ஸ்ரீதேவி

ஸ்ரீதேவிக்கெல்லாம் மாரடைப்பென்றால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை

யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்கிறார்கள்.யாருக்கு வேண்டுமாயினும் ஏற்படுவது யாருக்கு வேண்டுமாயினும் ஏற்படலாமா ? சௌந்தர்யா விமான விபத்தில் காலமடைந்த போது இறைவன் மேலானவன்தான் இல்லையென்று சொல்லவில்லை.ஆனால் அவ்வளவு தெளிவு நிறைந்தவன் என்று சொல்வதற்கில்லை என்று தோன்றியது.ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு என்னும் போது அது மேலும் ஊர்ஜிதம் ஆகிறது.

ஸ்ரீதேவி வயதான காலத்தில் நடித்த படங்களை நான் பார்த்ததில்லை.அது தர்மமல்ல.அது நன்றாக இருந்ததாகக் கூட சொன்னார்கள்,ஸ்ரீதேவிக்கெல்லாம் வயசே ஆகக் கூடாது.அப்படியொரு வேளை ஆகுமென்றால் அந்த கொடுங்கனவை நான் கண்ணால் காண வேண்டியதில்லை.ராம் கோபால் வர்மா, ஸ்ரீதேவி பற்றி ஒரு நேர்காணல் ஒன்றில் சொல்லும் போது ; ஸ்ரீதேவியை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதற்கு அவருடைய கணவரை எனக்குப் பிடிக்காது என்பதில் ,பதில்  தெரிந்து கொள்ள முடியும் என சொல்லியிருப்பார்.ஸ்ரீதேவிக்கெல்லாம் கணவர்,குழந்தைகள் என்றால் அது யோசிக்கவே மிகவும் மலிவாக இருக்கிறது.

சிறு வயதில் அன்பானவர்களுக்கும்  ,பேரழகு  படைத்தவர்களுக்கெல்லாம் மரணம் ஏற்படாது என்றே நினைத்துக் கொண்டிருந்தேன்.அதனையும் மீறி ஏற்பட்டுக் கொண்டுதானிருந்தது ,இருந்தாலும் மனம் நம்ப மறுக்கிறது.அப்படியில்லை என்று சொல்கிறது.பேரழகு என்பது இயற்கையின் விஷேசமானதொரு தோற்றம் .எவ்வளவு  எண்ணங்கள் அதற்கு, அது தோன்றுவதற்கு  பின்புலமாக இருந்திருக்கும் என யார் அறிவார்கள் ? அது எப்படியில்லாமலாக முடியும்.அது எப்படி காலமாகும் ? அதற்கு எப்படி நோய் ஏற்பட முடியும் .வளர்ந்த பிறகு படைப்பாளிகளுக்கு இப்படியேற்படாது என்று தோன்றியது .மாறாக
ஏற்பட்டது . எனினும் என்னுடைய நம்பிக்கையில் மாற்றமில்லை.அவர்கள் எந்த இடத்தில் இல்லாமலானார்கள் என்று சொல்லப்பட்டார்களோ அந்த இடத்தில் இருந்து கொண்டேயிருக்கிறார்கள்.

குறிப்பிட்ட காலத்தின் பெண்மையின் பெருந்தோற்றம் ஸ்ரீதேவி .காலத்தை மயங்கச் செய்தவர் . அவர் அவ்விடத்தில் இருந்து கொண்டேயிருப்பார்.மாரடைப்பெல்லாம் குறுக்கிடவே இயலாத இடம் அது.

 பிறப்பென்பது சாதாரணம்.தோன்றுதல் வேறு.ஸ்ரீதேவி தோன்றியவர் , மறைவதில்லை  

Comments

  1. /இறைவன் மேலானவன்தான் இல்லையென்று சொல்லவில்லை.ஆனால் அவ்வளவு தெளிவு நிறைந்தவன் என்று சொல்வதற்கில்லை என்று தோன்றியது/ இறைவன் என்றொருவன் இருப்பதற்கான வாய்ப்பு என்பது மிகவும் அரிதானது. ஒருவேளை அப்படி ஒருவன் இருக்கிறான் என்றால் எல்லாவற்றையும் அவந்தான் நிகழ்த்துகிறான் என்றால் அவன் மிகமிகமிகமிகமிக.... குரூரமானவனாகத்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் இப்படிப்பட்ட மரணங்களையெல்லாம் நிகழ்த்திப் பார்ப்பானா?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்