Posts

விளிம்புக்கு மற்றொரு பெயர் செம்மரக் கடத்தல்

Image
விளிம்புக்கு மற்றொரு பெயர் செம்மரக் கடத்தல் மனிதவதை ஒரு தனித்த உயிரி.மனித அகத்தில் வளரும் தேவதை அது.மனிதனின் ஒரு மாய உறுப்பு அது.ஆண்குறியைப்  போலவும் அல்லது பெண்குறியை போலவும் அதற்கு அழகுண்டு.தவிர்க்க இயலா ஏழாம் பாகம் .அது குரூரமானது என்கிற பிரகடனத்தின் உள்பாகத்தில் கச்சிதமாகப் பொருந்திக் கொள்வது.மனித நாகரிகம் வளருவதாக நம்பும் ஒவ்வொரு கணத்திலும் அதுவும் புதிய அழகுணர்ச்சிகளுடன் வளைந்து கொண்டே இருக்கிறது.இல்லையென்பாரிடம் முதுகில் எவ்வாறு இனிப்புடன் ஏறியமர்ந்து கூடுகட்டிக் கொள்வது என்பது அதற்குத் தெரியும் .பழைய காலங்களில் கரடு முரடாக இருந்ததைக் காட்டிலும் நவீன அமைப்புகளில் அதற்கு நேர்த்தி அதிகம்.அதனை பொய்யின் பேராலும் அனுமதித்தோமெனில் மிகவும் உற்சாகம் கொண்டு விடும்.இது எதிரிக்கானது என்பது போல அது முதலில் பாசாங்கு செய்யும்.அது சுயவதை என்பதை கண்ணுக்குப் புலப்படச் செய்யாதவரையில்தான் அது தனது சாமர்த்தியத்தை காக்க முடியும்.அதனை பொய்யின் பேராலும் அனுமதிக்கத் தொடங்கும் போது அது மனதின் பிற நுட்பமான உறுப்புகள் அத்தனையையும் கொன்று விடும்.அதன் சாமர்த்தியம் அதுவே . செம்மரக் கடத்தல் என்னும்...

கைது செய் சுப்பிரமணியன் சாமியை

Image
கைது செய் சுப்பிரமணியன்  சாமியை தொடர்ந்து தமிழர்களையும் பொறுக்கிகள் என்றும்  தமிழ் மக்களின் போராட்டங்களை பொறுக்கிகளின் போராட்டம் எனவும் பா.ஜ .க முத்த தலைவர் தொடர்ந்து சுப்பிரமணியன் சுவாமி கூறிவருகிறார்.ஒரு மாநிலத்தின் மக்கள் அனைவரையும் பொறுக்கிகள் என கூறுவதும் உத்தேசிப்பதும் எத்தகைய இழிவான ஒரு மன நிலை ? இனவெறுப்பின் அடிப்படையில் சொல்லப்படுகிற இந்த கூற்று தமிழ்நாட்டில் உள்ள சில செலீப்பர் செல்களின் செயல்பாடுகளுக்கு ஊக்கமூட்டுவதாக உள்ளது.சுப்பிரமணியன் சுவாமியின்  சொல்லும் செயலும் தேசிய இணக்கத்திற்கு பெரும் இடையூறையும் ஒருமைப்பாட்டுணர்ச்சிக்கு பங்கத்தையும் ஏற்படுத்தக் கூடியவை.இது இந்திய தேசத்திற்கு எதிரான ஒரு செயல்.பா.ஜ .க இது குறித்து தனது விளக்கத்தைத் தரவேண்டும்.ஒருவேளை பா.ஜ .க இவ்விஷயத்தில் விறுதே  இருக்குமெனில் அவர்களுடைய தமிழர்களைப் பார்வையும் இதுதான் என்று எடுத்துக் கொள்ளலாமா ? என்ன நினைக்கிறார்கள் ? .இது போன்றே மராத்தியர்கள் பொறுக்கிகள் ,கன்னடர்கள் பொறுக்கிகள் என்று பிற தரப்புகளும் பேசத் தொடங்கினால் அது எப்படி இருக்கும் ? அசிங்கமாக இராதா ? தொடர்ந்...

கக்கூஸைக் கண்டு இந்த அரசாங்கம் ஏன் அச்சப்படுகிறது ?

