21 கவிதைகள் - லக்ஷ்மி மணிவண்ணன்
21 கவிதைகள் - லக்ஷ்மி மணிவண்ணன்
குழந்தையை அழைத்து
கடைவீதிக்கு வந்த அப்பன்
முதலில் இல்லாததை கேட்டான்
ஆனால் என்னிடம்
அது இருந்தது
இருக்கிறது என்றேன்
இருந்ததில் இல்லாததைக் கேட்டான்
ஒவ்வொன்றாக எடுத்து
முன் வைத்தேன்
எல்லாமே இருந்தது
இருப்பதில் இல்லாதது ஒன்றுண்டா
என்றான் மீண்டும்
உண்டு என்றேன்
இருப்பதில் இல்லாத ஒன்று
வைத்துக் கொள்ளச் சொல்லி
குழந்தையைத் திருப்பித் தந்தேன்
பேரம் பேசும் போது
என் தோளின் மீதேறி நின்று
தந்தையைக்
கவனித்துக் கொண்டிருந்த
குழந்தையை
18
எட்டு மரப்பலகைகள் கொண்ட
கடை நீலவேணி அக்காவுடையது
வெற்றிலை பாக்கு ,சர்பத் ,தேன்குழல் மிட்டாய்கள்
குளிர்ந்த பானை மோர்
சுற்றுப் பீடிகள்
சுருட்டு வெம்மை
சாலை சிறுக சிறுக உயர்ந்ததில்
திண்ணை இரண்டடி பள்ளத்தில்
மாட்டிக் கொண்டது
நீலவேணி அக்கா
பாதி உயரத்தில்
நின்று தெரிகிறாள்
அவள் காலடிகள்
மூன்று தலைமுறைகளுக்கு
முந்தைய காலத்தில்
புதையுண்டிருக்கிறது
கடைக்குள் உள்ள காலம்
வெளியில் இல்லை
வெளியில் உள்ள காலத்தை
உள்ளே அனுப்ப
வழிகள் ஏதுமில்லை
நீலவேணி அக்காவாக இருக்கும் போது
அந்த கடைக்குள்
நுழைந்தாள்
அவள் முழு உயரம் அறிந்திருந்த
காலம் அது
இந்த பக்கம் இருந்தால்
அந்த பக்கத்திற்குள் நுழைய முடியாது
அந்தப் பக்கமிருந்தாலோ
இந்த பக்கத்திற்கு
வாசல்கள் இல்லை
இருவேறு காலங்களுக்கு மத்தியில்
வெறுமனே
எட்டு பலகைகள்
19
நானொரு கடை நடத்திக் கொண்டிருக்கிறேன்
காலையில் பொருட்களையெல்லாம்
எடுத்து திண்ணையில்
வைப்பேன்
வருவதற்கு முன்பாக
சில மூப்புகள்
அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்
வம்பு
பால்யம்
நேற்று இன்று
எல்லாம்
மாலையில் விற்றதுபோக
விற்காததுபோக
அனைத்தையும்
உள்ளே
எடுத்து வைத்துவிடுவேன்
அதன்பின்னர்
நான்கைந்து நாய்கள்
அந்த திண்ணையை
எடுத்துக் கொள்வார்கள்
அந்த கடை அவர்களுடையது
என்றுதான்
அவர்கள் நினைக்கிறார்கள்
நாய்கள் வராதவொரு நாளில்
ஒரு குரங்கு
வந்திருந்தது என கேள்விப்பட்டேன்
விருந்தினராக
வந்தது அது
எல்லாவற்றுக்கும் சேர்த்துத்தான்
நான் வாடகை
செலுத்திக் கொண்டிருக்கிறேன்
இரவில் சில பறவைகள்
கூரையில் வந்தமர்ந்து செல்லுமாயின்
நான் தருகிற வாடகைக்கு
கணக்கு சரியாக
இருக்கும்
20
ஒரு காலத்தில் உன்னைப் போலவே
இருந்திருக்கிறேன்
முதலமைச்சருக்கு ஆலோசனை
சொல்லியிருக்கிறேன்
ப்ரதான் மந்த்ரியை எதிர்த்திருக்கிறேன்
சாதுக்களிடம் சண்டையிட்டிருக்கிறேன்
தெய்வங்களையெல்லாம்
நிந்தித்திருக்கிறேன்
போவோர் வருவோரையெல்லாம்
தாக்கியிருக்கிறேன்
அடியாரை அடித்திருக்கிறேன்
உடன் ஒருவன் இருந்தால் போதும்
சாமியைத் தோள் எட்டி
மிதித்திருக்கிறேன்
எதற்கும் முயற்சித்ததில்லை
எல்லாவற்றுக்கும் ஆசைப்பட்டிருக்கிறேன்
ஒரு காலத்திய
கலகக்கடவுள் நானிருந்த இடத்தில்
நீ வந்து முளைத்திருக்கிறாய்
அப்படியே உனக்கு என் வாலிப முகம்
அதே ஆற்றல்
அதனால்தான் எனக்கு பயமாக இருக்கிறது
முற்போக்கு கலகமுகம் கழுவி
வீட்டு நெல்லி மரத்திற்கு
தண்ணீர் விடுவதிலிருந்தே தொடங்கி
முதலில் இருந்து
புறப்பட்டு களத்திற்கு வந்து சேர
நான்கு கடல் தூரம் இருக்கிறது
தாங்குவாயா தம்பி?
21
என்னுடைய அப்பைய்யா
Comments
Post a Comment