ருக்மணி அக்கா-மூன்றாம் தலைமுறைப்பெண்கள்-உற்சாகமற்ற பழைய பியேட் கார்
நாகர்கோயிலில் நடந்த சாகித்ய அகாதமியின் கவிதை வாசிப்பரங்கில்
வாசித்த ஐந்து கவிதைகள்
வாசித்த ஐந்து கவிதைகள்
ருக்மணி அக்கா
ருக்மணி அக்கா
இடுப்பில் குழந்தையுடன்
தன்னிடமிருந்த விஷேசமான புகைப்படக்கருவியால்
தனது புகைப்படங்களை படமெடுத்துக்கொண்டாள்.
வளர்ந்த மகனின் கண்கொண்டு
படமெடுக்கும்
லென்சின் மூடியைத் திறக்க மறந்த
கருவி அது .
இடுப்பில் குழந்தையுடன்
தன்னிடமிருந்த விஷேசமான புகைப்படக்கருவியால்
தனது புகைப்படங்களை படமெடுத்துக்கொண்டாள்.
வளர்ந்த மகனின் கண்கொண்டு
படமெடுக்கும்
லென்சின் மூடியைத் திறக்க மறந்த
கருவி அது .
சுற்றுலா ஸ்தலத்தில்
பல கோணங்களில்
ருக்மணியக்காவின் புகைப்படங்களை
எடுத்துக்கொண்டன புகைப்படங்கள் .
பல கோணங்களில்
ருக்மணியக்காவின் புகைப்படங்களை
எடுத்துக்கொண்டன புகைப்படங்கள் .
லென்சின் மூடியைத் திறக்க மறந்த
ருக்மணியக்காவின் புகைப்படக்கருவி
மூன்று கண்கள் கொண்டது .
உடலுக்குள்ளிருந்து அறியப்படாத கண்ணீராய்
திரளும் கண் ஒன்று.
அவளாய் ஆக இயலாத கனவின்
கண் மற்றொன்று .
புகைப்படங்களை சாட்சியாய்
பார்த்துக் கொண்டிருந்த சுற்றுலா ஸ்தலத்தின்
கண் மூன்றாவது.
ருக்மணியக்காவின் புகைப்படக்கருவி
மூன்று கண்கள் கொண்டது .
உடலுக்குள்ளிருந்து அறியப்படாத கண்ணீராய்
திரளும் கண் ஒன்று.
அவளாய் ஆக இயலாத கனவின்
கண் மற்றொன்று .
புகைப்படங்களை சாட்சியாய்
பார்த்துக் கொண்டிருந்த சுற்றுலா ஸ்தலத்தின்
கண் மூன்றாவது.
எவராலும் அச்சிட்டுப் பார்க்க இயலாத
புகைப்படங்களுடன் கூடிய பழுதடைந்த கருவி
திருமணப்புடவை சுற்றப்பட்டு
இரும்புப் பெட்டியில் இருக்கிறது .
எடுக்கப்பட்ட எல்லா படங்களுமே
ருக்மணியக்காவுக்கு
தெளிவாய் தோன்றுகின்றன .
புகைப்படங்களுடன் கூடிய பழுதடைந்த கருவி
திருமணப்புடவை சுற்றப்பட்டு
இரும்புப் பெட்டியில் இருக்கிறது .
எடுக்கப்பட்ட எல்லா படங்களுமே
ருக்மணியக்காவுக்கு
தெளிவாய் தோன்றுகின்றன .
2
மூன்றாம் தலைமுறைப்பெண்கள்
ஊருக்கு வரும் போதெல்லாம்
பராதி சொல்லி அழுதுவிட்டுப் போவாள்
தங்கம்மாள் மாமி .
ரெங்கமணி மாமி யாரைக் கண்டாலும்
அழுதுவிடுவாள் .
காலத்தின் சிறகு கொண்டு வந்து
கொடுத்த நரம்பாய் நெளியும்
உள்ளுடலின் கனத்தால்
சதா நீர் துளிர்த்து நிற்பாள் ஒரு சித்தி .
பராதி சொல்லி அழுதுவிட்டுப் போவாள்
தங்கம்மாள் மாமி .
ரெங்கமணி மாமி யாரைக் கண்டாலும்
அழுதுவிடுவாள் .
