நீட் எதிர்ப்பு மசோதாவிற்காக பன்னீர்செல்வம் அவர்களுக்குப் பாராட்டுக்கள்

நீட் எதிர்ப்பு மசோதாவிற்காக பன்னீர்செல்வம் அவர்களுக்குப் பாராட்டுக்கள்

நிறைய வாய்ப்பேச்சில் பேசிக் கொண்டிருப்பதைக்  காட்டிலும் சாமர்த்தியமாக செயல்களில் ஈடுபடுவது சிறந்தது.ஒரு சாதாரணனின் தன்னடக்கத்துடன் பன்னீர் செல்வம் சில காரியங்களை முன்னெடுப்பது தமிழ்நாட்டிற்கு புதிய வகை.

நாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் சாதுர்யமாக சில காரியங்களை சாதிப்பதை ஒப்ப மத்திய அரசிடம் காரியங்களை சாதிக்க முயல்கிறார் . பொதுவாக குறைபாடு என பலர் கருதுகிற அவருடைய சுபாவத்தில் ,இந்த தன்மை இப்போது சாமர்த்தியமாக மினுங்குகிறது.

NEET  CBSE என்றுதான் இந்த தேர்விற்கான  விண்ணப்படிவமே உள்ளது.அப்படியானால் இது CBSE  மாணவர்களுக்கு மட்டுமே உரிய தேர்வுதானே ? ஸ்டேட் போர்டில் பயிலும் மாணவர்கள் மருத்துவப் படிப்பிறகு தகுதியற்றவர்களா ? என்பதை முதலில் இந்த தகுதி பேசும் அறிஞர்கள் விளக்கட்டும்.

நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு அரசு சட்டசபையில்  கொண்டு வந்துள்ள மசோதாவை அனைவரும் ஒருங்கிணைந்து சாத்தியமாக்க வேண்டும்.கல்வி , உயர்கல்வி ஆகியவை
மாநிலங்களில்   இருந்து துண்டிக்கப்படுவதும் , மத்திய அரசாங்கத்திற்கு தாரை வார்க்கப் படுவதும் கூடாது.மாநிலங்களின் சுயேட்சைத் தன்மை விஷயங்களில் கல்விக்கு பிரதானமான பங்கு உண்டு.மாநிலங்களுக்கு மாநிலம் கல்வி ,பண்பாடு போன்றவற்றில் உள்ள வித்தியாசங்களைக் களைந்து எல்லாவற்றையும் சீருடைக்குள் கொண்டுவரக் கூடாது.

இந்தியா பல்வேறு பண்பாடுகளும் வேறுபாடுகளும் நிறைந்த பிரதேசம்.அதனாலேயே அழகு பெறுவது.எல்லாவற்றையும் சீருடைப்படுத்தி ஒருநிறமாக்குவது ஒருபோதும் நல்லதல்ல  . இந்நினைவு அகலாமலிருப்பதே பேறுடைத்து.ஒவ்வொரு மாநிலங்களும் தங்களுக்கென தனித்தன்மைகள் கொண்டவை.கல்வி , தொழிநுட்பம் என்றாலும் சரி ,மருத்துவமானாலும் சரி பண்பாட்டுடன் உறுதியான தொடர்பு கொண்டது .

இது போன்ற பொதுவான பிரச்சனைகளில் ஒருங்கிணைவோம் என்பது உணர்த்தப்பட வேண்டும்.அதுவே தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது.

ஒருபோதும் சமூக நீதிக்கோ ,ஏழைகளுக்கோ இடையூறு ஏற்படுத்தும் நல்வரங்களேயானாலும் நமக்கு அவை  அவசியமில்லை.  ஓடி ஒழுகும் பேருந்தானாலும் பரவாயில்லை.முதலில் அது எல்லா ஊருக்கும் செல்லத் தொடங்க வேண்டும்.
அப்புறமான விஷயத்தை அப்புறம் பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"