Image
கக்கூஸைக் கண்டு இந்த அரசாங்கம் ஏன் அச்சப்படுகிறது ? இந்தியா முழுவதும் என்று கணக்கில் கொண்டால் தினமும் தோராயமாக 200  குறும்பட ,ஆவணப்பட முயற்சிகள் நடைபெறுகின்றன என்று சொல்லலாம்.இதில் தமிழ்நாட்டில் நடைபெறுபவை மட்டும் இருபதுக்கும் அதிகம் இருக்கும்.இவை எதற்குமே தணிக்கையோ ,வரைமுறைகளோ கிடையாது.அல்லது இதுவரையில் அப்படியான வரையறைகள் இல்லை.தொலைக்காட்சிகளில் இடம் பெறுபவை ,போட்டிகளில் வெல்பவை திரையிடப்படுபவை எல்லாமே இதில் அடக்கம்.  அறுபது வருடங்களுக்கு முன்னர் செய்திநிறுவன ,அரசாங்க விளம்பரப் படங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட தணிக்கை விதிமுறைகள் மட்டுமே இந்தியாவில்  உள்ளன.அதில் படத்திற்கான திரைக்கதையைக் கொடுத்து முதலில் அனுமதி பெற வேண்டும்.திரையரங்குகளில் வெளியிடப்படும்  அரசு விளம்பர  படங்களுக்கான இந்த  விதிமுறைகள் ,கடந்த பதினைந்தாண்டுகளில் உருவாகியிருக்கும் குறும்படங்களுக்கோ , அல்லது ஆவணப்படங்களுக்கோ பொருந்தக் கூடியவை அல்ல.  இவை வெள்ளைக்காரர்களால் ஏற்படுத்தப்பட்டு அப்படியே பின்பற்றப்பட்டு வரும் விதிமுறைகள்.அந்த விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்ட காலத்தில் திரையரங்குகளில் வ...

கவிதைகளுடன் "கக்கூஸ்" ஆவணப்பட விவாதம்

Image
கவிதைகளுடன் "கக்கூஸ்" ஆவணப்பட விவாதம் நிழற்தாங்கல் படிப்பிற்கான வெளியில் நாங்கள் விரும்பியபடி ஏற்பாடு செய்திருந்த "கக்கூஸ் " ஆவணப்படத்தை திரையிட இயலவில்லை.அரசாங்கத்தின் நெருக்கடிகள் காரணமாக திரையிடலை நேற்று தவிர்க்க வேண்டியதாயிற்று.முறைபிரகாரம் பின்னர் திரையிடுவோம் . ஆனால் கூட்டம் வழக்கம் போல நடைபெற்றது.பலருக்கும் தகவல்கள் சொல்லி திரையிடல் இல்லை என்பதை தெரிவித்த பின்னரும் எங்களுடன் வந்திருந்தவர்களுக்கு நன்றி.நேற்றைய கூட்டத்தில் நான் என்னுடைய கவிதைகள் சிலவற்றைப் படித்தேன் .அதில் ஒரு கவிதை அனைவருக்கும் பிடித்திருந்தது.ரோஸ் ஆன்றா ,சூர்யா ஆகியோரும் தங்கள் கவிதைகளை படித்தார்கள் . நேற்றைய அமர்வில் அனைவருக்கும் பிடித்திருந்த அந்த கவிதை இது. "அந்தச் சிறுவன் நேற்று முன்தினம் இரவை தூக்கமின்மையில் கடந்து கனரக லாரியில் இங்கு வந்து கொட்டப்பட்டவன் துரத்தப்பட்ட இரவு முகமெங்கும் அப்பியிருக்கிறது. கொண்டைவாழையிலையை உங்கள் முன்னால் போட்டு நீர் தெளிகிறான் பாம்பு கொத்தியது போலே துடித்து "தண்ணியை இப்படியா ஊற்றுவார்கள் ?" எனக் கேட்டு அவன் அம்மையைத் திட்டுகிறீர்கள்...

