பா.ஜ.க அடுத்த முறை ஆட்சிக்கு வரக்கூடாது.

பா.ஜ.க அடுத்த முறை ஆட்சிக்கு வரக்கூடாது.

கொஞ்சம்  கொஞ்சமாக அவர்களின் அதனை வேஷங்களும் கலைந்து கொண்டிருக்கின்றன .மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகாரத்தின் உச்சநிலையை அடைவார்கள் என்பதில் சின்ன சந்தேகங்களும் வேண்டியதில்லை.அறிஞர்கள் ,பன்முகப் பார்வை கொண்டோர்கள் ஒருவர் கூட அக்கட்சியில் இல்லாதது ,அல்லது அவர்களால் இவர்களை பாதிக்க இயலாது என்பது நிரூபணம் ஆகிறது . இது  அவர்களுடைய மாபெரும் துரதிர்ஷ்டம் .வாய்ப்பு கிடைத்தால் பேன் பார்க்க தொடங்கி விடுவார்கள் என்கிற ஐயம் உண்மையாகி கொண்டிருக்கிறது

பழமைவாதம் மட்டுமே  நிறைந்த ஒரு வீட்டிற்குள் இருந்து கொண்டு,நான்கு பேர் என்ன முடிவுகள் எடுப்பார்களா ,அது போலவே மொத்த நாட்டிற்கும் அனைத்து விதமான,  இந்திய துணைக் கலாச்சாரங்கள்  அத்தனைக்கும் சேர்த்து அவர்கள் முடிவெடுக்கிறார்கள்.இதனை அவர்களுக்கு புரிய வைப்பதற்கோ ,அப்படியில்லை விஷயங்கள் என்பதனை படிப்பித்து கொடுப்பதற்கோ வாய்ப்புகள் இல்லை .காரணம் அறிவுலகத்தின் மீதும் ,பிற கலாச்சாரங்கள் மீதும் அவநம்பிக்கை மட்டுமே கொண்டவர்கள் அவர்கள் . ஒற்றைக் கலாச்சாரம் தவிர்த்து பிற எவற்றின் பேரிலும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை  என்பதை  மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.தாங்கள் ஒரு மூடர் கூடம் என்பதை பகிரங்கமாக நிரூபிக்கிறார்கள்.

அரசு அமைப்புகள் அனைத்தையும் அதிகாரத்தால் கறையுண்டாகுகிறார்கள்.அது ஏற்கனவே கறை கொண்டிருந்ததுதான்.இவ்வளவிற்கு நலிவடைவது இப்போதுதான்.நீதித்துறை உட்பட உயர் அரசு அமைப்புகள் எல்லாம் முடங்கியுள்ளன.அரசு உணர்வதை செயலாக்கும் கருவிகளாக அவை அனைத்துமே மாற்றப்பட்டிருக்கின்றன.பண்பாட்டாளர்கள்,எழுத்தாளர்கள் ,கவிஞர்கள் ,கலைஞர்கள் அரசாங்கத்தால் உளவு பார்க்கப் படுகிறார்கள்.ரஷ்யாவில் ஸ்டாலின் காலத்தில் இருந்ததை போல.ஒரு அவசரகால பிரகடனத்தின் கீழ் பொதுமக்கள் வாழ்வது போன்றதொரு பிரக்ஞய் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது.

தங்கள் கட்சிக்குள்ளேயே மாறுபாடு கொண்டோர் இருப்பார்கள் ஆயினும் அமைப்பு அவர்கள் மீது பாயுமளவிற்கு மோடி பதற்றத்தை ஏற்படுத்துகிறார் அரசு அமைப்புகளை பயன்படுத்தி.இசைவற்றவர்கள் மீதெல்லாம் அமைப்பு ; அவர்கள் தப்பிக்க இயலாத காரணங்களை முன்வைத்து பாய்வது என்பது முன்னெப்போதும் கண்டிராத விஷயங்கள்.இந்த பண்பு தனிமனித சர்வாதிகாரத் தன்மையை நோக்கி அரசாங்கத்தைக் கொண்டு செலுத்தக் கூடியது.சோனியாவும் ,ராகுலும் தகுதியற்றவர்களாக இருக்கலாம்.ஆனால் காங்கிரசில் தான்தோன்றித்தனமாக யவர் ஒருவரும்  முடிவுகளை எடுப்பது கடினம்.இன்னும் அங்கே   நிறைய தலைவர்கள் , அரசியல் வல்லுநர்கள் , நிபுணர்கள் இருக்கிறார்கள்.

காங்கிரஸ் எவ்வளவு தகுதி இழந்த நிலையிலும் கூட நிறைய நிபுணர்களையும் கொண்ட கட்சி.அது நிச்சயமாக மூடர் கூடம் இல்லை.

பா.ஜ.க நிறைய பாடங்கள் கற்க வேண்டியுள்ளது.ஒற்றைக் கலாச்சாரம் என்னும் அவர்களுடைய கோட்பாடு தொடர்ந்து வெளிப்பாட்டுக் கொண்டே இருக்கிறது மிக மிக வேகமாக.இது கிளர்ச்சியையும் நாசத்தையும் விளைவிக்கக் கூடியது.

காங்கிரஸ் ,இடதுசாரிகள் தங்கள் பார்வைகளில் கொண்டுள்ள கலோனியல் எச்சங்களை கைவிட்டு விட்டு , பா.ஜ.கவை அதிகாரத்தில் இருந்து இறக்குவதற்கு தங்களை முதலில் தகுதிபடுத்திக் கொள்ளவேண்டும்.

தார்மீகரீதியிலான பின்னடைவை பா.ஜ.க தொடர்ந்து அதிகாரத்தில் இருந்தால் இந்தியாவில் ஏற்படுத்தப் போவது உறுதி.

மாடு அதிகம் தின்றால் கொழுப்பு புரையேறும் என்பது உண்மைதான் ,ஆனால் தயிர் சாதம் மட்டுமே தின்று கொண்டிருந்தால் மூளை பிறழ்வு ஏற்பட்டு விடும் என்று தோன்றுகிறது.

Comments

  1. உங்களுடைய குற்றச்சாட்டுகளுக்கு ஏதேனும் உதாரணங்கள் கொடுத்தால் சற்று வலுவாக இருக்கும்.

    ReplyDelete
  2. 100% உடன்படுகிறேன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்