயணிக்கும் நள்ளிரவில் ஆளற்ற இருக்கைகளிலிருந்து பயணிக்கிறார்கள் அவர்களின் காதலர்கள். இளவரசிகளைக் கவர்ந்திழுக்க வேண்டிய காதலர்களின் கண்கள் உள் திருங்கியிருக்கின்றன கடக் கடக் ஓசையுடன் தொங்கியபடி பயணிக்கும் இளவரசியின் நதியில் தேய்ந்த வரி படர்ந்த வெள்ளையுடலில் கருங்கல் சிற்பமாய் கரிய யோனி விலா எலும்புகள் துருத்திய மார்பில் சதையற்றுச் சப்பிய முலைகள் உலர்ந்த திராட்சை முலைக் காம்புகள் சிற்ப யோனியை சதைக்குறிகளால் முட்டி நெரிக்கும் நிகழ்காலம் தூங்கும் வேளையில் இளவரசி பயணித்துக் கொண்டிருக்கிறாள் தொடர்வண்டியில் பொருட்களின் அறையில் திரிசடையோடும் ,கருத்த பாசி படர்ந்த உடலோடும் சிற்பக்குறி வெளித்தெரிய அவளது காதலன் தூங்

கல்குதிரை- 26,27

Image
தமிழ் கலாச்சாரத்தின் மெய்யான முகம் "கல்குதிரை". தமிழ் கலாச்சாரத்தின் மெய்யான முகம் கல்குதிரை.கழிந்த முப்பதாண்டு காலமாக கல்குதிரை தொடர்ந்து சூழலில் தாக்கம் ஏற்படுத்தி வருகிற இதழ்.அதன் உச்சபட்ச சாத்தியத்தை இப்போது வந்திருக்கும் இரு இதழ்களும் கொண்டிருக்கின்றன.இன்னும் இருபது ஆண்டுகளுக்கு தமிழில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிற இதழ்கள் இவை. இதற்கு மேலாகவும் இங்கொன்றும் இல்லை . இதற்கு குறைவானதும் இங்கில்லை.கல்குதிரையே மேம்பட்ட தமிழின் தரம்.குறைந்திருப்போர் இதன் உயரத்திற்கு மேலெழும்பி வரவேண்டும்.இதனினும் மேலென்போர் இதழின் புதிய முயற்சிகளுக்கு திருவருட்கொடை செய்யலாம். கல்குதிரையின் தற்போதைய இரண்டு இதழ்களும் தமிழின் அத்தனை பொய் முகங்கள் பேரிலும் சூடு வைத்திருக்கிறது.தடம் , படம்,பாம்படம்,காலச்சுவடு ஓலை சுவடு , உயிர்மை மறுபிறப்பு , தீராநதி வைகை போன்ற இடைநிலைப் பரிவாரங்கள் , அத்தனை பொய் முகங்கள் பேரிலும் எடுக்கப்பட்டிருக்கும் மாயா நடவடிக்கை இது. தனி மனிதனாக நின்று ,நிறுவனங்கள் எதனுடனும் கைகோர்க்காது கோணங்கி ஆற்றிவரும் பணி வியத்தலுக்குரியது.பிறராலோ,நிறுவனங்களாலோ,பல்கலை புலங்களாலோ சா

