தமிழ்நாட்டு சட்டசபைக்கு தேர்தல் வருவதுதான் உகந்த வழி

தமிழ்நாட்டு சட்டசபைக்கு தேர்தல் வருவதுதான் உகந்த வழி

இந்த ஆட்சி இவ்வாறே தொடர்வது நல்லதல்ல.இப்போதைய இரு குழுக்களின் இணைவு என்பது பா.ஜ.கவின் இரண்டு துணைக் குழுக்களின் இணைப்புதானே அன்றி ஏற்கனேவே மக்களால் தேர்வு செய்யப்பட்ட அ.தி.மு.கவிற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.இப்போதைய ஆட்சியாளர்கள் டெல்லியில் இருந்து பெறப்படும் கட்டளைகளுக்கு ஏற்ப  ஆடுகிற பொம்மைகள்.பதவி மோகத்தில் தமிழ் நாட்டை மொத்தமாக இவர்கள் வாய்ப்பு இருப்பின் விற்று விடுவார்கள்.இவர்கள் சரண் அடைகிறவர்களின் கால்கள் தற்போது மாறியிருக்கிறதே அன்றி பதவியின் பொருட்டு எதை வேண்டுமாயினும் செய்யத் துணியும் பண்பில் மாற்றமில்லை.

பதவி மோகத்தின் வெறியில் மக்களை முட்டாளாக்குகிறார்கள்.இந்த இரண்டு குழுக்களும் பா.ஜ.க வுடன் கட்சியில் இணைத்து கூட தேர்தலில் மக்களை சந்திக்கட்டும்.எந்த முடிவாக இருந்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்கிற மடமை மட்டுமே உகந்ததாக இருக்க முடியும்.குறுக்கு வழிகளில் அதிகாரத்தில் யார் நின்றாலும் அது நல்லதல்ல.

மாநில அரசாங்கத்தின் அதிகாரிகள் ,மாநில காவல் துறை உட்பட மத்திய அரசாங்கத்தின் சார்பாக இயங்குவது ,கவர்னர் ஆட்சிகளை கழித்து விட்டுப் பார்த்தால் இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்.தமிழ்நாட்டின் அனைத்து அதிகார அமைப்புகளும் டெலியைத் தலைமையகமாகக் கொண்டு தமிழ்நாட்டில் இயங்கி கொண்டிருக்கின்றன.மக்கள் இதற்காக வாக்களிக்கவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஆட்சி மாற்றம் அவசியம்.எந்த பன்னாடையை மக்கள் தேர்வு செய்தாலும் பரவாயில்லை,அது மக்கள் தேர்வு செய்கிற பன்னாடையாக  இருக்கட்டும்.

இதற்கு மேலும் இந்த அசிங்கங்களை சகித்து கொள்வது ஒவ்வொருவருக்கும் அசிங்கம் 

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்