காலத்தின் சிறகு கொண்டு வந்து
கொடுத்த நரம்பாய் நெளியும்
உள்ளுடலின் கனத்தால்
சதா நீர் துளிர்த்து நிற்பாள் ஒரு சித்தி .
ஊரிலிருந்து குழந்தையை அடித்திழுத்து ,
சாபமிட்டு
திரும்பமாட்டேனென சபதமிட்டுச் செல்பவள் ;
சாபமிட்டு
திரும்பமாட்டேனென சபதமிட்டுச் செல்பவள் ;
கணவன் ஊரைச் சாபமட்டு
குழந்தையை அடித்திழுத்துத் திரும்பி
அம்மாவுக்குப் பராதிகள் சொல்வாள் .
குழந்தையை அடித்திழுத்துத் திரும்பி
அம்மாவுக்குப் பராதிகள் சொல்வாள் .
பராதியில் உடலை வதைத்து
சுற்றம் முறிப்பாள் அக்கா .
சுற்றம் முறிப்பாள் அக்கா .
ஊர் வீடு ஆண்களையெல்லாம்
உத்தமர்கள் என்று சொல்வதற்கில்லை
உத்தமர்கள் இல்லை என்றும் சொல்வதற்கில்லை .
உத்தமர்கள் என்று சொல்வதற்கில்லை
உத்தமர்கள் இல்லை என்றும் சொல்வதற்கில்லை .
ஊருக்குள் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக
உடல் கொண்டலையும் பழந தெய்வங்களின்
முகக்குறி கொண்டலையும் தாவரங்களும்
வளரும் நிலா வெளிச்சமும்
ஊருக்குள்
மூன்றாம் தலைமுறையாக நடமாடும்
பெண்களின் கண்ணீரையும் ,பராதிகளையும்
சாட்சியாய் பார்த்து வருகின்றன
உடல் கொண்டலையும் பழந தெய்வங்களின்
முகக்குறி கொண்டலையும் தாவரங்களும்
வளரும் நிலா வெளிச்சமும்
ஊருக்குள்
மூன்றாம் தலைமுறையாக நடமாடும்
பெண்களின் கண்ணீரையும் ,பராதிகளையும்
சாட்சியாய் பார்த்து வருகின்றன
3
உற்சாகமற்ற பழைய பியேட் கார்
தொலைதூரப் பயணங்கள் ஏதும்
செய்ததில்லை இதுவரை .
செய்ததில்லை இதுவரை .
நடன அரங்குகள்
இசை விழாக்கள்
வைபவ நிகழ்வுகள்
என்று சென்றிருக்கிறது
அது .
இசை விழாக்கள்
வைபவ நிகழ்வுகள்
என்று சென்றிருக்கிறது
அது .
எண்ணையில் கழுவப்பட்ட
பழுதடைந்த சுவர்க்கடிகாரத்தின்
உள்ளுறுப்பு மட்டும் தனியே இயங்கிக்
கொண்டிருப்பதுபோல
அதன் இயந்திரங்கள் இன்றுவரையில்
நுட்பமாகத் தொழில்படுகின்றன.
பழுதடைந்த சுவர்க்கடிகாரத்தின்
உள்ளுறுப்பு மட்டும் தனியே இயங்கிக்
கொண்டிருப்பதுபோல
அதன் இயந்திரங்கள் இன்றுவரையில்
நுட்பமாகத் தொழில்படுகின்றன.
தினசரி கழுவப்பட்ட பிறகும்
காலத்தின் நீங்காத தூசுப்படலம்
போர்த்தியிருக்கிறது
வெளித்தோற்றம் .
காலத்தின் நீங்காத தூசுப்படலம்
போர்த்தியிருக்கிறது
வெளித்தோற்றம் .
நினைவின் பயணமாய்
காரின் பின்னிருக்கை
இடது ஓரத்திலமர்ந்து பயணம் செய்கிறாள்
யுவதி .
காரின் பின்னிருக்கை
இடது ஓரத்திலமர்ந்து பயணம் செய்கிறாள்
யுவதி .
நகரத்தில் குளிக்க இயலாத வேசியின்
மனமும் ,விழாக்களின் சங்கீதமும் இணைந்து
நகரும் யுவதியின் கார்
தனிமையால் பூட்டியடைக்கப்பட்டுள்ளது .