தீச்சட்டி

Image
தீச்சட்டி அவர்கள் இப்போது தனியே இருக்கிறார்கள். அவள் ஸ்கூட்டிப் பெப்பில் மார்க்கெட்டுக்கு வருகிறாள் அவனது நள்ளிரவு போஜனம் புரோட்டா கடையில்  தாறுமாறாக நடைபெறுகிறது. அவன் உண்பது போலில்லை பலவந்தம் அவர்கள் பிரிந்து விட்டார்கள் எனினும் அவள் ஸ்கூட்டிப் பெப்பில் அவனும் உடன் வருவது போலவே இருக்கிறது அது அவன் மனநிழல் . அவனுக்குப் பிடித்தமான மீன்களை அவள் வாங்கிச் செல்கிறாள் அவனுக்கு பிடித்தமான ஆடைகளையே உடுத்துகிறாள். அவன் சொற்படிதான் நடந்து கொள்கிறாள் அவனுக்கோ அவள் சிந்தை மீற இயலாதது இருவரும் அபூர்வமாக சந்தித்துக் கொள்கையில் சம்பிரதாயமாகச் சிரித்துக் கொள்கிறார்கள் வஞ்சினம் உள்ளில் சுழன்றெரிய... யார் கொண்டு வந்து சாய்த்தது? இந்த வஞ்சினத்தில் அவனுக்கோ அவளுக்கோ தொடர்பேதும் இல்லை ஒருவரையொருவர் தெரிவிக்கும் புகார்கள் அவர்களில் நிற்க மறுத்து உதிர்ந்து விழுந்த உதிரியரளியின் வண்ணம் காவு கொண்ட ஊழின் வாசல் வஞ்சினம் தனியே அவர்கள் தனியே என்றுதான் இருவரும் இருக்கிறார்கள் விளங்காத தனிமையில் ... வஞ்சினமாலையை அவர்கள் கழுத்தில் எடுத்து அணிவித்தவர்கள் கண்ணகியா,இசக்கியா, பாஞ்சாலியா ? ஒரு காப்பியமும்

சிலேட் - 15

Image
சிலேட் இதழை புதன்கிழமை முதல் உங்கள் பகுதிகளில் உள்ள புத்தகக் கடைகளில் கிடைக்கச் செய்வோம். ஏற்கனவே நினைத்துக் கொண்டதற்கிணங்க திருவட்டார் நரசிம்மர் சந்நிதியில் சிலேட் -15 வைத்து இதழை இன்று வெளியிட்டோம்.சிலேட் இதழில் இந்த இதழ் முதற்கொண்டு தன்னையும் ஆசிரியராக நியமித்துக் கொண்ட சுதாகர் கமிலஸ் இதழினை வெளியிட எனது பள்ளிக்காலம் தொட்டு உடன்வரும் , உடன் நிற்கும் எனது நண்பர் தமிழ்செல்வராஜ் பெற்றுக் கொண்டார். சுதாகர் கமிலஸ் சுந்தர ராமசாமியின் நெருங்கிய நண்பர்.சு.ராவிடம் இருந்து நாங்கள ் உத்தரவு பெற்று வெளியேற்றிக் கொண்ட காலத்தின் பின்னிருந்து அவரின் நண்பராக வெகுகாலம் பழகியவர்.மாறிவரும் காலத்தின் மீதான கூர்மையான அவதானிப்பும்,தேடலும் நிரம்பியவர்.நவீன அறிவுப்புலங்களின் பால் படைப்புப் பார்வைகளையும் புறக்கணிக்காது சிந்திக்கத் தெரிந்தவர். அவர் இனி இதழில் என்னோடு இணைந்து பணிபுரிவார்.சிலேட் இதழ் கண்ணோட்டங்களில் புத்துணர்ச்சியுடன் இருக்க அவர் பெரிது உதவி புரிவார் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. சிலேட் இதழின் இரண்டாவது கால கட்டம் இது.நாங்கள் எங்கள் பிழைகளை திருத்திக் கொள்ள,பற்றுறுதிகளில் மேம்பட எ

