வரவழைக்கப்பட்டவன் வந்து சேர்ந்திருக்கிறான்
உருவமற்றது மிஞ்சும்
1
எல்லோருக்கும் ஒரு உருவம் கிடைத்ததைப் போலவே
எனக்கொரு உருவம் கிடைத்தது
குள்ளம்
சராசரி
மாநிறம்
உருவம் உருவத்திற்கான வேலைகளையெல்லாம்
செய்து கொண்டிருக்கிறது
நான் எனக்குரியவற்றை
செய்து கொண்டிருக்கிறேன்
உருவம் கைவிட்டுச் செல்லும்
உருவமற்றது மிஞ்சும்
2
உருவம் தானமாக
வந்தது
தானமாக வந்தது ;
அது
உருவமற்றத்தை
உற்றுப் பார்த்து கொண்டிருக்கிறது
3
உருவம் சின்ன உருவமானாலும்
அது பார்த்துக் கொண்டிருப்பது
பேருருவம்
4
உருவத்தைக் கொண்டே
உருவமற்றதை
செய்து கொண்டிருக்கிறோம்
5
பேயுருவம் உருவத்தின் உச்சம்
பேருருவம்
உருவமற்றதின்
உயரம்
6
உருவம் தரப்பட்ட போதே
எடுத்துக் கொள்ளவும் பட்டது
இடையில் ஏராளம்
செய்கிறோம்
செய்யாமலும்
விடுகிறோம்
7
உருவத்திற்கு
உருவமில்லை
8
ஒவ்வொரு உருவத்திலிருந்தும்
உருவமற்றதே எஞ்சும்
எஞ்சாவிடில்
உருவம்
வாழ்ந்திருக்கிறது
விழுந்திருக்கிறது
9
உருவத்திற்காக உண்ட உணவு
செய்த பிரார்த்தனை
கண்ட கனவு
செய்த செயல்
எல்லாம் வீணாயிற்றே
10
உருவமல்லாததற்கு
உருவம் செய்து கொண்டான்
பேரலங்காரப் பிரியன்
11
மயிலென்றாலும் உருவம்
மானென்றாலும்
நாயென்றாலும் நரியென்றாலும் உருவம்
சுட்டி நிற்பதோ
பேருருவம்
12
பேருருவம் காணாத பேறென்ன
பேறோ
###
காலைப் பொன்நிறத்தின் சாரல்
மின்மினிகள்
ஒழுகுவது போலும்
நிலம் நோக்கி
இறங்குகிறது
மழையைப் பார்க்க வேண்டுமெனில்
முதலில்
மழை என்ற சொல்லை
மறக்க வேண்டியிருக்கிறது
அல்லாமல் காணும் மழை
மழை என்கிற அர்த்தம்
மழை
அதற்கு வெளியில்
பெய்து கொண்டிருப்பது
###
வரவழைக்கப்பட்டவன் வந்து சேர்ந்திருக்கிறான்
அவனை அடிக்கடி பார்க்கிறேன்
அடுக்குமாடிப் பணியிடத்தில்
இல்லை போஜன விடுதிகளில்
இல்லை
இரும்புப் பட்டறைகளில்
கரிப்படித்து
நிற்கிறான்
கொத்தன் கையாளாக
இன்று பார்த்தேன்
ஒரு கறிக்கடையில்
நேற்று பார்த்தேன்
வெற்றுக் கூலியாக
அவனை என்ன வேண்டுமாயினும்
செய்து கொள்ளலாம்
புகாரில்லை
எப்படி வேண்டுமாயினும்
நடத்தலாம்
தண்டனைகள்
கிடையாது
ஓரினப்புணர்ச்சிக்கு
வலிந்து இழுத்தால் வெளியில்
செய்தி
வராது
நிராதரவானவன்
பழிவாங்கவும் போவதில்லை
கோபம் வந்தால் என்ன செய்வீர்கள் ?
வேட்கை வந்தால் என்ன செய்வீர்கள் ?
உங்கள் பிள்ளையின் முன்பாக
என்ன செய்வீர்கள் ?
அனைத்தையும்
அறிய வந்தவன்
அவன்
வந்து சேர்ந்தவனில்லை
வரவழைக்கப்பட்டவன்
வந்து சேர்ந்திருக்கிறான்
சரியாக வந்து மாட்டிக் கொண்டுவிட்டான்
என்று
நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்
மிகச் சரியாக
மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள்
அவனிடம்
எப்படியானாலும்
இப்படியாக
நேர்ந்திருக்கக் கூடாது
உங்களுக்கு
###
உன்னுடைய எதிரியை
வெறுத்தபடி
உன்னிடம்
வந்து சேர்பவன்
அவனைச் சென்று சேருவதற்கான
வழி உன்னிடம் இருக்கிறதாவென
துப்பறிய
வந்தவனாகவும்
இருக்கலாம்
காதலனை எப்படி கண்காணிப்பது
என்பதறிய
உனது மடியில்
ஒருத்தி
சண்டையிட்டுக் கொண்டே
படுத்திருக்கலாம்
எந்த சண்டைக்கு எப்படி வினை
புரிவாய்
என அறிந்து கொண்டிருக்கலாம்
எதுவெதற்கு
அன்பில் கரைவாய்
என தெரிந்து கொண்டிருக்கலாம்
காதலன் நிராகரிக்கையில்
அவள்
உன்னையும்
நிராகரிக்கலாம்
காதலனை அறிய இயலாத மடி
அவளுக்கெதற்கு ?