"கக்கூஸ் " ஆவணப்படம் திரையிடல் தள்ளி வைப்பு

Image
                                                            திவ்ய பாரதியின் "கக்கூஸ் " ஆவணப்படம் திரையிடல் தள்ளி வைப்பு - நிழற்தாங்கல் அறிவிப்பு திவ்யா பாரதி இயக்கி தயாரித்த "கக்கூஸ் " திரைப்படம் இன்று அய்யா வைகுண்டசாமி அவதாரதினத்தை முன்னிட்டு நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளியில் பறக்கை இல்லத்தில் திரையிடப்படுவதாக இருந்தது .மாலை 5 மணிக்கு நடைபெற விருந்த திரையிடல் சில சட்ட ரீதியிலான அனுமதிகளை இந்த படத்திற்கு பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.உரிய அனுமதிகள் பெறப்பட்ட பின்னர் நாங்கள் இந்த ஆவணப்படத்தைத் திரையிடுவோம் .தற்போது ஏற்பட்ட சிரமத்திற்கு பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம் . இந்த படத்திற்கான இந்திய தணிக்கைத் துறையின் அனுமதி கிடைக்க பெற்ற பின்னர் உரிய அனுமதியுடன் நிழற்தாங்கல் இந்த ஆவணப்படத்தைத் திரையிடும் . ஒத்துழைப்பிற்கு நன்றி .

நிழற்தாங்கலுக்கு திவ்யாவின் "கக்கூஸ்" ஆவணப்படம் திரையிடலுக்கு வந்துசேருங்கள்

Image
அய்யா வைகுண்டசாமி அவதார தின விழா நல்வாழ்த்துக்கள் நிழற்தாங்கலுக்கு திவ்யாவின்  "கக்கூஸ்" திரையிடலுக்கு வந்துசேருங்கள் இடம் - நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளி பறக்கை ,நாகர்கோயில் தொடர்பு எண் - 9362682373 திரைப்பட இயக்குனர் ,நடிகர்,எழுத்தாளர் அஜயன்பாலா திரையிடலைத் தொடங்கி வைக்கிறார். எழுத்தாளர் கோணங்கி கலந்து கொள்கிறார் 4 -3 -2017 சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு மாசி 20 அய்யா வைகுண்டசாமி அவதார தினத்தில் ...நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளியில்   திவ்யாவின்  "கக்கூஸ்"   ஆவணப்படம் திரையிடல் காரியார்த்தம் நிரம்பியதொரு செயல் என்பது எனது எண்ணம்.அய்யாவின் எண்ணத்திற்குகந்த செயல் இது. திவ்யாவின் இந்த ஆவணப்படம் மலக்குழி சாவுகளை பற்றியது.இன்னும் நாம் மலக்குழி சாவுகள் நிகழும் இடத்தில்தான் குற்றபோதும் ஏதுமின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது சுயநலத்தின் ஈனத்தனம்.பொறுப்பில் நம்மையும் இணைத்துக் கொள்ளுதலே இந்த திரையிடல். அய்யா வைகுண்டசாமி தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம் என்றவர்.மற்றபடி அன்பிலும் அடங்கேன்,சாஸ்திரத்திலும் அடங்கேன்,செய்த தவத்திலும் அடங்கேன்,கும்பிடிலு...

நிழற்தாங்கலில் "ஜெயமோகனுடன் ஒரு நாள் " மார்ச் 26 ஞாயிறு

Image
நிழற்தாங்கலில் "ஜெயமோகனுடன் ஒரு நாள் " மார்ச் 26 ஞாயிறு நாகர்கோயில் "நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளியின்" சிறப்பு நிகழ்வாக மார்ச் 26 ஞாயிறு "ஜெயமோகனுடன் ஒரு நாள் " சந்திப்பு நடைபெற உள்ளது.காலை அமர்வு 8 மணிக்கு கவிஞர் பா.தேவேந்திரபூபதி Devendhira Poopathy Bhaskarasethupathy கவிதைகள் வாசித்து இந்நிகழ்வைத் தொடங்கி வைப்பார்.மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் என்னுடைய Lakshmi Manivannan சில கவிதைகள் வாசிப்புடன் மதிய அமர்வு தொடங்கும். நாங்கள் ஏற்பாடு செய்த சில நிகழ்வுகளில் ஜெயமோகனுடன் சரியாக உரையாட இயலவில்லை என்கிற குறை வாசகர்களுக்கும் ,சக படைப்பாளிகளுக்கும் உள்ளது.அவர்கள் பலமுறை இதுகுறித்துத் எங்களிடம் தெரிவித்து விட்டார்கள்.அக்குறையை அகற்றும் விதமாகவும் நிழற்தாங்கல் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து வருகிறது. ஆசை பலமடங்கு இருப்பினும் கூட ஐம்பது பேருக்கும் அதிகமாக இப்போது இந்நிகழ்வில் பங்கேற்பாளர்களை அனுமதிக்கும் சூழ்நிலை இல்லை.ஐம்பது பேருக்கு உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கு கட்டணங்கள் ஏதும்...