Posts

புலன்கள் அழிந்த நிழல்கள் - நெடுங்கதை

Image
புலன்கள் அழிந்த நிழல்கள் என் படுக்கையைப் பார்க்கிற எவருக்கும் என் படுக்கை ஒரு நோயாளியின் படுக்கை என்கிற மாதிரியான உணர்வைக் கொடுத்துவிடும்.கடைசி காலத்தில் என் பாட்டி அவளுடைய படுக்கையை இப்படித்தான் அலங்கோலப்படுத்தி வைத்திருந்தாள். அவளது படுக்கையைப் பார்த்துக் கொண்டிருப்பதுகூட மனசை சிதறடித்துவிடும். அல்லது எரிச்சல் உண்டாக்கிவிடும். அப்படியிருக்கும் அவள் படுக்கை வயோதிகத்துக்கும் படுக்கைக்குமுள்ள சம்பந்தம்போல இருக்காது. அது அதற்கும் உள்ளே ஏதோ ஒன்று ஊடாடிக் கொண்டிருக்கும். சில நள்ளிரவுகளில் அவளது ஊளைகளும் அர்த்தப்படுத்த முடியாத ஒலிச்சிதறல்களும் அவள் படுக்கையின் அலங்கோலத்திலிருந்து கிளம்புவது போலவே எனக்குத் தோன்றும். என்னுடைய படுக்கையும் மூன்று வருடங்களாய் இப்படியாகிப் போனது உள்ளூர பெரிய துக்கத்தை உண்டாக்கியிருப்பது யாருக்கும் அநேகமாய் வெளியில் தெரியாது என்றே நினைக்கிறேன். பாட்டியின் படுக்கையோடு என்னுடைய படுக்கை ஒத்துப்போகிற மாதிரியான பல தடயங்களை மறைத்துவிட நான் மேற்கொள்கிற முயற்சிகளில் என்னை நானே தூக்கி நிறுத்திக் கொள்வது மாதிரியான மகிழ்ச்சியிருக்கிறது. ஆனாலும் இப்படியான ...

ஜெயாவும் செளந்திரபாண்டியனும் - சிறுகதை

Image
ஜெயாவும் செளந்திரபாண்டியனும் எண்பத்தொன்பது தொண்ணூர்ல எனக்கு கேர்ல் ப்ரண்டா இருந்தது ஜெயா. ஜெயாவுக்கு அப்ப இருபத்திமூணு இல்லன்னா இருவத்தி நாலு வயசா இருந்திருக்கும். எனக்கு இருபத்தியேழு வயசு நடந்திட்டிருந்தது. ஜெயாவுக்கு கே.என். ஹாஸ்பிட்டல்ல நர்ஸ் வேலை. ரொம்ப குரூரமாக தெரியற மென்மையான மனசு அவளுக்கு. அது எனக்குப் பிடித்திருந்தது. அந்த நாட்கள்ல நான் தூங்குன நேரமும் ஜெயாவோட பேசிட்டிருந்த நேரமும்தான் அதிகம். எவ்வளவோ பேசியிருக்கோம். என்னவெல்லாமோ பேசியிருக்கோம். நெஜமாவே மனசு திறந்து சொல்றதா இருந்தா அது உண்மையான ப்ரண்ட்ஷிப்தான், காதல் இல்லைன்னு என்னால உறுதியா சொல்ல முடியாது. ஆரோக்கியமான நட்பில் இருந்துதான் ஆரோக்கியமான காதல் உருவாக முடியும். அப்படீன்னு பல தடவ ஜெயாகிட்ட சொல்லியிருக்கேன். ஜெயாவும் அத ஆமோசிச்சிருக்கா. ஆனாலும் ஜெயாவும் நானும் ஒருத்தர ஒருத்தர் காதலிக்கிறோம் அப்படீன்னெல்லாம் எந்தத் தீர்மானமும் எடுத்துக்கிட்டதில்ல. அவளுக்கு ஹாஸ்பிட்டல்ல நைட்ஷிப்ட் வரும்போது ஆரம்பத்தில் கொஞ்சநாள் நானும் ஹாஸ்பிட்டல்ல அவளோட முழிச்சிருந்திட்டு பகல்ல வீட்ல போய் தூங்குவேன். ரொம்ப ச...

