Posts

Showing posts from October, 2017

கந்துவட்டி பலரோடும் தொடர்புடையது

Image
கந்துவட்டி பலரோடும் தொடர்புடையது கந்து வட்டி என்பது பணத்தைக் கொடுத்து வசூலிப்பவரோடு  மட்டும் தொடர்புடைய ஒன்று அல்ல. பணத்தைக் கொடுத்து வாங்குகிறவர்கள் ஆயிரம் ரூபாய்க்கு ஐம்பது ரூபாய் என்கிற வட்டியில் கல்லூரிப் பேராசிரியர்கள்,வங்கி மேலாளர்கள் ஆகியோரிடமிருந்து பணத்தைப் பெறுகிறார்கள்.இவர்கள் மட்டும் என்றில்லை இவர்கள் எங்கள் ஊரில் அதிகம்.மேலும் பல தரப்பினரும் உண்டு. வசூலித்தாலும் இல்லையென்றாலும் ,வசூலிக்க இயலவில்லை என்றாலும் ஐம்பது ரூபாய் வட்டியை இவர்கள் கொடுத்தே ஆகவேண்டும்.இல்லையெனில் இவர்கள் தொழிலே செய்ய முடியாது.இரண்டாவது காரியம் சமூகத்தின் உள்ள பண தேவையின் இடத்தை கந்து வட்டி பிடித்து வைத்திருக்கிறது.நமது அனைத்து வங்கிகளும் ஏழைகள் விஷயத்தில் அடைந்துள்ள படுதோல்வியின் இடத்திலேயே இது வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு கல்லூரிப் பேராசிரியர் கந்து வட்டியில் பத்து லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள்.மாதம் அவர் அதன் மூலம் ஐம்பதினாயிரத்திற்கும் அதிகமாக வருமானம் பெறுகிறார் என்று பொருள்.யோசித்துப் பார்த்தால் வசூலிப்பவன் இவ்விஷயத்தில் வெறும் கூலியாள் மட்டுமே என்பது புலப்படும்

அபத்தம் என்பது ...

Image
அபத்தம் என்பது ... அகம் எவ்வாறு கம்போஸ் பண்ணப்பட்டு மெருகு பெறுகிறதோ ,அது உருகுலையும் போது ஏற்படுவது  அபத்தம்.அது ஒரு நிலை. ஒன்றில் ஒன்று முற்றுப்பெறுகிற, முடிவடைந்த ஒரு நிலை.  . படைப்பாளிகளைப் பொறுத்தவரையில் இத்தகைய நிலை பல முறை தங்களில் ஏற்படுவதை உணர்ந்திருப்பார்கள்.உடல் கட்டுமானம் உருவாவதைப் போன்றுதான் இதுவும் அகக்கட்டுமானம்.உடல் கட்டுமானம் ஒவ்வொருவருக்கும் ஒருமுறை மட்டுமே நிகழ்கிறது .ஆனால் இந்த அகக் கட்டுமானம் அவ்வாறானதல்ல.ஒன்று உருக்குலைந்து சரிந்து வீழ ,அபத்தம் தொற்றி மற்றொன்று எழுகிறது.அகக்  கட்டுமானத்தில் சரிவே நிகழாதவனை அல்லது சரிவு ஏற்படும் வாய்ப்பே இல்லாதவனை அல்லது அதற்கான வாய்ப்பே ஏற்படாதவனை சராசரி மனிதன் எனலாம்.அவனிடத்தில் படைப்பு செயல்பாடுகள் ஏதுமில்லை.இவன் தனக்கு வெளியில் எதுவுமே கிடையாது என்னும் நம்பிக்கை தரப்பைச் சார்ந்தவன்.தனது நம்பிக்கையை இரும்பு உலக்கையாக பற்றிக் கொள்ள நினைப்பவன் . இருப்பதிலேயே சுலபமான அகக் கட்டுமானம் என்பது அரசியல் கருத்துக்களால் அதனைக் கட்டி நிரப்புவதுதான்.விடலைகள் ,பெரும்பாலான அவசர பெண்கள் ,இரும்பு ஆண்கள் அதிகம் செலாவணி ஆவது இதன் பால்தான

ஆத்மாநாம் விருதென்னும் மதிப்பீட்டின் பாவனை

Image
ஆத்மாநாம் விருதென்னும் மதிப்பீட்டின் பாவனை இலக்கிய மதிப்பீடுகளை உள்ளடக்கமாகக் கொண்டிராத விருதுகள் உண்டு.ரோட்டரி பிரமுகர்களாகும் லட்சியத்தை உள்ளடக்கமாகக் கொண்டவை அவை.உலகத்திற்கு உலகம் ஊருக்கு ஊர் என்று காலங்காலமாக இருப்பவை அவை.அவற்றிற்கும்  மதிப்பீடுகளுக்கும் தொடர்புகள் கிடையாது.அதனாலேயே அவற்றால் பெரும் ஆபத்துக்கள் இருப்பதில்லை.ஆத்மாநாம் போன்ற விருதுகளுக்கும் இலக்கிய மதிப்பீடுகள் அடிப்படை இல்லையென்றாலும் கூட நிறுவன அதிகாரங்களிலிருந்தும் , அதன் அடிமைகளிடமிருந்தும் ஊதி பெருத்து வருகிற இத்தகைய விருதுகள் பின்னாட்களில் ஏராளமான நிறுவன அடிமைகளை உருவாக்கித் தருபவை என்கிற அடிப்படையில் மாசு உண்டாக்குபவை. அனார் ,சச்சுதானந்தன் ,ஏன் ஆத்மா நாம் என்கிற பெயர் உட்பட அனைத்தும் இத்தகைய நிறுவனங்களுக்கு துருப்புச் சீட்டுகள்தாம் .நோக்கம் வேறு வகையானது.இலக்கிய விருதுகளில் நோக்கம் பிறிதொன்றாக இலக்கியத்திற்குத் தொடர்பற்றதாக இருக்குமெனில் அவை தீங்கின் கரங்களில் தவள்பவை என்று அர்த்தம்.இத்தகைய விருதுகள் உருவாக்கித் தருகிற நிறுவன அங்கீகாரங்கள் சூழலின் மீது பயத்தினை ஏற்படுத்துபவை.சூழலின் மீது இவை ஏற்றுகிற பய