Posts

Showing posts from November, 2016

சாகித்ய அகாதமி சர்ச்சைகள் - லக்ஷ்மி மணிவண்ணன்

Image
சாகித்ய அகாதமி சர்ச்சைகள் ஒருபோதும் தீராத சர்ச்சைகளை தொடர்வதில் சாகித்ய அகாதமி முதலிடத்தைப் பெற்றுவிடும் என்றே தோன்றுகிறது. தான் வாழும் காலத்தில் சாகித்ய அகாதமி சர்ச்சைகளில் தொடர்ந்து மோதிக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் சுந்தர ராமசாமி. அந்த அமைப்பின் மீது அவர் இரண்டு பராதுகளை மிகக் கடுமையாக முன்வைத்தார். ஒன்று, சாகித்ய அகாதமியின் விருதுகள் வழங்கப்படும் பின்னணியின் வெளிப்படைத் தன்மை குறித்தது; மற்றொன்று, இரண்டாம் தரமான எழுத்தாளர்களுக்கேனும் உரிய முறையில் அவ்விருது சென்றடைய வேண்டும் என்கிற அக்கறை குறித்தது. மோசமான படைப்புகளை விருதுகள் சென்றடைவது, இந்திய மற்றும் உலக அரங்கில் தமிழுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் எனும் கருத்தை அவர் தொடர்ந்து முன்வைத்தார். படைப்பில் மோசம் என்பது அதன் தன்மை மற்றும் தீவிரம் சார்ந்ததேயன்றி ஒருபோதும் நல்லொழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. அதன் வெளிப்படைத்தன்மை திறந்திருக்க வேண்டும் என்கிற சுந்தர ராமசாமியின் கவலை சிறப்பிற்குரியதாகும். இன்றைய தேதி வரையில் அது திறக்கப்படவும் இல்லை. ஒரு மோசமான படைப்பைத் தேர்ந்தெடுக்கும் பின்னணி வெளிப்படையாகத் தெரியும் பட்சத்தில

நிழல் உருவங்கள் - சிறுகதை

Image
நிழல் உருவங்கள் தபால் தலைகள் சேகரிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே செந்தில்குமாரை எனக்குத் தெரியும். இருபது வருடகால பழக்கம் எனக்கும் அவனுக்கும் உண்டு. அதிகமான முக்கியத்துவம் கொடுத்துத் தபால்தலைகளைச் சேகரிப்பான். கலாச்சாரப் புரட்சியை தபால்தலைகள் நடத்திவிடும் என்று அதை கவனிக்கிறவர்களுக்குத் தோன்றும். அவன் முனைப்போடு தபால்தலைகள் சேகரிப்பதில் எனக்கு எரிச்சல் உண்டு. இந்த தபால்தலைகளும் வேலாயுதம்பிள்ளை வாத்தியாரும், எனக்கும் அவனுக்குமான பொது எதிரிகளாக அந்தச் சமயங்களில் தோன்றினார்கள். வேலாயுதம்பிள்ளை வாத்தியாருக்கு எதனாலோ என்னையும் அவனையும் சேர்த்து பார்க்கவேப் பிடிக்காது. ‍அதிலும் என்மேல் அவருக்குக் கூடுதலான கோபம் உண்டு. வரலாறு புவியியல் பாடத்தில் கேள்விகள் கேட்டு வரிசையாக இருக்கையிலிருந்து எழுப்பி அடிக்கும்போது எனக்கு அவர் பிரம்பில் கொடுக்கிற அழுத்தம் அவனைவிடக் கூடுதலாயிருக்கும். அவர் பயன்படுத்துகிற பிரம்புகள் வடசேரி சந்தையில் வாங்கப்பட்டு, அவரது வீட்டில் மஞ்சள் பூசி அவித்து கொண்டுவரப்படுபவை. அவரது வகுப்பில் நானும் அவனும் ஒரே வரிசையில் நெருக்கமாய் உட்கார்ந்திருக்கக்கூடாது என்ற அவரத

