Posts

Showing posts from March, 2021

நூல்களை அடுக்குதல்

Image
  நூல்களை அடுக்குதல் நூல்களை அடுக்குவது பற்றி ம. நவீன் Navin Manogaran சுவாரஸ்யமான பதிவு ஒன்றினை அவருடைய பக்கத்தில் எழுதியுள்ளார். அதில் "நூல்களை அடுக்குதல் ஒருவகையில் மனதையும் அடுக்குவதுதான் "என்று ஆரம்பித்துள்ளார். பெரும்பாலும் அவர் குறிப்பிட்டிருப்பது சரியே. நூல்கள் எவ்வாறு உங்கள் மனதில் அடுக்கப்பட்டுள்ளதோ ,தோராயமாக அதை ஒத்தே உங்கள் மனமும் இருக்கும் .நூலற்றவர்களின் மனம் ;மனமாகப் பொருள் கொள்ள தக்கது அல்ல இனம் தெரியாத ஒருவருடைய வீட்டிற்குள் நுழைந்தால் கூட வீட்டில் நூல்கள் அடுக்கப்பட்ட விதத்தை வைத்தே ,அது யாருடைய வீடாக இருக்கும் என கணித்து விட முடியும். எம் எல் ஏ ;எம் பி வீடுகளெனில் அடுக்கும் பணியை பெரும்பாலும் வெள்ளையடிக்க வந்தவரே செய்திருப்பார். அடுத்து வீடு வெள்ளையடிக்கப்படும் வரையில் நூல்கள் அதே வரிசையில் இருக்கும் .வாசிக்காதவன் கையில் மாட்டிக்கொள்கிற நூல்கள் ;விலங்கு மாட்டி ஜெயிலில் இருப்பது போலத்தான். குறைந்த பட்சம் வாசிக்காதவன் எனினும் ஆசையுள்ளவன் கையிலேனும் போய் சேருதற்கே நூல்கள் விரும்பும். எப்போதேனும் படித்துவிடமாட்டானா ? புதிதாகக் கட்டப்பட்ட வீட்டில் கல்கிய

எண் திசைகள் எல்லாவற்றுக்கும்

Image
  1 பிறந்த குழந்தை மடியில் கனவு காண்கிறது தூங்கி விளையாடுகிறது அசைத்து விடப்பட்ட ஊஞ்சல் போல சுய நினைவற்று மெல்ல ஆடுகின்றன தாய் மடியில் தாயின் தொடைகள் தாய் மடியாக எவ்வளவு விரிகிறது இந்த மடி பிரபஞ்சம் அளவிற்கு பிரபஞ்சம் அளவிற்கு விரிந்த மடி ஆணிடம் வரும் போது சுருங்கிச் சுருங்கி ; சுருங்கி சிறு யோனியின் அளவிற்கு ஒரு துளையாகிறது அதை பிரபஞ்சம் அளவிற்கு பெரிதாக்குகிறது பூமியில் பிறந்தவுடன் குழந்தை 2 மூக்கில் சிறுகோணல் உதட்டில் சிறுபிளவு பல்லொன்றில் அழகிய ஒடிவு எல்லாம் சிற்பமாய் அமைந்தன இல்லையென மறுத்து உள்ளே கடத்தினாள் உள்ளில் சிறுகோணல் உள்ளில் சிறுபிளவு ராக்ஷ்த ஒடிவு உடைந்து துகள்துகளாய் தொங்குகிறது சிற்பம் 3 ஆசையின் தலைதான் எவ்வளவு பெரியது ? 1 விளைவின்றி ஒரு பழம் எடுக்க வழியுண்டா? ஒரு குடம் உடைக்க வழியுண்டா? உலை வடிக்க வழியுண்டா சொல் 2 எந்தக் குடம் உடைந்தாலும் அதன் விளைவு அதனருகில் இருக்கும் 3 படம் எடுப்பதற்கே பாம்பிற்கு விஷம் காளைக்கு கொம்பு சாமிக்கு ஈட்டி பாபிக்குப் பெண்டிர் 5 ஐந்து தலை நாகமும் சாதுதான் தலைவைத்துப் படுத்திருப்பது யார் என்பதைப் பொறுத்திருக்கிறது அது ஆசையின் தலைதான் எவ்