Posts

Showing posts from June, 2021

எனக்கு வந்தா ரத்தம் ,எதிரிக்கு வந்தா தக்காளிச் சட்டினி ?

Image
  எனக்கு வந்தா ரத்தம் ,எதிரிக்கு வந்தா தக்காளிச் சட்டினி ? குண்டர் சட்டம் சரிதான் என்று மட்டுமல்ல,தேச பாதுகாப்புக்கு அவசியம் என வாதிடுகிறார் ஜென்ராம்.புதிய தலைமுறையில் வாதிட இதற்கு ஹென்றி டிபேனை அழைக்கவில்லை.அவருக்கு தன் வாய்கொண்டு கீறிய கோடுகள் இருக்குமாகையால் அதனைத் தாண்டுவதற்கு ஏராளம் பயிற்சிகளும் ஜாலங்களும் அவசியப்படும்.ஒருபடி மேலே போய் ஜனநாயகத்தைக் காத்திட குண்டர் சட்டம் அவசியம் என அவர் பாய்ந்து செல்கையில் அப்படியே புல்லரித்தது..அவர் ஒரு இடதுசாரி ஊடகவியளாளர். எனக்கு இந்த இடது முற்போக்குகள்,தி.க,தி.மு.க அல்லகைகள்,லிபரலஸ் ஆகியோர் நம்முடைய சமுகத்தில் நாலாந்தரமானவர்கள் என தோன்றுவதற்கு இந்த இரட்டை நிலையே பிரதானமான காரணம். கிஷோர் கே சாமியோடு உடன்படும் விஷயங்களும் அல்லாத விஷயங்களும் எனக்கு உண்டு.அவர் ஒரு பைத்தியக்காரர் அல்லர்.குற்றவாளியும் அல்லர்.அவருக்கு தெளிந்த அரசியல் பார்வைகளும் ,சார்பு நிலைகளும் உள்ளன.ஒரு அரசு இப்போது அவரை குண்டர் சட்டத்தில் சிறை பிடிக்கலாம்,மற்றொரு அரசு அவருக்கு பிறிதொரு சந்தர்ப்பத்தில் அமைச்சர் பதவி கூட வழங்கக் கூடும்.ஏனெனில் அவர் அரசியலாளர்.திருமுருகன் காந்தி ப

ஒற்றை இந்துத்துவா ஆதிக்க எதிர்ப்பு கருத்தரங்கம் முழுமையான காட்சிப் பதிவு

  4 ஆண்டுகளுக்கு முன்பு ஒற்றை இந்துத்துவா ஆதிக்க எதிர்ப்பு கருத்தரங்கம் முழுமையான காட்சிப் பதிவு Shruti TV க்கு நன்றி https://www.youtube.com/watch?app=desktop&v=z7q5DdgB3tw&fbclid=IwAR0OsarZ7JHog0GCjEzJlUFgqHGmNQbECLSmzvDBzzHCIXd3wdB5kOaIsMk

சமயங்களில் பெண்களின் இடம் என்ன ?

Image
  சமயங்களில் பெண்களின் இடம் என்ன ? இந்து சமய தொல்சடங்குகள் முதல் மேல்மரபுகள் வரைஎன பலவற்றில் பெண்கள் முக்கிய பங்குகளில் ஏற்கனவே இருக்கிறார்கள்.பூஜைகள் செய்கிறார்கள்,வாழ்த்து வழங்குகிறார்கள்,ஏற்று நடத்துகிறார்கள்,இவை இன்று நேற்று நடப்பதல்ல.காலங்காலமாக நடந்து வருவது.நடப்பது.சில ஆகம விதிகளின்படி பின்பற்றும் கோயில்களில் இவை நடைபெறா.ஆனால் கிறிஸ்தவ ,இஸ்லாமிய வழிபாட்டிடங்களில் பெண்களுக்கு பூஜை உரிமை இல்லை.ஆவர்கள் ஒரு தேவாலயத்தை ஏற்று நடத்தும் உரிமை கொண்டவர்களும் அல்லர். வாப்பா ஆயிரம் ஆண் நபிகள் இருக்கிறார்கள் ஏன் வாப்பா ஆயிரம் ஆண் நபிகளில் ஒரு பெண் நபி கூட இல்லை ? இது ஹெச்,ஜி.ரசூலின் மத அரசியல் கவிதைகளில் ஒன்று.எனக்கு தனிப்பட்ட முறையில் அரசியல் எழுத்துகளில் இருந்த நம்பிக்கையே போய் விட்டது.இந்த மத அரசியல் கவிதையிலும் எனக்கு ஏற்பு இல்லை.பண்பாட்டு அடித்தளம் சார்ந்த விஷயங்களின் முன்பாக மொக்கையான கேள்விகளை முன்வைப்பதில் எனக்கு எவ்விதமான ஏற்பும் இல்லை.ஆனால் ரசூலின் இந்த மொக்கைக் கேள்வி இந்து மதம் நோக்கி நீளுமாயின் உடனடியாக காரைக்கால் அம்மையையும் ,ஆண்டாளையும் ,அறம்வளர்த்த மங்கையையும் எனக்கு பதில் கூ