"விசாரணை" - வெற்றிமாறன்

Image
"விசாரணை" தமிழில் நவீன சினிமாவின் தொடக்கம். எந்த காரியம் தமிழில் இல்லையென்று விமர்சனங்கள் வாயிலாகவும் ,ரசனை வாயிலாகவும் குறைபட்டுக் கொண்டிருக்கிறோமோ அந்த காரியம் நிகழும் போதும் அதனைக் கொண்டாடவேண்டியதும் முக்கியமானது.விசாரணை தமிழில் நவீன சினிமாவின் தொடக்கம்.இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. இந்த சினிமா நாயகனின் இடத்தில் அமைப்பையும் , உள்ளடக்கத்தையும் பார்வையாளனின் முன் வைக்கிறது.இது யதார்த்தத்தைப் போல பாவனை செய்யும் ஒரு நவீன சினிமா.தனது புனைவு சாத்தியங்களில் இருந்து அமைப்புகளின் கட்புலனாகாத் தன்மைக்குள் நகர முயற்சி செய்யும் சினிமா. யதார்த்தத்திலிருந்து அமைப்பின் உட்கண்ணிகளுக்குள் பயணம் செய்வதை யதார்த்தவகை இலக்காகக் கொண்டிருப்பதில்லை.யாதார்த்தத்தைச் சித்தரிப்பதில் நிறைவடைவது அது.விசாரணை யதார்த்தவகை சித்தரிப்பிலிருந்து அமைப்பின் கட்புலனாகாத் தன்மைக்குள் பயணிக்க முயல்கிறது. அதனாலேயே அது நவீன தமிழ் சினிமாவாக உருமாறுகிறது. உட்கண்ணிகளை நோக்கி பயணம் செய்ய முயலுதல் நவீனத்தின் குணம்.இது தமிழ் சினிமாவில் சாத்தியமாகியிருப்பது எதிர்பாரா விந்தை.இதற்காகவே கொண்டாடப் படவேண்டியவர் வெ

யுத்தத்தின் உடல் அறிதல் BOX

Image
யுத்தத்தின் உடல் அறிதல் BOX பெட்டி கதைப் புத்தகம் ஷோபாசக்தியின் நாவலை முன்வைத்து... 1 ஷோபா இதுநாள்வரையில் அமைப்புகளின் வதைப்பண்பு கொண்ட பிறிதொரு முகத்தை தெரிவிப்பவராக இருந்தார்.தேசிய இன அரசாங்கங்களின் அமைப்புகளில் இடம்பெறும் வதைகளுக்கு இணையாக இன விடுதலை அமைப்புகளின் மனிதவதைகளையும் அவரது படைப்புகள் முன்வைத்தன.ஒன்றுக்கொன்று இரண்டு தரப்புகளும் சளைத்தவை அல்ல என்பதைக் கலைஞனின் கண்கொண்டு காண வைத்தவை ஷோபாவின் படைப்புகள் .நாம் ஏற்றுக் கொண்டிருக்கிற நம்பிக்கைகளின் உள்ளேயும் இந்த வதையின் வீக்கமும் சாட்சியங்களும் துர்நாற்றங்களும் வீசிய போது நமக்கு ஒரு திகைப்பு உண்டானது.அப்படி இருக்க முடியுமா ? நமது லட்சியங்கள் புனிதமானவை அல்லவா? உன்னதம் அல்லவா ? அப்படியானால் மனிதவதையும் அடங்கியதுதானா நமது உன்னத லட்சியங்கள் ! இப்படியான கேள்விகள் அனைத்தையும் கடந்து ஷோபாவின் படைப்புகள் நமது கனவுகளின் உள்ளிருந்த உன்னதங்கள் அழுகி நாற்றமடிப்பவைதான் என்பதைக் கண்டடைந்தன .ஈவிரக்கமற்று உண்மைகளைக் கண்டடைந்த விதத்தில் அவரிடமும் ஏமாற்றத்தின் தொனி ஆரம்பகாலங்களில் வெளிப்பட்டன.உன்னத லட்சியங்களை நம்புவோருக்கு ஏற்படும் சங்கட

