மகிழ்ச்சி நிறையட்டும் பொங்கல்

பொங்கல் நல்வாழ்த்துகள்

கவிகள்,படைப்பாளிகள் ,வாசகர்கள் ,நண்பர்கள் உறவினர்கள்
அனைவருக்கும் மகிழ்ச்சி நிறையட்டும் பொங்கல்

ஒரு பண்பாட்டிற்குள்ளிருந்து கொண்டு பிற பண்பாட்டின் அம்சங்களை காட்டுமிராண்டித்தனமானது என்று சொல்வதும்   ,பொறுக்கித் தனமானது என்றெல்லாம் தீர்ப்புகள் வழங்குவதும்  , தடை செய்ய முயற்சிப்பதும்  எத்தகைய மனோபாவத்தை அடிப்டையாகக் கொண்டது என்பது விளங்கவில்லை.இந்தியா என்பது பல்வேறு பண்பாடுகளின் சங்கமம் .

பிற பண்பாடுகளின் சாரங்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ,தங்களுடையவற்றை மட்டுமே பண்பாடாக கருதி பிறவற்றை காட்டுமிராண்டித்தனமானவை என்று கருதுவார்களேயானால் இங்குள்ள ஒவ்வொருவரின் பண்பாட்டையும் இதே அளவுகோலை வைத்து காட்டுமிராண்டித்தனமானவை என்று நிரூபணம் செய்து விட முடியும் .அத்தகையதொரு சூழ்நிலையில் இங்கு எவரேனும் மிஞ்ச முடியுமா என்று தெரியவில்லை.

பண்பாட்டு மேட்டிமைத்தனங்கள் எல்லா நிலைகளிலும் அகல வேண்டியவை .அகலட்டும் .அகலும்.

களையக்  களைய வந்து தொற்றும் கவலைகள் களைந்து
மகிழ்ச்சி நிறையட்டும் பொங்கல் 

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"