மனமும் ,விழாக்களின் சங்கீதமும் இணைந்து
நகரும் யுவதியின் கார்
தனிமையால் பூட்டியடைக்கப்பட்டுள்ளது .
யுவதி,உற்சாகமற்ற
பியேட் காரிலிருந்து
நடன அரங்கிற்குச் செல்கிறாள்
இசைவிழாக்களில் பங்கு கொள்கிறாள்
வைபவங்களை ஊடறுக்கிறாள்.
வெளியே புதிய வாகனங்களுக்கு நடுவே
நகரம் பற்றிய வரைபடமாய்
நிற்கிறது பியேட் கார் .
பியேட் காரிலிருந்து
நடன அரங்கிற்குச் செல்கிறாள்
இசைவிழாக்களில் பங்கு கொள்கிறாள்
வைபவங்களை ஊடறுக்கிறாள்.
வெளியே புதிய வாகனங்களுக்கு நடுவே
நகரம் பற்றிய வரைபடமாய்
நிற்கிறது பியேட் கார் .
மேலும் வயதான
ஓட்டுனரிடமிருந்து பெருகும்
சுருட்டு வாசனையில் கட்டப்பட்டுள்ளது
அது .
ஓட்டுனரிடமிருந்து பெருகும்
சுருட்டு வாசனையில் கட்டப்பட்டுள்ளது
அது .
தன்னைச் சுற்றிக் கவிந்த
தனிமையின் திரவத்தால்
கூட்டங்களில்
தோற்றங்களைத் தீண்டுகின்றன
யுவதியின் கண்கள் .
தனிமையின் திரவத்தால்
கூட்டங்களில்
தோற்றங்களைத் தீண்டுகின்றன
யுவதியின் கண்கள் .
உற்சாகமற்ற பழைய பியேட் காரிலிருந்து
பயணம் செய்யும் கடைசி யுவதியாக
கடவுள் அவளை முடிவு செய்து கொள்ளட்டும் .
சருகுகள் பெருகுகிற தனது ஓய்வறையில்
புறாக்களின் எச்சம் வீச
கார் மரித்துக் கிடக்கட்டும் .
சுருட்டு வாசனைக் கிழவன்
திறந்தவெளிச் சாராயக்கடையின் கதைசொல்லியாய்
நகரத்தில் அலையட்டும் .
பயணம் செய்யும் கடைசி யுவதியாக
கடவுள் அவளை முடிவு செய்து கொள்ளட்டும் .
சருகுகள் பெருகுகிற தனது ஓய்வறையில்
புறாக்களின் எச்சம் வீச
கார் மரித்துக் கிடக்கட்டும் .
சுருட்டு வாசனைக் கிழவன்
திறந்தவெளிச் சாராயக்கடையின் கதைசொல்லியாய்
நகரத்தில் அலையட்டும் .
வெளிறிய பியேட் கார்
இப்படியாய் பயணிக்கும் வெகுகாலம் .
ஆனால் அதுவோ இப்போது
இயங்கிக் கொண்டிருக்கும்போதுகூட
நிற்க வைக்கப்பட்டிருப்பது போல
தோற்றமளிக்கிறது
சருகுகள் படர்ந்த .புறாக்களின் எச்சம்
வீசும் தரையில் .
இப்படியாய் பயணிக்கும் வெகுகாலம் .
ஆனால் அதுவோ இப்போது
இயங்கிக் கொண்டிருக்கும்போதுகூட
நிற்க வைக்கப்பட்டிருப்பது போல
தோற்றமளிக்கிறது
சருகுகள் படர்ந்த .புறாக்களின் எச்சம்
வீசும் தரையில் .
4
பயணம் செய்யும் நூறுரூபாய் நோட்டு
மயக்கம் மூண்ட ஒரு சாயுங்கால ஒளியில்
விரைவு ரெயில்
பிரிவின் ஓலம் நிறைந்த ஊளையுடன்
நிலையத்திலிருந்து தயாராகிறது .
கசந்த ஊரிலிருந்து
சங்கரவடிவு
நினைவுகள் அடைக்கப்பட்ட
பயணப்பெட்டியோடு
ரெயிலேறுகிறான்.
விரைவு ரெயில்
பிரிவின் ஓலம் நிறைந்த ஊளையுடன்
நிலையத்திலிருந்து தயாராகிறது .