அப்பாவாக மாறுதல்

Image
அப்பாவாக மாறுதல் வயதாக வயதாக என்னவாக மாறுகிறோம் என்பதை பொறுத்தே நாம் யார் என்பதும் விளங்குகிறது.உண்மையின் படிமமாக.  சிறுவயதில் பேசிய பல புரட்சிகள் அப்பாவில்  வந்து முற்றுரு பெறுகிறது.அப்பா என்பவர் நடைமுறை என்பதைக் கற்றுணர்த்துகிறது காலம் .அப்பாவைத் தாண்டும் சாத்தியம் உண்டா? சிறுவயதில் தனது அப்பாவைக் கடுமையாக வெறுத்த ஒரு நண்பரிடம் அப்பா தோன்றுவதைக் கண்டபோது ஆச்சரியப்பட்டேன்.கஷ்டமாகவும் இருந்தது. அவ்வளவிற்கு அழகிய குணங்கள் நிரம்பியவாராக இருந்து  பின்னர் அப்பாவாகக் காணுதல் என்பது கடினம் .அப்பாவிடம் புகாராக அவர் எழுப்பிய அத்தனை குணங்களும் ஒவ்வொன்றாக அவர் மீது வந்து வேகமாக ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.இப்படியே போனால் அவர் விரைவிலேயே தாத்தாவாகிப் பின் பூட்டாவாகி விடுவாரோ என்று தோன்றுமளவிற்கு வேகம்.  அப்பாவை எதிர்ப்பதற்காகத் தான் புரட்சிப்படைகளில்  இருந்தார். சமூகப் போராட்டங்களில் பங்கெடுத்தார்.மார்க்சியம் படித்தார்.பக்தீன் வரையில் அறிவார். எல்லாம் ஆனார்.இப்போது அப்பாவின் உரு வெளிப்பட அப்பா வெளிச்சத்தில் இருக்கிறார்.அவரைக் காணவில்லை.எல்லாம் உரிந்து உரிந்து அப்பாவாக கடைசியி

உடலிலிருந்து ஆயுதத்தைக் கழற்றுதல்

Image
உடலிலிருந்து ஆயுதத்தைக் கழற்றுதல் பத்தாண்டுகளுக்கு முன்புவரையில் கையில் எப்போதும் என்னிடம் கத்தி இருக்கும்.அது உடலின் எந்த பகுதியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தாலும் நினைத்த மாத்திரத்தில் கையில் மினுங்கும் விதத்தில் வித்தை சிறுவயதில் களரியாகப் பாடம் பயின்றது.சிறுவயதில் படிக்கும் வித்தைகள் எல்லாம் பின்னர் கைவிட்டு விட்டாலும் கூட, சிறுவயதில் பயிற்சியாக ஒட்டிக் கொள்பவை உடலின் பழக்கமாக நீங்கள் எவ்வளவு உயரிய மயக்க மருந்துகள் உண்டாலும் பொறுக்காது எழும்பவே செய்யும் .எங்கள் ஊரைப் பொறுத்தவரையில் எதேச்சையாகக் கூட நாற்பதிற்கும் குறைவான வயது கொண்டவர்களிடம் மோதி பார்க்காத துணியலாம்.அறுபதுக்கும் மேற்பட்டவர்களிடம் துணியவே கூடாது .அவர்களின் உடல் பழக்கத்தில் களரியும் வர்மமும் ஒட்டிக் கொண்டிருக்க வாய்ப்புண்டு.ஒருமுறை நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் தாக்க முயன்ற பொடியனை கூடுமானவரையில் வேண்டாம் என்று சொல்லி முடிவில் மென்னியைக் கழற்றிய பெரியவரின் வயது எழுபதுக்கும் மேலிருக்கும்.கண்ணால் கண்டவர்கள் விருதோட்டம் பிடித்தார்கள். பழைய தலைமுறையினருக்கு இங்கே வித்தைகள்தான் பேஷன். கத்தியை எடுத்துச் செல்ல முடிய

