Posts

Showing posts from March, 2019

அழிக்கவே இயலாதவன்

Image
அழிக்கவே இயலாதவன் 1 எந்த ஒருவனை அழித்துவிட்டால் அதன்பிறகு நிம்மதியாக இருந்துவிடலாம் என மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறீர்கள் பாருங்கள் அந்த ஒருவன்தான் உங்களால் அழிக்கவே இயலாதவன் 2 அவற்றில் இல்லாதது 1 அத்தனை பொருட்களையும் எனது அறையில் வந்து விசாரித்துக் கொண்டிருக்கும் வயோதிகர் அதன் வழியே அவையல்லாத வேறொன்றை அறிய விரும்புகிறார் ஏதேனும் தடயம் அவற்றில் இருக்கிறதா என நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அவற்றில் இல்லை அவற்றின் தடயம் 2 கடுமையான சுய நலம் கடுமையான பொது நலம் போல பாவனை செய்தபடி இருக்கிறது 3 வீட்டில் ஏற்பட்ட வடுக்கள் வெளியே இறங்கியதும் சாலை விதிகளை தாறுமாறாகக் கடக்கின்றன 4 ஒத்தையடிப்பாதையில் தென்படும் கடைக்கு பலபக்க வாசல் 3 அதனதன் நிழல் 1 வீட்டிற்குள்ளேயே பதுங்கியிருப்பவனுக்கு முன்கோபம் அதிகம் நாயிடமென்றாலும் வள் எனக் குரைப்பான் அடங்கியே இருப்பவனுக்கு ஆத்திரம் அதிகம் 2 கடற்கரை விகாசம் கடலம்மை மனம் போல 3 பூர்வ குடிப்பெண் ஆண் விலங்கு கேட்பாள் ஆண் விலங்கு கிடைத்தால் பெண் விலங்கால் மோதுவாள் 4

உடலே ஒரு மொழிதான்

Image
உடலே ஒரு மொழிதான் 1 இந்த வாழ்க்கையை ஏன் வாழ்கிறான் ? என்று தோன்றிற்று இன்றோர் ஆக்காட்டி ஏற்படுத்திய அதிர்ச்சி இந்த சிறுகூலியின் பசியை எங்கிருந்து பெற்றான் ? இந்த ஆக்காட்டி என்று தோன்றிற்று இரண்டாவதாக கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்கள் நீ காட்டிக் கொடுத்தவர்கள் "இருந்து விட்டு போ " என்கிறார் காட்டிக் கொடுக்கப்பட்டவர்  இந்த வாழ்க்கையை நீ ஏன் வாழவேண்டும் என்று அவர் கேட்கவில்லை இந்த வாழ்க்கையை ஏன் வாழவேண்டும் என்று ஆக்காட்டியும் கேட்டுக் கொள்ளவில்லை எப்படியிருந்தாலும் இந்த வாழ்க்கை சுவாரஸ்யம் குன்றுவதில்லை போலும் இருவருக்கும் 2 என்னை கோபமூட்டுவது எளிது என்னை சிறுமைப்படுத்துவது எளிது அவமானப்படுத்துவது அதனினும் எளிது தாழ்வுணர்ச்சியைத் தூண்டுவது எளிது மிக எளிது காதலிப்பதும் எளிது பின் கைவிடுவதும் எளிது மிக எளிது 3 எனது உடலே ஒரு மொழிதான் சிறுகச் சிறுக திரண்டு வந்தது அது அதற்கு நிறைய காலங்கள் தேவைப்பட்டது அதனுள் சில புத்தகங்கள் உண்டு,ஓவியங்கள் , கவிதைகள் ,இசை ,இசைவின்மை எல்லாம் உண்டு காயங்கள் உண்டு பிரதானமாக மகிழ்ச்சியும் உண்டு எ

"நம்பித்தானே வந்தேன் "என்கிற குரல் குலதெய்வத்தினுடையது

Image
"நம்பித்தானே வந்தேன்  "என்கிற குரல் குலதெய்வத்தினுடையது ----------------------------------------------------------------------------------------------- பொள்ளாச்சி கிரைம் - குற்றத்தின் புதிய வரவு பொள்ளாச்சி பாலியல் கிரைம் அதனுடைய புதிய பரிணாமத்தின் காரணமாகவே அதி முக்கியத்துவம் உடையதாகிறது.ஏற்கனவே இங்கே புழக்கத்தில் உள்ள அனைத்து விதமான பாலியல் குற்றங்களிலிருந்து இது வேறுபட்டிருக்கிறது.குற்றங்கள் அனைத்தையும் ஒரேவிதமானதாகக் கருதுவது ஒருபோதும் குற்றங்களின் அசல் தன்மையை புரிந்து கொள்ள உதவுவதில்லை.சகலவிதமான குற்றங்களிலும் ,பாலியல் குற்றங்கள் உட்பட குற்றவாளிகளிடம் அறம் சார்ந்த கண்ணோட்டம் உண்டு.தொழில்முறை  குற்றங்களில் இந்த அம்சம் சற்று குறைவு என்றாலும் கூட,உண்டு அல்லது இல்லை என்று தீர்மானமாக சொல்ல முடியாத அளவிற்கு கொஞ்சமேனும் உண்டு.ஏற்கனவே இருப்பில் உள்ள குற்றங்கள் இத்தகையவை.புதிய தலைமுறையினர் குற்றங்களுக்குள் வருகிற போது முற்றிலுமாக குற்றத்தின் அறம் இல்லாமல் ஆகிவிடுவதை பொள்ளாச்சி பாலியல் கிரைம் உணர்த்துகிறது குற்றத்தில் எவ்வாறு அறமும் தார்மீகச்  செயல்பாடும்  இருக்கும் என்ப

சிறந்த நல்லுறவே தற்போதைய தேவை

Image
இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் மிகச் சிறந்த நல்லுறவே தற்போதைய தேவை வரலாற்றில் அப்படியிருந்ததில்லை என்று எவரேனும் கூறுவார்களேயானால் அவர்களின் முன்பாக வைப்பதற்கு ஏராளம் தரவுகள் வரலாறு நெடுகிலும் உண்டு.தவறுகள் இருதரப்பிலும் உண்டா என்றால் உண்டு.மிகப் பெரிய தவறுகள் கூட இருபக்கமும் உண்டு.யாருடைய தவறு உயர்ந்தது ,யாருடைய தவறு செம்மையானது என்றெல்லாம் விவாதித்துக் கொண்டிருக்க முடியாது.தவறுகள் அனைத்தும் தவறுகளே . அவை இப்போது தேவையற்றவை.வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்துவதன் மூலமாக ; இன்று இவ்விரு தரப்புகளும் அரசியல் பகடைகளாக ஆக்கப்பட்டிருப்பதன் அபத்ததிலிருந்து தங்களை முழுவதுமாக தற்காத்துக் கொள்ள முடியும்.இது தவிர்த்து வேறு வழிகள் எதுவுமே கிடையாது. இவ்விரு தரப்புகளில் இணக்கத்திற்கு எதிரானவர்களைக் கண்டறிந்து ஒதுங்கி கொள்ள பழக வேண்டும் .இவர்கள் மாற்று சமூகத்தவர்களைப் பற்றிய அச்சங்களை தங்கள் சொந்த சமூகங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டே இருப்பவர்கள் .பிற சமூகங்களைப் பற்றிய குறைந்த பட்ச அறிவும் இல்லாதவர்கள். இவர்களில்