கசந்த ஊரிலிருந்து
சங்கரவடிவு
நினைவுகள் அடைக்கப்பட்ட
பயணப்பெட்டியோடு
ரெயிலேறுகிறான்.
கழிப்பறையற்ற
தனது நகரம் நோக்கி ...
பலர் தங்கும் அறையை
மனம் சுமந்து ...
சங்கரவடிவின் பயணம்
ரெயில் பயண ஓலத்தின் கூர்கிழிக்க ...
தொடங்குகிறது .
தனது நகரம் நோக்கி ...
பலர் தங்கும் அறையை
மனம் சுமந்து ...
சங்கரவடிவின் பயணம்
ரெயில் பயண ஓலத்தின் கூர்கிழிக்க ...
தொடங்குகிறது .
நகரத் தொடங்கிய
ரெயிலுக்கு வெளியே ...
வெறுமை ததும்பும் வழியனுப்புதளோடு ...
ரெயிலுக்கு வெளியே ...
வெறுமை ததும்பும் வழியனுப்புதளோடு ...
தரவிருப்பமற்ற நூறு ருபாய் நோட்டைப்
பெற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துபவரின் கரம்
நீள மறுக்கிறது .
பெற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துபவரின் கரம்
நீள மறுக்கிறது .
'வேண்டாம் வேண்டாம் 'என
முனகிய சங்கரவடிவின்
மன இடைவெளியில்
தர விருப்பமற்று நீட்டிய கரம்
பின்னகர்கிறது .
முனகிய சங்கரவடிவின்
மன இடைவெளியில்
தர விருப்பமற்று நீட்டிய கரம்
பின்னகர்கிறது .
கடைசி ரெயில் பெட்டியின்
தொலைவு கண்டு
பெருமுச்சு விட்டபின்
கொடுக்கப்படாத நூறு ரூபாய் நோட்டு
ரெயில் பெட்டிக்குள் சிக்குண்டு பறக்கும்
பட்டாம்பூச்சியென
தொலைவு கண்டு
பெருமுச்சு விட்டபின்
கொடுக்கப்படாத நூறு ரூபாய் நோட்டு
ரெயில் பெட்டிக்குள் சிக்குண்டு பறக்கும்
பட்டாம்பூச்சியென
சங்கரவடிவின் பயணம் முழுவதும்
அலைகிறது
கழிப்பறையற்றுக் கசக்கும்
வெளிறிய தன் அறைக் கனவுகளோடு .
அலைகிறது
கழிப்பறையற்றுக் கசக்கும்
வெளிறிய தன் அறைக் கனவுகளோடு .
5
தோலுரிந்த கவிதை
மேல் தோலுரிந்த கவிதையொன்றை
எழுதிக் கொண்டிருக்கிறேன் .
வழுவழுப்பான நிறமற்ற திரவத்தால்
முடியிருக்கிறது அதன் உடல் .
நண்பர்களும் , அல்லாதோரும் அந்தரங்கத்தில்
பயம் கொள்கிறார்கள் .
ஒதுங்கிக் கொள்ள ரகசியமாய் முடிவு செய்கிறார்கள் .
மேல் தோலுரிந்த அபாயம்
எவ்வாறு நிகழ்ந்ததென்று நன்றாக அவர்களுக்குத் தெரிகிறது .
ஆனால் அப்படி இல்லையென மறுத்துக் கொள்கிறார்கள் .
அப்படி மறுத்துக் கொள்வதன் மூலம்
தற்காலிகமாக அபாயத்தை ஒத்தி வைத்து விட்டோம்
என்று நம்பிக்கை தோன்றுகிறது
எழுதிக் கொண்டிருக்கிறேன் .
வழுவழுப்பான நிறமற்ற திரவத்தால்
முடியிருக்கிறது அதன் உடல் .
நண்பர்களும் , அல்லாதோரும் அந்தரங்கத்தில்
பயம் கொள்கிறார்கள் .
ஒதுங்கிக் கொள்ள ரகசியமாய் முடிவு செய்கிறார்கள் .
மேல் தோலுரிந்த அபாயம்
எவ்வாறு நிகழ்ந்ததென்று நன்றாக அவர்களுக்குத் தெரிகிறது .
ஆனால் அப்படி இல்லையென மறுத்துக் கொள்கிறார்கள் .