எனது கதைகள்

Image
எனது கதைகள் எனது கதைகள் அதிகம் வாசிப்பிற்குள்ளாகவில்லை என்கிற மனக்குறை எனக்கு உண்டு .அதற்கு அந்த கதைகளின் தன்மையை காரணமாகி சொல்ல முடியாது.எல்லாமே பெரும்பாலும் எளிய கதைகள்தான்.எனது மனக்குறையை பெரும்பாலும் பொதுவில் சொல்ல இதுவரையில் முயன்றதில்லை.தமிழில் எனக்கு முந்தைய ,அதற்கும் முந்தைய தலைமுறையைச் சார்ந்த  பல மேதைகளின் எளிய கதைகள் கூட அதிகம் வாசிப்பிற்குள்ளானதில்லை என்பதும் காரணம்.அவர்களோடு ஒப்பிடும்போது எனது கதைகள் கவலை கொள்வதற்கு ஏதுமில்லை. நெருங்கிய நண்பர்கள் அல்லது வாசிப்பிலிருந்து தொடங்கி நண்பராகக் கூடியவர்கள் இவர்களே பொதுவாக வாசகர்களாக இருக்கிறார்கள்.கவிதைகளை சக கவிகள் அறிந்து வைத்திருக்கிறார்கள். என்னுடன் பேசவோ உரையாடவோ தொடங்குகிற ஒருவன் எனது படைப்புலகத்திற்குள்ளிருந்து வரும்போது எனக்கு எளிதாக இருக்கிறது.நான் என்ன சொல்கிறேன் அல்லது சொல்ல வருகிறேன் என்பதை அவன் தோராயமாகக் கண்டுணர்ந்து விடுகிறான்.எழுப்புகிற பேச்சின் சாரம் அவனுக்கு விளங்குகிறது.எனது படைப்புலகத்துடன் தொடர்பற்ற எதை பற்றியுமே நான் உரையாடுவதில்லை என்பதை புரிந்து கொள்வதில் அவனுக்கு ஒரு சிரமமும் இருப்பதில்லை.பிற ப...

அம்பலம் - சிறுகதை

Image
அம்பலம் நாலு தூணு, ஒரு ஓட்டுக் கூர, ஒரு திண்ண, பக்க்த்தில் ஒரு இளவட்டக் கல்லு, ஒரு வேம்பு, பயக்க கார் வைக்கிற இடுப்பளவுள்ள பட்ட பூவரசு இப்படியாட்டு உள்ள அம்பலம் ஊருக்கு புறத்த இருந்து. அம்பலம் நிறைய சோகங்கள சந்திச்சிருக்கு. சந்தோசங்களையும் சந்திச்சிருக்கு. சோகமோ சந்தோசமோ எதுக்குமே அப்பல்லாம் அம்பலம் அசைஞ்சதில்லை. அப்படியொரு கம்பீரம் அம்பலத்துக்கு. சிலநேரம் பாத்தா அம்பலம் எனக்கு எங்க பாட்டா வைத்திலிங்க நாடார் ஈஸிசேர்ல படுத்திருக்கதுபோல இருக்கும். அவரும் அம்பலத்தப்போல சாவுயதுவர சடஞ்சதே இல்லை. ஏக்கியம்மங் கோயில்ல பாட்டா வந்து நின்னார்னா ஆராசன வந்த சொள்ளமாடனுக்கு தொட நடுங்கும். ஏக்கியம்மனா இருக்கட்டு, பலவேசக்காரனாவட்டு, சொள்ளமாடனாவட்டு, நீலனாவட்டு எல்லா சாமியும் ஆராசனவந்து முதக்குறி இல்லன்னா ரெண்டாங்குறி எங்கப் பாட்டாவுக்குத்தான். அப்படியொரு கம்பீரம் அவர்ட்ட இருந்து. சொள்ளமாடனுக்குச் சல்லடம் பூட்டச்சில எங்க பாட்டா ஒத்தையில சொள்ளமாடன தூக்கிப் பிடிச்சுக்கிடுவாரு. சொள்ளமாடன் பந்தத்த வாங்கிற்று தரமாட்டேன்னு ஒத்தக்கால்ல நிக்கச்சில ஆங்காணுங்காணுங்னு சொல்லி ‍எங்க பாட்டையாதான்...