இந்த வழக்கை ஏன் இப்போது எடுக்கிறீர்கள் ; இதன் பெயர் உள்நோக்கம் இல்லையா ?
இந்த வழக்கை ஏன் இப்போது எடுக்கிறீர்கள் ; இதன் பெயர் உள்நோக்கம் இல்லையா ?
இந்த வழக்கின் ஆவணம் ஜெயலலிதா எதிரி என்று சொல்கிறது.அவர் மறைந்து காயம் இன்னும் ஆறியபாடில்லை.அவர் விடுதலையான வழக்கும் கூட இது.பின்னர் மேல்முறையீட்டில் பேரில் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்ட வழக்கு . பொதுவாக தேதிக் குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படும் வழக்குகளை தேர்வு செய்வது நீதிமன்றம் மட்டுமே என்றால் ,அதனை நோயுற்ற குரங்கிடம் போய் சொல்வதே நலமானது .இப்படி தேதி குறிப்பிடாமல் முடங்கியிருக்கும் வழக்குகள் இந்தியாவில் இன்றைய தேதியில் எத்தனை இருக்கும் ?
தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படும் வழக்குகள் பொதுவாக உடனடி தீர்வுகள் எட்டமுடியாமல் காலத்தை இழுக்கும் தன்மை கொண்டவை என்பது நீதிமன்றங்களின் மறைமுக பொருள் .இந்த வழக்கோ ஜெயலலிதாவை முதல் எதிரியாகக் கருதும் வழக்கு .இதனை இந்த நேரத்தில் எடுப்பதற்கு என்ன அவசியம் வந்தது ? நீதிபதிகளும் நீதிமன்றங்களும் அரசியல் நடைமுறைகளில் அலைவரிசைக்கு ஏற்ப இந்தியாவில் மாற்றம் பெறுவது நிச்சயமாக ஒரு நல்ல அறிகுறியல்ல.இது போன்று நடைமுறைக்கு வருகிற செயல்கள் யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் காவு வாங்கக் கூடியவை என்பது நினைவிருக்குமேயானால் நல்லது.எல்லா அரசியல் எதிரிகளையும் இது போல பட்டறையில் காய்ச்சி விடமுடியும்.
எனக்கிருக்கிற முக்கியமான எளிய கேள்வி.இந்த வழக்கு சசிகலா சொத்து சேர்ப்பு வழக்கல்ல.பிரதானமான எதிரி ஜெயலலிதாவை முதன்மைப்படுத்தும் வழக்கு இது.அவர் மறைந்து ஈரம் காய்வதற்கு முன்னரே அரசியலாக்கப்படும் இந்த வழக்கின் பின்னணியின் ஆர்வம் காட்டும் பன்னீரும் ,மோடி தரப்பினரும்தான் இந்த விஷயத்தில் நோக்கமற்றிருப்பவர்களா சண்டிகளே ?
இந்த தீர்ப்பு முயற்சி எதையும் விஷேசமாக செய்து விடப்போவதில்லை.ஆனால் அரசியல் நிலவரத்தை திசை திருப்பும் ஒரு வியூகம் இதில் அடங்கியிருக்கிறது அதுதான் விஷயம்.சசிகலாவை ஏன் அ.தி.மு.கவின் தரப்பாக ஏற்கவேண்டும் என்கிற செய்தி அடங்கியிருப்பதும் இந்த விஷயத்தில்தான்.
இந்த வழக்கின் ஆவணம் ஜெயலலிதா எதிரி என்று சொல்கிறது.அவர் மறைந்து காயம் இன்னும் ஆறியபாடில்லை.அவர் விடுதலையான வழக்கும் கூட இது.பின்னர் மேல்முறையீட்டில் பேரில் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்ட வழக்கு . பொதுவாக தேதிக் குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படும் வழக்குகளை தேர்வு செய்வது நீதிமன்றம் மட்டுமே என்றால் ,அதனை நோயுற்ற குரங்கிடம் போய் சொல்வதே நலமானது .இப்படி தேதி குறிப்பிடாமல் முடங்கியிருக்கும் வழக்குகள் இந்தியாவில் இன்றைய தேதியில் எத்தனை இருக்கும் ?
தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படும் வழக்குகள் பொதுவாக உடனடி தீர்வுகள் எட்டமுடியாமல் காலத்தை இழுக்கும் தன்மை கொண்டவை என்பது நீதிமன்றங்களின் மறைமுக பொருள் .இந்த வழக்கோ ஜெயலலிதாவை முதல் எதிரியாகக் கருதும் வழக்கு .இதனை இந்த நேரத்தில் எடுப்பதற்கு என்ன அவசியம் வந்தது ? நீதிபதிகளும் நீதிமன்றங்களும் அரசியல் நடைமுறைகளில் அலைவரிசைக்கு ஏற்ப இந்தியாவில் மாற்றம் பெறுவது நிச்சயமாக ஒரு நல்ல அறிகுறியல்ல.இது போன்று நடைமுறைக்கு வருகிற செயல்கள் யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் காவு வாங்கக் கூடியவை என்பது நினைவிருக்குமேயானால் நல்லது.எல்லா அரசியல் எதிரிகளையும் இது போல பட்டறையில் காய்ச்சி விடமுடியும்.
எனக்கிருக்கிற முக்கியமான எளிய கேள்வி.இந்த வழக்கு சசிகலா சொத்து சேர்ப்பு வழக்கல்ல.பிரதானமான எதிரி ஜெயலலிதாவை முதன்மைப்படுத்தும் வழக்கு இது.அவர் மறைந்து ஈரம் காய்வதற்கு முன்னரே அரசியலாக்கப்படும் இந்த வழக்கின் பின்னணியின் ஆர்வம் காட்டும் பன்னீரும் ,மோடி தரப்பினரும்தான் இந்த விஷயத்தில் நோக்கமற்றிருப்பவர்களா சண்டிகளே ?
இந்த தீர்ப்பு முயற்சி எதையும் விஷேசமாக செய்து விடப்போவதில்லை.ஆனால் அரசியல் நிலவரத்தை திசை திருப்பும் ஒரு வியூகம் இதில் அடங்கியிருக்கிறது அதுதான் விஷயம்.சசிகலாவை ஏன் அ.தி.மு.கவின் தரப்பாக ஏற்கவேண்டும் என்கிற செய்தி அடங்கியிருப்பதும் இந்த விஷயத்தில்தான்.
Comments
Post a Comment