Posts

உடலின் பாதி நோய்கள் மனம்தான் .மீதி வயோதிகம்

Image
உடலின் பாதி நோய்கள் மனம்தான் .மீதி வயோதிகம் எனது உடலின் பாதி நோய்கள் மனம்தான் என்பதை மிகப்பெரிய தாமதத்திற்குப் பிறகுதான் கண்டு கொண்டேன்.சிறு வயது தொடங்கி ஏதேனும் மாத்திரைகளைத் தின்று கொண்டிருக்க வேண்டும்.இல்லையெனில் எல்லாம் சரியாக இருக்காது என்றோர் எண்ணம்.இந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகி ஒருவேளைக்கு 100  கிராம் அளவிற்கு மிச்சர் தின்பதை போல மாத்திரைகள் பெருகி விட்டன. தூக்கப் பிரச்சனை எனக்கு இருபதாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டது.அதுவரையில் அளவற்ற தூக்கம்.தூக்கப் பிரச்னையை இதுகாலம் வரையில் மாத்திரைகளைக் கொண்டே இழுத்து வந்தேன்.கழிந்த  ரமலான் தினத்தன்று எனக்கு முக்கியமாக தேவைப்படக் கூடிய தூக்க மாத்திரை கிடைக்கவில்லை.அது வழக்கமாக நான் மருந்துகள் வாங்கிற இஸ்லாமியரின் கடையில் மட்டுமே கிடைக்கும்.நகரம் முழுக்க தேடியலைந்தும் வேறு எங்குமே கிடைக்கவில்லை.தூக்கம் ஒருநாள் கெட்டால் சரியாக உணவு உண்ண முடியாது,இரண்டு நாட்கள் கெட்டால் வலிப்பு உண்டாகி விடும் என்பதே மனப்பதிவு.அப்படித்தான் நடக்கவும் செய்யும்."அப்பாவை புனிதப்படுத்துதல் "கவிதை நூலை வாசித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.பலர் ...

இணக்கம் நம்பிக்கை அன்பு மாற்றுப்பண்புகள்

Image
  இணக்கம் நம்பிக்கை அன்பு  மாற்றுப்பண்புகள் மோதுதல்,சந்தேகித்தல் ,வெறுத்தல் ஆகிய பண்புகள் எண்பதுகளின் பிற்பகுதியில் கருத்தியல் ரீதியில் தமிழ்நாட்டில் அரசியல் தரப்பினரால் முன்வைக்கப் பட்டன.இந்த மூன்று பண்புகளையும் தங்கள் அரசியல் தன்னிலையில் கொண்டிருத்தலே தீவிர நிலை என்று நம்பப்பட்டது.அதற்கு முன்பு வரையில் இந்த பண்புகள் அடிப்படைவாதிகளின் பண்பாகவும் , பழமைவாதிகளின் பண்பாகவும் இருந்தவை.முற்போக்கு அரசியல் முகாம்களில் இந்த பண்புகள் அரசியல் குணங்களாக வரையறுக்கப் பட்டபோது ,பெரிய உள்ள கிளர்ச்சி ஏற்பட்டது.அனைத்தையும் சந்தேகி,அனைத்திலும் வேறுபட்டு வெறு .பின்னர் சந்தகித்தவற்றை மோது.தன்னிலையில் போர்க்குணம் பெருக இது உதவும் என்பதே இந்த குணங்களை அரசியல் குணங்களாக முன்வைத்த அரசியல் ஆசான்களின் உபதேசம்.இன்று அரசியல் அரங்குகள் அத்தனையிலும் கோலோச்சுகிற பண்புகளாக இவை ஒவ்வொரு அரசியல் தன்னிலையிலும் உறுதிப்பட்டிருக்கிறது. இந்த மூன்று குணங்களையும் அடிப்படையாகக் கொண்டிராத நபர்களை ,நான் இப்போதெல்லாம் தீவிரமான  சூழலுக்குள் சந்திப்பதே இல்லை.இந்த மூன்றில் இரண்டு மட்டுமே இருக்கும் ஒருவரைப் ...