எழுவர் விடுதலையில் உள்ள சிக்கல்

Image
  எழுவர் விடுதலையில் உள்ள சிக்கல் எழுவர் விடுதலைக்கு எதிரான சிக்கல் ; அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ,எதிர்மறைஅரசியல் தரப்புகளாலேயே ஏற்படுகிறது.உணர்ச்சிக் கொந்தளிப்புகளும்,தேசியத்திற்கு எதிரான பிளவு அரசியல் சக்திகளும் இந்த தாமதத்தை உண்டாக்குகிறார்கள்.இல்லையெனில் அனுதாபத்தின் பேரில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் இரண்டு விஷயங்கள் இந்த வழக்கை முன்னிட்டு முக்கியமானவை.முதலில் இவ்வழக்கு ஒரு நாட்டின் பிரதம மந்திரி கொல்லப்பட்ட வழக்கு.எழுவர் விடுதலைக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழ் நாட்டின் எந்த அரசியல் குழுக்களிடமும் இதன் முக்கியத்துவம் குறித்த உணர்வு இல்லை.இந்த கொலையை,எழுவர் ஆதரவு அரசியல் சக்திகள் பெரும்பாலும் ஆதரிக்கிறார்கள்.வழக்கிற்காக பேசுவது ஒன்றாகவும் , பொதுவில் பேசுவது வேறொன்றாகவும் இருக்கிறது.அற்புதம்மாள் இந்த எதிர்மறைச் சக்திகளை தன்னை அண்டவிடாது தற்காத்துக் கொண்டிருப்பார் எனில் ,சாதகமாவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும்.மாறாக எந்த நாடாக இருந்தாலும், தனது நாட்டின் பிரதம மந்திரியை கொன்றமைக்காக, இவர்கள் ஒராண்டிற்குள் தண்டிக்கப்பட்டிருப்பார்கள். இந்தியாவின் ஜனநாயகப்பண்பால் மட்

உலகத்திற்கு வெளியில் உள்ள இடம் -13 கவிதைகள்

Image
உலகத்திற்கு வெளியில் உள்ள இடம் 1 முதன்முறையாக பார்த்த மனிதருடன் பேசிக் கொண்டோம் அவ்வளவு புத்துணர்ச்சியுடன் இருந்தார் அவர் புத்துணர்ச்சியுடன் பேசினார் அவரைப் பற்றி எனக்குத் தெரியாது என்னையும் அவருக்குத் தெரியாது என்னிடம் புத்துணர்ச்சி கண்டார் கொஞ்சம் கொஞ்சமாக அவரை எனக்குத் தெரிந்தது பாதகமாக ஒன்றும் இல்லை அவருக்கும் என்னைத் தெரிந்தது பாதகமாக ஒன்றும் கிடையாது என்றாலும் முதலில் பார்த்த மனிதனை தொலைத்து விட்டோம் சில நாட்களில் இருவருமே 2 செயல் வேதத்திலிருந்து வருகிறது 1 பறக்கைக்கு வடகிழக்கு ஆசாரிமார் தெருவிற்கு தெற்குப்பக்கம் செட்டியாரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டேன் தாகமாக இருக்கிறது கொஞ்சம் தண்ணீர் தா ... என நேற்று கேட்டு வந்தவள் இசக்கி என்பது விளங்க எனக்கு இன்று இந்நேரம் வரையில் ஆகியிருக்கிறது 2 நான் மாரியம்மனாக்கும் என்று தாணுமாலயன் சன்னதி முன்னின்று ஒருத்தி சொன்னாள் இல்லையென்று நினைத்து திரும்பி விட்டீர்கள் அழுதரற்றி சொன்ன கணத்தில் அவள் அம்மனாகத்தானிருந்தாள் 3 வேறொரு இடத்தில் வேறொருவருக்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறேன் என்னையே நினைத்துக் கொண்டிராதே என்கிறாள் பாருங்கள் அது தேவ பாஷை 4 பகவா