Posts

Showing posts from September, 2021

தீவிரம் வேடிக்கை வேறுபாடு - 14

Image
1 சமூகத்தை எதிர்கொள்ளுதல் சமூகத்தை எதிர்கொள்வது எப்படி என்று யாரும் நமக்கு கற்றுத் தருவதில்லை.அப்படி சரியாகக் கற்றுக் கொள்ளவும் இயலாது.நாமே கற்றுக் கற்று தெளிய வேண்டிய பாடம் இது.கடைசிவரையில் கற்றுக்கொண்டே இருக்க வேண்டிய பாடமும் கூட .கோட்பாடுகள் வழியே ,கொள்கைகள் வழியே ,அரசியல் சார்புநிலைகளின் வழியே இதன் பாதை துலங்குவதில்லை.வாழ்வதன் மூலமாக மட்டுமே இதன் புகைமூட்டங்கள் அகலும் . இளைஞர்கள் பலர் சமூகத்தை எதிர்கொள்வதில் ஏற்படுகிற இடர்பாடுகளை தாங்கள் நம்பும் கோட்பாடுகளோடு தொடர்பு படுத்திவிடுகிறார்கள்.அவர்களுக்கு கோட்பாடுகளின் உள்ளடக்கமும் விளங்குவதில்லை.சமூகத்தை எதிர்கொள்ளும் வாய்ப்பும் கிடைப்பதில்லை.கோட்பாடுகளில் சமூகத்தை எதிர்கொள்ளும் பிரச்னையை ஒப்படைக்கும்போது சமூகத்தை ஒருபோதும் எதிர்கொள்ள இயலாத இடத்தை நோக்கி அவர்கள் விரைவாக முன்னகர்ந்து விடுகிறார்கள். தாங்கள் தேர்வு செய்யும் கோட்பாடுகளுக்குத் தக்கவாறு " நான் பெண்ணாக இருப்பதால் இந்த சமூகத்தை எதிர்கொள்ள முடியாமல் இருக்கிறேன்.இந்த சாதியில் பிறந்ததால் என்னால் இந்த சமூகத்தை எதிர்கொள்ள முடியவில்லை "என்று ஏதோ ஒருவிதத்தில் பிரச்னையை

அம்மா என் கவிதையின் மொழியானாள் - லக்ஷ்மி மணிவண்ணன்

Image
அம்மா என் கவிதையின் மொழியானாள் - லக்ஷ்மி மணிவண்ணன் நேர்காணல்-முகமது மதார் https://www.padaippu.com/thagavu/28 ... 1 கவிதையை முதன்முதலில் எங்கு சந்தித்தீர்கள் ? முதல் கவிதையை கண்டடைந்த அனுபவம் எனில் "ஆடும் முகங்களின் நகரம் " என்ற தலைப்பில் தொண்ணூறுகளில் என நினைவு "இன்டியா டுடே "இலக்கியச் சிறப்பிதழில் வெளிவந்த கவிதையைச் சொல்வேன்.பெரு நகருக்குச் சென்று திரும்பும் வழியில், நகர் கடந்ததும் சாலையிலும் அதன் ஓரங்களிலும் பெருகிய தனிமையைக் கண்டடைந்த கவிதையைச் சொல்லலாம்.சுந்தர ராமசாமியும்,தோப்பில் முகம்மது மீரானும் சிலாகித்த கவிதை அது.இவ்வளவு சிறிய வயதில் இப்படி எழுத முடிவது ஆச்சரியமானது என்று தோப்பில் நண்பர்கள் மத்தியில் வைத்து அந்த கவிதை பற்றி பேசினார்.நெருங்கிய நண்பர்கள் பலரிடம் அந்தக் கவிதையைப் படித்தீர்களா என்று சுரா கேட்டுக் கொண்டிருந்தார். 2 ஒரு கவிஞனால் கவிதையை வைத்துக் கொண்டு என்ன செய்து விட முடியும்? குடும்ப அநீதிகளில் துயருற்று வாடிய காலங்களில் ,சிறு பிராயத்திலேயே கவிஞர்கள் எனக்கு உவப்பானவர்களாக ,ஏதோ ஒருவிதத்தில் தர்மத்தை நிலை நிறுத்துபவர்களாகத் தெரிந்தார்கள்.அல்லது