Posts

Showing posts from October, 2022

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

Image
  "புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்" நான் சந்திக்கிற இளைஞர்களில் பத்தில் ஏழுபேர் சொல்லுகிற குறை மிகவும் பொதுவானது." என்னை எவரும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் " என்று சொல்கிறார்கள்.பெரும்பாலும் அவர்களிடம் உங்களை எதற்காக பிறர் புரிந்து கொள்ள வேண்டும் ? என்றே திருப்பி கேட்கிறேன்.நீங்கள் யார் யாரை புரிந்து கொண்டிருக்கிறீர்கள் ? இருக்கட்டும் .பிறர் உங்களை புரிந்து கொள்வதற்கு முதலில் நீங்கள் யார் ? ஏதேனும் கறவை மாடுகள் வைத்து விவசாயம் செய்கிறீர்களா ? இல்லை வாத்து மேய்க்கிறீர்களா ? எதற்காக உங்களைப் பிறர் புரிந்து கொள்ள வேண்டும் ? நீங்கள் யார் ? இப்படி கேட்பதால் பெரும்பாலும் அவர்கள் அகம் உடைந்து போகிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.பிறகு இப்படி அகம் உடைப்பவனோடு வாழ்நாள் முழுதும் பகையாகவே இருப்பார்கள்.தமிழில் இப்படித்தான் நடக்கிறது.ஏனெனில் இது அகம் உடைகிற இடம் மட்டுமல்ல அகந்தை உடைகிற இடமும் கூட . பெரும்பாலும் இந்த குரல் செயலின்மையின் குரல்.நான் எதுவும் செய்ய மாட்டேன் ஆனால் என்னை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் எப்படி நடக்கும் ? எதையேனும் செய்து கொண்ட

இந்துக்கள் ஒன்று படவேண்டும்

Image
  இந்து வாக்காளர்கள் அரசியல் மயப்பட வேண்டும் இல்லையென்றால் பிற மத அரசியல் சக்திகளின் அன்றாட நகக்கீறல்களில் இருந்து தப்பிக்க இயலாது.அவர்கள் பெரிய திட்டங்களின் அடிப்படையில் இந்து எதிர்ப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த நகக் கீறல்கள் ஒவ்வொன்றும் அன்றாடம் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் அருகதை கொண்டவையும் அல்ல.சிறுமையும் ,நாலாந்தரமானஅரசியல் தன்மையும் கொண்டவை. எல்லாம் தோலுரித்து வெளிப்படை ஆகிவிட்டவையும் கூட. ஒட்டு மொத்தத்தில் இந்து எதிர்ப்பு,இந்து சிதைப்பு என்னும் நோக்கங்களின் அடிப்படையின் பின்னின்று இவை செயல்படுகின்றன.மதமாற்றம் ஆதார நோக்கம் இந்து மத எதிர்ப்பை இதுகாறும் சனாதன எதிர்ப்பு என்றும் பிராமண எதிர்ப்பென்றும் பூசி மெழுகி உருட்டிக் கொண்டிருந்தவர்கள் சமீபகாலமாக நேரடியாகவே இந்து எதிர்ப்பில் ஈடுபடுகிறார்கள். இது ஒரு மிஷன். நிறுத்த மாட்டார்கள். எது ஒரு தேசத்தின் தலையாய மதமோ அதனை அழிக்க முற்படுதல் இந்த மிஷனின் உலகளாவிய வேலைத் திட்டம். இந்து எதிர்ப்பு என்பது இன்று தமிழகத்தில் வணிகத்திலும் இடம் பெற்றுள்ளது.முக்கியமாக திரைப்படத் துறையில்.ஊடகங்களிலும் ,அரசியலிலும் மட்டுமே அதன் ஊடுருவல் அ