அப்படி மறுத்துக் கொள்வதன் மூலம்
தற்காலிகமாக அபாயத்தை ஒத்தி வைத்து விட்டோம்
என்று நம்பிக்கை தோன்றுகிறது
மேல் தோலுரிந்த கவிதையொன்றை
எழுதிக் கொண்டிருக்கிறேன் .
சக கவிகள் எழுதும் கவிதைகளிலோ
ஆடை அலங்காரங்கள்
அழகிய கைப்பின்னல் பூ வேலைப்பாடுகள்
எழுதிக் கொண்டிருக்கிறேன் .
சக கவிகள் எழுதும் கவிதைகளிலோ
ஆடை அலங்காரங்கள்
அழகிய கைப்பின்னல் பூ வேலைப்பாடுகள்
அலங்கரிக்கப்பட்ட கவிதையை எழுதுவதுதான்
எவ்வளவு பாதுகாப்பானது ?
மூடிய கர்ப்பத்தின் நீர்ப்பையில்
வளரும் சிசு அது .
எனது சிசுவோ பாதுகாப்பின்மையின் கர்ப்பத்தில்
உதிரம் கொட்டியபடி வளர்கிறது .
எவ்வளவு பாதுகாப்பானது ?
மூடிய கர்ப்பத்தின் நீர்ப்பையில்
வளரும் சிசு அது .
எனது சிசுவோ பாதுகாப்பின்மையின் கர்ப்பத்தில்
உதிரம் கொட்டியபடி வளர்கிறது .
மேல் தோலுரிந்த கவிதையொன்றை
எழுதிக் கொண்டிருக்கிறேன் .
பெரியவர்கள் முகம் சுழிக்க
பிசாசுகள் மோப்பமிட
அதிகாரிகள் அருவருப்படைய
அக்கறை கொண்டவர்கள் எச்சரிக்கை செய்ய
தொலைபேசி இணைப்புகள் கசப்படைய
சாப்பாட்டு மேஜைகள் மவ்னம் சுமக்க
பயணங்கள் தனிமை கொள்ள
எழுதிக் கொண்டிருக்கிறேன் .
பெரியவர்கள் முகம் சுழிக்க
பிசாசுகள் மோப்பமிட
அதிகாரிகள் அருவருப்படைய
அக்கறை கொண்டவர்கள் எச்சரிக்கை செய்ய
தொலைபேசி இணைப்புகள் கசப்படைய
சாப்பாட்டு மேஜைகள் மவ்னம் சுமக்க
பயணங்கள் தனிமை கொள்ள
மேல் தோலுரிந்த கவிதையொன்றை
எழுதிக் கொண்டிருக்கிறேன் .
சட்டம் ஒழுங்கால் சிறை பிடிக்கிறது அரசு .
எரியும் கண்களால் சுடுகிறது நிறுவனம் .
துரத்துகிறது குடும்பம் .
உரிக்கப்பட்ட தோலை எடுத்து ஆராய்ச்சி செய்கிறது
மனநலக் காப்பகம் .
எழுதிக் கொண்டிருக்கிறேன் .
சட்டம் ஒழுங்கால் சிறை பிடிக்கிறது அரசு .
எரியும் கண்களால் சுடுகிறது நிறுவனம் .
துரத்துகிறது குடும்பம் .
உரிக்கப்பட்ட தோலை எடுத்து ஆராய்ச்சி செய்கிறது
மனநலக் காப்பகம் .
பழைய சந்நியாசிகள்
காலத்தில் மரித்த உயிரைச் சுமந்தபடி
பயணிக்கிறது எங்கள் உடல் .
இப்போது அன்னியர்கள்
அதனால் தோலுரிந்திருக்கிறது
கவிதை
காலத்தில் மரித்த உயிரைச் சுமந்தபடி
பயணிக்கிறது எங்கள் உடல் .
இப்போது அன்னியர்கள்
அதனால் தோலுரிந்திருக்கிறது
கவிதை
( வீரலெட்சுமி கவிதைத் தொகுப்பிலிருந்து -2003)
அகரம் ,மனை எண்-1,நிர்மலா நகர்,தஞ்சாவூர் -613007
அகரம் ,மனை எண்-1,நிர்மலா நகர்,தஞ்சாவூர் -613007
Comments
Post a Comment