மேல்சாதி பெண்ணுடலை ராணுவமயமாக்கும் - மணிரத்னம்
மேல்சாதி பெண்ணுடலை ராணுவமயமாக்கும் - மணிரத்னம்
ஷீலா ஆப்ரஹாம் ,வருண் என இரு ஆண் பெண் இரட்டைகள்.வருண் மேல்தட்டு பிள்ளைவாள்.தந்தைக்கு எதிர்நிலை என்று மணிரத்னத்தால் முன்வைக்கப் படுகிற ஆண்மை.உண்மையில் தந்தைக்கு எதிர்நிலையா வருண் ? ஒரு காட்சியில் மணிரத்னம் இவ்வாறு ஒரு தகவல் சொல்கிறார்.அதற்கு மேல் அதில் ஒன்றுமில்லை.ஷீலா ஆப்ரஹாம் கிறிஸ்தவப் பெயருடன் முன்வைக்கப்படுகிற இந்திய மேல்சாதி இந்து பெண்ணுடலைத் தாங்கி நிற்கிற பெண்மை .ஆனால் பிராமண முற்போக்குத் தன்மை பொருள் பொதிந்த உடல் இந்த பெண்மை .இந்த இருமைக்குள் இந்திய மேல்சாதி பெண்ணுடலைக் கடத்தி ராணுவ ஆண்மையின் பொருளுக்குள் கொண்டு சேர்ப்பித்தலே மணிரத்னத்தின் காற்று வெளியிடை அரசியல்.மேல்சாதி பெண்ணுடலை தேசிய ராணுவத்தில் உடலாக நிரூபணம் செய்கிறார் மணிரத்னம்.
பொதுவாகவே கமர்சியல் படங்களின் பொது குணமே ஆண்குறியையும்,பெண்குறியையும் ஏதேனும் பொருளில் வைத்து அலங்காரம் செய்வதும் ,பின்னர் அதனை டிஸ்பிளே செய்வதும்தான்.உலகளாவிய வர்த்தகப் படங்களின் பொது விதியிது.ஆனால் பொருளில் ஒரு இயக்குனர் காட்டுகிற முதிர்ச்சியும் நுட்பமும் ,சமகாலத் தன்மையும் அவற்றை வெகு மக்களோடு இணைக்கும் தன்மையைப் பெறும்.ராம்கோபால் வர்மா போன்றவர்கள் மிகவும் மாறுபட்ட கோணத்தில் இந்த டிஸ்பிளே செய்யும் போது அவை கமர்சியல் படங்களின் தன்மையையும் கடந்து செல்வதுண்டு.பெண்மை எத்தகைய ஆண்தன்மையில் இணைப்பு பெறுகிறது என்பதே பொருள் எனப்படுவது.மணிரத்னத்திற்கும் பிறருக்கும் உள்ள தெளிவான வேறுபாட்டை சுட்டிக் காட்டவே ராம்கோபால் வர்மா பெயரைச் சொல்கிறேன்.வேறு காரணங்கள் ஏதுமில்லை.