மேலாளர் வேலை

Image
மேலாளர்  வேலை  ஓட்டுப்புரை ரயில் நிலையத்தின் மோட்டார் பம்பு அறையின் முன்பாக தெரிந்தோ தெரியாமலோ மாட்டிக் கொண்டு குதிரையின் மேலேறி அமர்ந்திருக்கிறார் அந்த சிமெண்ட் அய்யனார் கீழிருக்க பயந்து மேலொடுங்கி இருப்பது போலே குதிரையில் அவர் தோற்றம் அவர் குளித்து பலகாலமிருக்கும் உடனிருந்த ஒட்டுண்டி சாமிகள் தாங்கள் அகன்று சென்ற தடயம் விடாமல் அகன்று விட்டார்கள் அம்மையை மட்டும் பிரிவில் பறித்து இடுப்பில் வைத்த வண்ணம் குதிரையிலேறி அமர்ந்திருக்கிறார் பதினெட்டுப்பட்டியை சுற்றி அரசாண்டு காவல் காத்த அய்யனார். முதிய வேம்பின் பின்மதியம் துணை கழுத்தைத் திருக்கி மங்களூர் எக்ஸ்பிரஸ்  கிழக்கு நோக்கிச் செல்லும் போது கிழக்கு நோக்கியும் குருவாயூர் மேற்கில் நகரும் போது மேற்கு நோக்கியும் கடைசி பெட்டி வரையில் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஏனென்பதெல்லாம் எனக்குத் தெரியாது. உடல்வலிக்கு பாராசிட்டமால் மாத்திரையும் இரண்டுநாள் தூக்கத்திற்கு தூக்கக் குளிகையும் கொடுத்து விட்டு வந்தேன் . தூக்கக் குளிகையை வைத்து நானென்ன செய்ய ? எனக் கேட்டவரை நீண்டகாலம் நானும் இதைத்தானே செய்து கொண்டிருக்க
Image
சிலேட் - 15  அக்டோபர் -2016 காலாண்டு இதழ் பக்கம் 180 தனி இதழ் விலை . ரூ 100 ஆண்டு சந்தா ரூ 400 [ வெளிநாட்டு சந்தா வேறுபடும் ]

மோதல் கொலை போல இது ஒரு தற்கொலைக் கொலை ! ?

Image
மோதல் கொலை போல இது ஒரு தற்கொலைக் கொலை ! ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியை தருகிறது.அரசியல் அதிகார அணுகுமுறைகள் கேவலமான நிலையை தமிழ்நாட்டில் அடைந்திருப்பதற்கு ராம்குமார் தற்கொலை ஒரு பெரிய சாட்சி.தமிழ்நாட்டில் ஆளத் தகுதி கொண்ட தலைவர்களே இல்லை என்பது காலம் செல்லச் செல்ல நிரூபணம் ஆகிக் கொண்டே வருகிறது.அதிகார அமைப்புகளை அரசாங்கத்தினர் அகந்தையின் கொடூர கரங்களால் வதம் செய்து வைத்திருக்கிறார்கள்.இதுபோன்ற நிகழ்வுகளுக்கு இந்த அரசாங்கம் முந்தைய அரசா ங்கம் என்கிற பாகுபாடுகள் எல்லாம் இல்லை .அமைப்புகளின் மீதான ; அரசியல் சார்பு நிலைகளைத் தாண்டிய பரிசீலனையே தற்போதைய அவசியம். அரசு அமைப்புகளின் மலிவான ,மோசமான நடத்தைகளில் நாம் எல்லோருமே திறன்பட பழகிவிட்டோம் என்பதை உறுதிப்படுத்துகிற காரியம் இது.போலி வழக்குகள்,போலி மோதல் படுகொலைகள் இவற்றையெல்லாம் தாண்டி சிறையில் தற்கொலைக் கொலை என்னும் புதிய தொழில்நுட்பத்திற்கு நகர்ந்திருக்கிறோம். உண்மையாகவே அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்த தமிழ் சமூகத்தின் பெரியவர்கள் , சமூக நலம் விரும்பிகள் அரசியல் சார்பின்றி இத்தகைய அவலங்களை ; எதிர்