திருமதி நளினி சிதம்பரம் அவர்களுக்கு ...

திருமதி நளினி சிதம்பரம் அவர்களுக்கு ...


நீங்கள் நீட் விஷயத்தில் தொழில்முறை வழக்கறிஞராக மட்டுமே பேசுகிறீர்கள் எனில் அது உங்கள் தனிப்பட்ட
விஷயம் .பொது மனிதராக பேசுகிறீர்கள் எனில் அது வேறுவிதமானது.இந்தியாவில் உள்ள ஒரு சதமானம் பணக்காரர்களுக்கும் ,99 சதமானம் ஏழைகளுக்கும் இடைப்பட்ட பிரச்சனை இது.

நீங்கள் ஒரு சதமானம் பணக்கார்களுக்கு ஆதரவான நியாயங்களை பேசுகிறீர்கள்.அது உங்களுக்கு தொழிலாகப் பணிக்கப்பட்டிருப்பதால் அதில் காலூன்றி நிற்க வேண்டியது உங்கள் வேலை.அதன் பொருட்டு 99 சதமானம் ஏழைகளின் தரப்பு தவறுதலானது என்று சொல்வதற்கு உங்களுக்கு தார்மீக நியாயங்களோ ,அறமோ கிடையாது என்பதனை நினைவில் வைத்துக் கொண்டு பொதுவில் பேசுங்கள்.

நீங்கள் இப்போது நின்று கொண்டிருப்பது சமூக அநீதிகள் தரப்பில் என்பது நினைவில் இருக்கட்டும்.

நீட் விஷயத்தில் மிகவும் எளிமையான தீர்க்கப்படாத கேள்விகள் உள்ளன.
1 .
மாநில அரசு பள்ளிக்கூடங்களின் கல்வி மேல் படிப்புகளுக்குத் தகுதியற்றதென்று முடிவு செய்கிற அதிகாரத்தை மத்திய அரசாங்கமும் ,நீதி மன்றமும் எந்த வகையில் 
பெற்றீர்கள் ? மாநிலங்களோடு இது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டதா ? சி.பி.எஸ்.ஈ மாணவர்களை மாநில அரசு பாடத்திட்டத்தில் தேர்வு எழுதச் சொன்னால் தேறுவார்கள் என நம்புகிறீர்களா ?
2 .
மாநில பாடத் திட்டங்கள் மேற்படிப்புக்கு உதவாது என நீங்கள் புறக்கணிக்கும் மாநிலங்கள் இந்தியாவில்தானே உள்ளன ?அல்லது அவை வேறு பக்கத்தில் உள்ள அண்டை நாடுகளைச் சேர்ந்தவையா ?
மாநில பாடத் திட்டங்கள் உயர்படிப்பிற்கு உதவாது எனில் மாநிலங்களின் கல்வி இனி யாருக்கானது ? அவற்றிற்கான அவசியங்கள் என்ன ? கல்வியை இனி சி.பி.எஸ்.ஈ பொறுப்பில் விடப் போகிறீர்களா ?
இல்லையெனில் சில கல்வித் பிரிவுகளை தனியார் கம்பெனிகள் மூலம் மாநிலங்களில் தொடங்கியிருப்பது போல ,தனியார் கல்லூரிகள் மூலம் தொடங்கியிருப்பது போல,தனியார் கம்பெனிகள்
மூலம் மத்தியில் கல்வியை இணைக்க இருக்கிறீர்களா ?
3 .
மாநிலங்களின் கல்வி கதைக்கு உதவாது எனில் மாநில அரசுகளின் கல்வி நிலையங்கள் எதற்காக செயல்பட வேண்டும் ? பொருள் விரயத்திற்காகவா ? இல்லை ஏழை மாணவர்களை லேபர் கம்யூனிட்டியாக மட்டும் உருவாக்கி மத்தியில் உருவாகும் சமூகத்திற்கு வீட்டு வேலைகளுக்கு அனுப்புவதற்கா ? இதற்கு உங்களுடைய நீதி மன்றங்களில் பதில் உண்டா ?
4 .
சி.பி.எஸ்.ஈ தான் தரமான கல்வியை தர வல்லது என்பதை எந்த நூற்றாண்டிலிருந்து நீங்கள் கண்டறிந்து கொண்டீர்கள் ? அதற்கு ஏதேனும் ஆய்வினை உங்கள் நீதிமன்றங்கள் செய்து கொண்டனவா ?
5 .
நீதி மன்றங்கள் என்பது வாதி,பிரதிவாதி வாதங்களைக் கொண்டு சில பஞ்சாயத்து முடிவுகளை எட்டுவதற்குரிய இடம்தான்.வாதி பிரதி வாதங்களுக்கு மேலதிக அறிவை அவை ஒருபோதும் கொண்டிருப்பதில்லை.மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நீதி மன்றங்கள் , நீட் விஷயத்தில் நடந்து கொள்வதை போலவே பல காலம் மறுத்து வந்திருக்கின்றன.சரி அது இருக்கட்டும்.
இனி வருங்காலங்களில் இந்தியாவில் நீதி மன்றங்கள்தான் கொள்கை 
முடிவுகளை ,அரசியல் முடிவுகளை எடுக்கும் என கருதலாமா ? எனில் சட்டசபைகளும்,பாராளுமன்றமும் எதற்காக ? யாரேனும் ஒருவரிடம் மொத்தமாக நாட்டை ஒப்படைத்து விடுவதுதானே சிக்கனமானது ?
6 .
கோச்சிங் சென்ட்டர்கள்தான் இனி இந்தியாவில் உயர்கல்வியைத் தீர்மானிக்கும் எனில் பாடசாலைகள் எதற்காக ? ஏழைகளை வடிகட்டி பணக்காரர்களைத் தேர்வு செய்யவே அகில இந்திய தேர்வுகள் என்னும் வழிமுறைகள் எனில் நேரடியாகவே குறிப்பிட்ட வருமானத்திற்கு குறைவானவர்களுக்கு உயர் கல்வியில் இடமில்லை என்று நேரடியாக தெரிவித்து விட வேண்டியதுதானே ?
7 .
எல்லாம் இருக்கட்டும் .இந்த "தகுதி" என்பதை எப்படி பொன் ராதா கிருஷ்ணன் , உங்களை போன்றோர் கண்டுபிடிக்கிறீர்கள் ? உங்களுக்கு மட்டுமே தனியாக உள்ள எட்டாவது அறிவை பயன்படுத்தித்தானே ? நீங்கள் பெற்றிருக்கும் எட்டறிவிற்கு இந்த எளிய கேள்விகள் விளங்குகிறதா ?
8 .
நீங்கள் உங்களுடைய தோப்புகளுக்குள்ளிருந்து கொண்டு ஏழைகள் எதற்காக படிக்க வேண்டும் ! என்று சும்மா பேசிக் கொள்வீர்களே ! அதற்கும் இந்த நீட் நடைமுறைப் படுத்தலுக்கும் ஏதேனும் வேறுபாடுகள் உண்டா ?
மக்கள் ஒருநாள் உங்களை அடித்து கொல்லப்போகிறார்கள் என்பது நிச்சயம்.நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் .பிறகு யாரும் சொல்லவில்லையே என வருத்தப்படாதீர்கள்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"