மணிரத்னம் தொடர்ந்து ஒரு பனிரெண்டு வயது ஐயர் பையனின் மனநிலையிலிருந்து சிந்திப்பவராக மட்டும் உள்ளார்.ஐயர் பையன் என்பதைக் காட்டிலும் அதே அளவிற்கான முதிர்ச்சியின்மையோடு தனது கற்பனையால் பிறழ்வு கொண்ட கற்பனையால் சிந்திக்கிற வறட்சி கொண்ட ஐயர் கிழவி போன்று காற்று வெளியிடையில் வெளிப்படுகிறார்.வசனங்கள் நெருடல்.நான் கத்தட்டுமா எனக் கேட்டு விட்டு கத்துகிற பாமரத்தனமான காட்சிகளை போன்று ஐந்து நிமிடத்திற்கு ஒரு நெருடல்.வருண் என்னும் ஆண்மை தனது குறியை யாரேனும் அறுத்தெறிய மாட்டார்களா ? என்கிற அளவிற்கு காமத்தின் இறுக்கத்தை வெளியிடுகிறார்.ஒரு காட்சியில் அவளை கடித்துத் தின்று விடுவானோ என்கிற பயம் உண்டாகிறது.ஷீலா ஆப்ரஹாம் கிறிஸ்தவப் பெயரில் பார்வையாளன் முன்பாக நிறுத்தப் பட்டாலும் கூட அவளுடைய இருப்பிடத்தில் கூட அவள் ஒரு கிறிஸ்தவப் பெண் என்பதற்கான சின்னங்கள் எதுவுமே தென்படவில்லை.இதற்கு சாதுர்யம் என்பதல்ல பெயர்.வெளிப்டையாகச் சொன்னால் இதன் பெயர் பாமர முட்டாள்த்தனம். கஷ்டமாக இருக்கிறது.இன்றைய 12 வயது ஐயர் பையன்கள் இவ்வளவு சோடையாக சிந்திக்கிற இடத்தில் நிச்சயம் இருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்
மணிரத்னத்தின் "காற்று வெளியிடை " பிறழ்வு நிலை கொண்ட ஐயர் கிழவியின் மனோபாவமும் ,அரசியலும் கொண்ட நாலாந்தரமான சினிமா. .தன்சாதிக்கும் மேல்சாதி ஐந்து பெண்ணுடலுக்கும் தெரிந்தோ தெரியாமலோ அவர் இளைத்திருக்கும் துரோகம் இந்த படம்..ராணுவ ஆண்மையில் கவர்ச்சி மூண்டு தெறிக்க இந்திய மேல்சாதி பெண் மனோபாவம் காத்துக் கிடைக்கிறதா ? என்ன ? பரிதாபகரமான இணைப்பு.முழுமையான மடையர்களால் மட்டுமே சாத்தியப்படக் கூடியது.மணிரத்னத்திற்கு வாழ்த்துகள்.பாகவதர் போல நீங்களும் சீனியர் ஆகிக்கொண்டிருக்கிறீர்கள்.ஆனால் ஒருயொரு வேறுபாடு பாகவதரின் படங்களை இன்றும் கூட என் போன்றவர்களால் பார்க்க முடியும்.
காற்று வெளியிடை சகிக்கலை
ஷீலா ஆப்ரஹாம் ,வருண் என இரு ஆண் பெண் இரட்டைகள்.வருண் மேல்தட்டு பிள்ளைவாள்.தந்தைக்கு எதிர்நிலை என்று மணிரத்னத்தால் முன்வைக்கப் படுகிற ஆண்மை.உண்மையில் தந்தைக்கு எதிர்நிலையா வருண் ? ஒரு காட்சியில் மணிரத்னம் இவ்வாறு ஒரு தகவல் சொல்கிறார்.அதற்கு மேல் அதில் ஒன்றுமில்லை.ஷீலா ஆப்ரஹாம் கிறிஸ்தவப் பெயருடன் முன்வைக்கப்படுகிற இந்திய மேல்சாதி இந்து பெண்ணுடலைத் தாங்கி நிற்கிற பெண்மை .ஆனால் பிராமண முற்போக்குத் தன்மை பொருள் பொதிந்த உடல் இந்த பெண்மை .இந்த இருமைக்குள் இந்திய மேல்சாதி பெண்ணுடலைக் கடத்தி ராணுவ ஆண்மையின் பொருளுக்குள் கொண்டு சேர்ப்பித்தலே மணிரத்னத்தின் காற்று வெளியிடை அரசியல்.மேல்சாதி பெண்ணுடலை தேசிய ராணுவத்தில் உடலாக நிரூபணம் செய்கிறார் மணிரத்னம்.