"இடங்கை இலக்கியம் "

Image
"இடங்கை இலக்கியம் " ஜெயமோகன் அந்திமழை இதழில் எழுதியுள்ள இடதுசாரி இலக்கியம் பற்றிய "இடங்கை இலக்கியம் " என்னும் கட்டுரை தமிழ்நாட்டில்; இன்னும் ஐம்பது ஆண்டு காலத்திற்கு இடதுசாரி இலக்கியம் பற்றிய வரையறைக்கு போதுமான கட்டுரை .இந்த கட்டுரை குறித்து காலையில் பேசிய கோணங்கி "இடதுசாரி இலக்கியம் பற்றியும் ஜெயமோகன் அளவிற்கு வேறு யாராலும் பேச இயலாதிருப்பது இங்குள்ள சோகம்தான்" என்றார்.பரந்து விரிந்த அர்த்ததளத்தில் வைத்து ,பெரும்பாலும் யாரையுமே தவிர்க்காது இந்த கட்டுரையினை ஜெயமோகன் எழுதியிருக்கிறார்.இடதுசாரிகள் பற்றிய இந்த கட்டுரையின் முக்கியத்துவத்தை இந்த கட்டுரை வழியாக அறிவது ஒரு வழியென்றால், ஒரிஜினல் இடதுசாரிகள் இந்த இதழின் பிற பக்கங்களில் எழுதியிருப்பவற்றைப் படிப்பது மற்றொரு வழி.பெரும்பாலும் அவர்கள்  உளறியிருக்கிறார்கள் என்று சொல்வதே பொருத்தமானது. ஜெயமோகன் அளவில் விரிந்த தளத்தில் ; இடதுசாரி இலக்கியம் என்பதற்கு சொல்லியிருக்கும் வரையறை மிகவும் முக்கியமானது.மனித மையம்,வரலாற்றுணர்வு ,பொருளியல் அடைப்படை ஆகியவற்றை முதன்மை கொள்ளச் செய்யும் படைப்புகளை இடதுசாரிப் படைப்...

வஞ்சம் என்பது அகத்தைக் கொல்லும் விஷம்

Image
வஞ்சம் என்பது அகத்தைக் கொல்லும் விஷம் வஞ்சம் என்பது அகத்தைக் கொல்லும் விஷம் உங்களை ஒரு விஷயம் பாதிக்கிறது .பாதித்துக் கொண்டே இருக்கிறது.ஆனால் இதனை நீங்கள் வெளிப்படுத்தினால் உங்களை சுற்றியிருக்கும் நண்பர்கள் நவுசுவார்கள்.உங்கள் குழு உங்களை சந்தேகிக்கும் . சமூகம் கீழிறக்கும் என்பவை கருதி எப்போது மூடிக் கொள்கிறீர்களோ அப்போதிலிருந்து உங்கள் அகமும் மூடிக் கொள்கிறது.அதன் வழியாக அத்தனை நச்சுக்களும் சிறுகச்சிறுக உங்களை பற்றிக் கொள்கின்றன . கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் உங்களையும் அறியாமலேயே கீழிறங்கி கொண்டிருப்பீர்கள்.பிறகு பல சமயங்களில் அகம் எவ்வாறு தன்னிடம் மூடிக் கொண்டது என்பது கூட விளங்குவதில்லை.அகம் மூடிக் கொள்கிறவன் ஒருபோதும் எழுத்துக்கு லாயக்குப் படவே மாட்டான்.அவனிடம் விழிப்புணர்ச்சி தூண்டபட்டு ; கடின உழைப்புடன் அகத்தை மீண்டும் முதலிலிருந்தே தொடங்க வேண்டுமாயின் ,முதலிலிருந்தே அவனைப் பாதிக்கத் தொடங்கியவர்களிலிருந்தே சொல்லித் தொடங்கி வர வேண்டும். பாதிப்பு என நான் குறிப்பிடுவது,ஏற்கனவே உங்களிடம் இருந்த அகம் உடைந்த விதத்தைப் பற்றியே. இந்த வஞ்சத்தில் மற்றொரு ரகம் உண்டு.பாதிக்கிற எழுத்தா...

கிராமத்து பிராமணர்களுக்கு இடஒதுக்கீட்டில் இடம் தரப்பட வேண்டும்

Image
கிராமத்து பிராமணர்களுக்கு இடஒதுக்கீட்டில் இடம் தரப்பட வேண்டும் அனைவரும் அர்ச்சகராவது காலத்தில் எவ்வளவு முக்கியமோ , அதேயளவிற்கு கிராமத்து பிராமணர்களுக்கு இடஓதுக்கீட்டில் இடம் ; வாய்ப்புகளில் ஏற்படுத்தித் தர வேண்டியதும் முக்கியம்.இரண்டுமே தவிர்க்கப்படக் கூடாதவை .இந்த இரண்டில் ஒன்றை மட்டும் ஏற்கிறேன் என்று எவரேனும் பேசுவார்களேயானால் ,குரல் எழுப்புவார்களேயாயின் அவர்கள் வெறும் அரசியல் தரப்பினர் மட்டுமே .பண்பாடு தொடர்பான விஷயங்களில் வெறும் அரசியல் குரல்கள் மட்டுமே போதுமானவை அல்ல.அதுபோல பண்பாடு சார்ந்த விஷயங்களில் பிறர் உரிமைகள் காக்கப்படுதல்  அவசியமானது.இன்றைய நிலையில் கிராமத்து பிராமணர்கள் ஒடுக்கப்படுபவர்கள் மட்டும் இல்லை.பாதுகாப்பின்மையை உணர்ந்து கொண்டிருப்பவர்கள்.வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கிற பிராமணர்கள்  அனைவரையும் ஒடுக்கப்பட்டோராக கருதுதலே நியாயம். நீதி.யாரையுமே வஞ்சிப்பது நல்லதல்ல என்னும் போது பிராமணனை மட்டும் வஞ்சிப்பது எப்படி நீதியாக இருக்க முடியும் ? அனைவரும் அர்ச்சராக வேண்டும் என்பது சரிதான்.ஆனால் அதற்கு வெறும் பட்டையப் படிப்புகள்  மட்டுமே போதுமானவை அல்ல.அர்ப...