புலன்கள் அழிந்த நிழல்கள் - நெடுங்கதை

Image
புலன்கள் அழிந்த நிழல்கள் என் படுக்கையைப் பார்க்கிற எவருக்கும் என் படுக்கை ஒரு நோயாளியின் படுக்கை என்கிற மாதிரியான உணர்வைக் கொடுத்துவிடும்.கடைசி காலத்தில் என் பாட்டி அவளுடைய படுக்கையை இப்படித்தான் அலங்கோலப்படுத்தி வைத்திருந்தாள். அவளது படுக்கையைப் பார்த்துக் கொண்டிருப்பதுகூட மனசை சிதறடித்துவிடும். அல்லது எரிச்சல் உண்டாக்கிவிடும். அப்படியிருக்கும் அவள் படுக்கை வயோதிகத்துக்கும் படுக்கைக்குமுள்ள சம்பந்தம்போல இருக்காது. அது அதற்கும் உள்ளே ஏதோ ஒன்று ஊடாடிக் கொண்டிருக்கும். சில நள்ளிரவுகளில் அவளது ஊளைகளும் அர்த்தப்படுத்த முடியாத ஒலிச்சிதறல்களும் அவள் படுக்கையின் அலங்கோலத்திலிருந்து கிளம்புவது போலவே எனக்குத் தோன்றும். என்னுடைய படுக்கையும் மூன்று வருடங்களாய் இப்படியாகிப் போனது உள்ளூர பெரிய துக்கத்தை உண்டாக்கியிருப்பது யாருக்கும் அநேகமாய் வெளியில் தெரியாது என்றே நினைக்கிறேன். பாட்டியின் படுக்கையோடு என்னுடைய படுக்கை ஒத்துப்போகிற மாதிரியான பல தடயங்களை மறைத்துவிட நான் மேற்கொள்கிற முயற்சிகளில் என்னை நானே தூக்கி நிறுத்திக் கொள்வது மாதிரியான மகிழ்ச்சியிருக்கிறது. ஆனாலும் இப்படியான

ஜெயாவும் செளந்திரபாண்டியனும் - சிறுகதை

Image
ஜெயாவும் செளந்திரபாண்டியனும் எண்பத்தொன்பது தொண்ணூர்ல எனக்கு கேர்ல் ப்ரண்டா இருந்தது ஜெயா. ஜெயாவுக்கு அப்ப இருபத்திமூணு இல்லன்னா இருவத்தி நாலு வயசா இருந்திருக்கும். எனக்கு இருபத்தியேழு வயசு நடந்திட்டிருந்தது. ஜெயாவுக்கு கே.என். ஹாஸ்பிட்டல்ல நர்ஸ் வேலை. ரொம்ப குரூரமாக தெரியற மென்மையான மனசு அவளுக்கு. அது எனக்குப் பிடித்திருந்தது. அந்த நாட்கள்ல நான் தூங்குன நேரமும் ஜெயாவோட பேசிட்டிருந்த நேரமும்தான் அதிகம். எவ்வளவோ பேசியிருக்கோம். என்னவெல்லாமோ பேசியிருக்கோம். நெஜமாவே மனசு திறந்து சொல்றதா இருந்தா அது உண்மையான ப்ரண்ட்ஷிப்தான், காதல் இல்லைன்னு என்னால உறுதியா சொல்ல முடியாது. ஆரோக்கியமான நட்பில் இருந்துதான் ஆரோக்கியமான காதல் உருவாக முடியும். அப்படீன்னு பல தடவ ஜெயாகிட்ட சொல்லியிருக்கேன். ஜெயாவும் அத ஆமோசிச்சிருக்கா. ஆனாலும் ஜெயாவும் நானும் ஒருத்தர ஒருத்தர் காதலிக்கிறோம் அப்படீன்னெல்லாம் எந்தத் தீர்மானமும் எடுத்துக்கிட்டதில்ல. அவளுக்கு ஹாஸ்பிட்டல்ல நைட்ஷிப்ட் வரும்போது ஆரம்பத்தில் கொஞ்சநாள் நானும் ஹாஸ்பிட்டல்ல அவளோட முழிச்சிருந்திட்டு பகல்ல வீட்ல போய் தூங்குவேன். ரொம்ப ச