தனியார் பயிற்சி மையங்கள் தடை செய்யப்பட வேண்டும்

தனியார் பயிற்சி மையங்கள்  தடை செய்யப்பட வேண்டும்


எய்ம்ஸ் மருத்துவமனைகளின் மருத்துவ படிப்பிறகான அகில இந்திய தேர்வில் முதல் பத்து இடங்களை ஆகாஷ் பயிற்சி மையம் பெற்றிருக்கிறது.ஒரே பயிற்சி மையம் இவ்வாறாக அதிக இடங்களை பிடிப்பது மருத்துவக் கவுன்சிலின் நடைமுறைகளில் முறைகேடுகளுக்கான வாய்ப்பு இருப்பதையே உணர்த்துகிறது.நகரம் ,பெருநகரம் சார்ந்த இந்த பயிற்சி மையங்களுக்கும் அகில இந்திய தகுதித் தேர்வு வினாத்தாள் தயாரிக்கும் அரசு நிறுவனங்களுக்கும்  இடையில் உள்ள புரிந்துணர்வு , உயர் படிப்பு விஷயங்களில் உள்ள நம்பகத்தன்மைக்கு இடையூறு செய்கின்றன.கேள்வி தாள்கள் இந்த மையங்களுக்கு முன்னரே  கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

இத்தகைய பயிற்சி மையங்கள் மாணவர்களுக்கு  பாடங்களில் துணை செய்பவையாக மட்டும் இருப்பதில்லை.வினா  தாள்களின் அடைப்படையில் அவர்களுக்கு வருடக் கணக்கில் முதிர்ச்சியூட்டுவதன் வழியாக குறுக்கு வழிமுறைகளை எவ்வாறு மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதில் திறன் கொள்ளச் செய்கிறது.இத்தகைய குறுக்கு வழிகள் நமது கல்வி முறையை சமநிலை அற்றதாகவும் ஊழல் நிரம்பியதாகவும் மாற்றிவிடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

கழிந்த நீட் தேர்விற்காக திருச்சுர் தேர்வு மையத்தில் மட்டும் 150000 மேலாக மாணவர்கள் குவிந்தனர். இவை மாணவர்களை  தேர்வுக்கு தயார் படுத்தும் வேலையை மட்டும் செய்வதில்லை.கேள்வித்தாள்களின் அடிப்படையில் தங்கள் பயிற்சியை இவை வகுத்துத் தருகின்றன.ஒரே மையத்திலிருந்து குறிப்பிட்ட அகில இந்திய தேர்வுகளில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்ச்சி பெறும் போது ,இத்தகைய தேர்வுகளின் கேள்வி தாள்கள் முன்கூட்டியே இந்த மையங்களுக்கு கிடைத்து விடுவதற்கான வாய்ப்புகள் இந்தியா போன்ற ஊழல் மிகுந்த நாடுகளில் அதிகம் உண்டு.

மருத்துவப்படிப்புகளை பொறுத்தவரையில் பல வருடங்களாக இந்த பயிற்சி மையங்களுக்கும் ,இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும்  தொடர்பு இருப்பதாக சந்தேகங்கள் உள்ளன.பலமுறை ஊழல் குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன.பாண்டிச்சேரி  ஜிப்மரில் ஏற்பட்ட உள்ள குற்றச்சாட்டுகள் முக்கியமானவை.நமது அமைச்சர்கள் பயிற்சி மையங்களுக்கு சார்பானவர்களாக இருப்பதற்கும் ஊழலுக்கும் தொடர்புகள் கிடையாது என்று நம்புவதற்கில்லை.மருத்துவ படிப்பில் உள்ள மர்மங்களை ,மருத்துவ கவுனிசிலின் மர்மங்களை வெளியே கொண்டு வருவதற்கான அமைப்புகள் தேவை.இல்லையெனில் எதிர்கால மாணவர்களின் நலம் பெரிதும் பாதிப்பிற்குள்ளாக்கப்  போவது திண்ணம்.

மாநிலங்களின் பாட திட்டங்களை இந்திய மருத்துவக் கவுன்சில் மறுப்பதில் நிறைய மர்மங்கள் உள்ளன.இந்தியாவில் உள்ள ஒரு அமைப்பு எவ்வாறு இந்திய மாநிலங்களின் கல்வி முறையை பொருட்படுத்த மறுக்க முடியும் ? இது உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத புதுமை .இத்தனைக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து உலகத்தரமான ஏராளமான மருத்துவர்கள் மாநில பாடத்தில் இருந்து மட்டுமே உருவாகி வந்திருக்கிறார்கள்.அமெரிக்கா ,ரஷ்யா,சிங்கப்பூர் ,மலேஷியா போன்ற நாடுகளின் மருத்துவத்தைக் காட்டிலும் தமிழ்நாட்டில் மருத்துவம் திறமையானது என்பது மட்டுமல்ல,ஒப்பீட்டளவில் விலையும் மலிவானது. எனில் மருத்துவக் கவுன்சில் விதிக்கும்  புதிய நடைமுறைகள் நிச்சயமாக சந்தேகத்திற்குரியவை.

புனே இந்திய ராணுவ மருத்துவக் கல்லூரியின் மருத்துவச் சேர்க்கை மிகுந்த பூடகத்தன்மையை அடைந்து வருகிறது.கேட்பாரில்லை.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"