பொதுவாகவே கமர்சியல் படங்களின் பொது குணமே ஆண்குறியையும்,பெண்குறியையும் ஏதேனும் பொருளில் வைத்து அலங்காரம் செய்வதும் ,பின்னர் அதனை டிஸ்பிளே செய்வதும்தான்.உலகளாவிய வர்த்தகப் படங்களின் பொது விதியிது.ஆனால் பொருளில் ஒரு இயக்குனர் காட்டுகிற முதிர்ச்சியும் நுட்பமும் ,சமகாலத் தன்மையும் அவற்றை வெகு மக்களோடு இணைக்கும் தன்மையைப் பெறும்.ராம்கோபால் வர்மா போன்றவர்கள் மிகவும் மாறுபட்ட கோணத்தில் இந்த டிஸ்பிளே செய்யும் போது அவை கமர்சியல் படங்களின் தன்மையையும் கடந்து செல்வதுண்டு.பெண்மை எத்தகைய ஆண்தன்மையில் இணைப்பு பெறுகிறது என்பதே பொருள் எனப்படுவது.மணிரத்னத்திற்கும் பிறருக்கும் உள்ள தெளிவான வேறுபாட்டை சுட்டிக் காட்டவே ராம்கோபால் வர்மா பெயரைச் சொல்கிறேன்.வேறு காரணங்கள் ஏதுமில்லை.
மணிரத்னம் தொடர்ந்து ஒரு பனிரெண்டு வயது ஐயர் பையனின் மனநிலையிலிருந்து சிந்திப்பவராக மட்டும் உள்ளார்.ஐயர் பையன் என்பதைக் காட்டிலும் அதே அளவிற்கான முதிர்ச்சியின்மையோடு தனது கற்பனையால் பிறழ்வு கொண்ட கற்பனையால் சிந்திக்கிற வறட்சி கொண்ட ஐயர் கிழவி போன்று காற்று வெளியிடையில் வெளிப்படுகிறார்.வசனங்கள் நெருடல்.நான் கத்தட்டுமா எனக் கேட்டு விட்டு கத்துகிற பாமரத்தனமான காட்சிகளை போன்று ஐந்து நிமிடத்திற்கு ஒரு நெருடல்.வருண் என்னும் ஆண்மை தனது குறியை யாரேனும் அறுத்தெறிய மாட்டார்களா ? என்கிற அளவிற்கு காமத்தின் இறுக்கத்தை வெளியிடுகிறார்.ஒரு காட்சியில் அவளை கடித்துத் தின்று விடுவானோ என்கிற பயம் உண்டாகிறது.ஷீலா ஆப்ரஹாம் கிறிஸ்தவப் பெயரில் பார்வையாளன் முன்பாக நிறுத்தப் பட்டாலும் கூட அவளுடைய இருப்பிடத்தில் கூட அவள் ஒரு கிறிஸ்தவப் பெண் என்பதற்கான சின்னங்கள் எதுவுமே தென்படவில்லை.இதற்கு சாதுர்யம் என்பதல்ல பெயர்.வெளிப்டையாகச் சொன்னால் இதன் பெயர் பாமர முட்டாள்த்தனம். கஷ்டமாக இருக்கிறது.இன்றைய 12 வயது ஐயர் பையன்கள் இவ்வளவு சோடையாக சிந்திக்கிற இடத்தில் நிச்சயம் இருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்
மணிரத்னத்தின் "காற்று வெளியிடை " பிறழ்வு நிலை கொண்ட ஐயர் கிழவியின் மனோபாவமும் ,அரசியலும் கொண்ட நாலாந்தரமான சினிமா. .தன்சாதிக்கும் மேல்சாதி ஐந்து பெண்ணுடலுக்கும் தெரிந்தோ தெரியாமலோ அவர் இளைத்திருக்கும் துரோகம் இந்த படம்..ராணுவ ஆண்மையில் கவர்ச்சி மூண்டு தெறிக்க இந்திய மேல்சாதி பெண் மனோபாவம் காத்துக் கிடைக்கிறதா ? என்ன ? பரிதாபகரமான இணைப்பு.முழுமையான மடையர்களால் மட்டுமே சாத்தியப்படக் கூடியது.மணிரத்னத்திற்கு வாழ்த்துகள்.பாகவதர் போல நீங்களும் சீனியர் ஆகிக்கொண்டிருக்கிறீர்கள்.ஆனால் ஒருயொரு வேறுபாடு பாகவதரின் படங்களை இன்றும் கூட என் போன்றவர்களால் பார்க்க முடியும்.
காற்று வெளியிடை சகிக்கலை
Comments
Post a Comment