திருக்காதல் செய்வோருக்கு வழித்துணைக் கவிதைகள்

Image
காதல் அந்தாதி - திருக்காதல் செய்வோருக்கு வழித்துணைக் கவிதைகள் 1 நீ வந்து சேருவது வரையில் ஜடமாக இருந்தேன் இப்போது கொழுந்து விட்டு எரிகிறது திருமேனியெங்கும் உயிர்த்தீ பருகக் கொஞ்சம் நீர் கொடு அந்நீரில் மட்டுமே தணியும் பற்றியிருக்கும் நெருப்பு 2 இந்த பிரபஞ்சம் ஏன் இத்தனை அழகாய் இருக்கிறது என்பது உன்னைச் சந்தித்த பின்னரே விளங்குகிறது ஜோதி பிரகாச ஓசைகள்,காட்சிகள் மெல்லிய ஓடையிலிருந்து நிலத்தில் கசிந்து விழுவது போல எனக்குள் விழுந்து கொண்டிருக்கின்றன இத்தனை நாட்களாய் படாத சலனங்கள் மூச்சிரைக்க உன்னை நோக்கி ஓடி வந்து இடைப்பட்ட நாட்களை தினசரி காலண்டரிலிருந்து கரைத்துக் கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு நாளும் குறையக் குறைய என் உயிரிலிருந்து வளர்ந்து கொண்டிருக்கிறது ஒளியின் பிறை நிலவு 3 நம்மைப் பார்த்து எல்லாமே அதிசயிக்க வேண்டும் காடுகள் மலைகள் மேகங்கள் நதிகள் கடற்கரைகள் நட்சத்திரங்கள் எல்லாமே கைகள் இறுக கோர்த்து ஓரேயுயிராக பயணிப்போம் நமது குழந்தைகளின் மீது நட்சத்திரங்கள் ஜொலிக்க வேண்டும் 4 உன்னைத் தொடுவது போலே தொட்டென்னை குளித்துக் கொண...

நீங்கள் என்னிடம் வேறு எதையோ எதிர்பார்க்கிறீர்கள்

Image
நீங்கள் என்னிடம் வேறு எதையோ எதிர்பார்க்கிறீர்கள் -கவிதைகள் 1 பாதி ஆயுள் முடிந்தது மூன்று கழுதை வயதும் ஆகிறது நீ கொல்லப்படுவதற்கான எத்தனை தகுதியை வளர்த்து வைத்திருக்கிறாய் இதுகாறும் ? நான் கொல்லப்படுவதற்கான அனைத்து தகுதிகளையும் கைக்கருகிலேயே வளர்த்து வைத்திருக்கிறேன் உனது தகுதியைச் சொல்லி விரைந்து வந்து எனது அறைக் கதவைத் தட்டு தேவைப்படும் ஆயுதங்கள் அனைத்தையும் உனக்கு நானே பரிசளிக்கிறேன் 2 படித்துறையில் சாயங்காலம் இறங்கிக் குளிக்கும் செல்ல மகளை இடுப்பில் எடுத்து கொஞ்சிக் கொண்டிருக்கிறது இந்த புனிதக்குளம் அவள் மூழ்க ஆடைகள் எழும்பி தாமரை வட்டம் குதூகலம் பக்கத்து படித்துறையில் இறங்கி கொண்டிருக்கும் பையனை ஏனென்று கூட கேட்க தயாராயில்லை 3 தள்ளாடி ஆட்டோவில் வந்திறங்கும் தந்தையின் கையில் பால் பாக்கட் கைக்குழந்தையை ஒரு கையால் தூக்கிச் செல்வது போல செல்கிறான் தள்ளாடுகிறது குழந்தை அத்தனைத் தள்ளாட்டத்திலும் அவன் கை குழந்தையை கைவிடவில்லை பால்பாக்கட் முனையை சுருட்டிப் பிடித்திருக்கிறான் பால்பாக்கட்டை எடுத்து கொண்டு தருகிறேன் என்று சொன்னவனை ...