ஏற்றுக் கொண்டாலோ
பின்னர்
ஒரு மடியிருக்க உன் மடி
எதற்கு ?
###
பெண்ணைத் தொடுவது பற்றி ...
பெண்ணை எப்படி வேண்டுமானாலும்
தொட முடியாது
அவள்
குகைகளில்
ஒளிந்திருக்கிறாள்
சொரூபம்
மட்டுமே இங்கிருக்கிறது
ஒரு பெண்ணைத் தொடும்போது
அதன் பழமையான பேய்மையையும் சேர்த்துத்
தொடுகிறீர்கள்
அதன் எதிர்பார்ப்புகளில்
பின்வலிக்க
இயலாது
அவள் தொன்மைக் குகையில்
தெய்வங்கள்
அமர்ந்திருக்கின்றன
நிலாவெளிச்சங்களைக் களிக்கின்றன
பூஜை கேட்கின்றன
களபம் சந்தனம்
அவற்றுக்குத்
தேவை
அவற்றில் ஆண் தெய்வங்களும்
உண்டு
ஏதேனும் ஒன்றை மட்டும்
பற்றியெடுத்து விட்டு
கரையேறிவிடலாம்
என நினைக்க
இயலாது
அடுக்கு அடுக்கடுக்காக
மடிந்திருக்கும்
மலர்
ஒன்றைப் பற்றுகையில்
அத்தனையும்
அதிரும்
ஏதேனும் ஒன்றினைப் பகிரமாக
சாற்றாமல்
அதனை
எடுக்க முடியாது
உங்களை வைத்து அதனை
எடுக்கலாம் வாய்ப்புண்டு
அதனை நிகழ்த்தி
உங்களை எடுத்துக்கொள்ளவும் வாய்ப்புண்டு
பல அடுக்குகளில் இருந்து
ஒன்று மட்டுமே
பார்ப்பதற்கு
தலைநீட்டித்
தெரிகிறது
தெரிகிறதென்று
தெரிவதை மட்டும்
எடுத்துக் கொள்ள
வாய்ப்பில்லை
நொய்மை தொட்டெடுத்தால்
நொய்மை படியும்
பொய்மை தொட்டெடுத்தால்
பொய்மை படியும்
பேய்ப்பற்றியெடுத்தால்
பேய்
படியும்
சாமி தொட்டெடுத்தால்
மனம்
சாமியாகும்மே
விலகித் திரும்பும் இடத்தில்
அவள் தொன்மம்
பலி நிகழ்த்தி
விடைபெறுகிறது
ஒவ்வொரு
முறையும்
அவளிடத்தே
எளிதல்லவே எளிதல்லவே
எடுப்பது
எளிதல்லவே
###
மஞ்சள் பூமரம்
அவளுயரத்திற்கு ஒரு மடங்கு அதிக உயரம்
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு
வேகமாக அசைக்கிறாள்
வியர்வை வழிய
வழிப்போக்கிற்கு வந்த பெண்
சேகரித்து வைத்திருந்த மழைத் துளிகளோடு
அத்தனை பூக்களையும்
அவள் மீது கொட்டுகிறது
மரம்
அவள் வரவிற்காகவே
காத்திருந்து
யாருமே அறியாதது போல
அவள் விலகிச் செல்கிறாள்
மரம் இரண்டொரு அடிகள்
எடுத்து வைக்கிறது அவளை நோக்கி
பிறகு அவள் விலகிய தடத்தில்
பின்னோக்கிக் கால் பதித்து
தனது
இடத்தில்
அமர்கிறது
பூமியெங்கும்
மஞ்சள் பூக்கள்
அவள் முகமெல்லாம்
பூரிப்பு
###
மனிதனுக்குள் பாய்கிறது வேடம்
1
பாவித்து
கடவுளாகும்
பத்ரகாளி வேடம்
பாவித்து பணிவு வேண்டும்
பிச்சைக்காரன் வேடம்
பாவித்து வீரம் வேண்டும்
சுடலை மாடன்
வேடம்
பாவித்து அதிகாரம் எழுப்பும்
போலீஸ்கார்
வேடம்
தெருவே வேடமணிந்து
நிற்கிறது
தசரா தெய்வங்கள்
உள்ளிருப்பவர் எல்லோரும்
வெளியேறிய
பின்னர்
இந்த
வேடங்கள் எல்லாம்
எங்கே போகும் ?
2
உதிர்ந்து விடப்பட்ட
ஒரு
வனப்பத்திரகாளி வேடத்திற்குள்
தப்பித்து ஓட முயன்ற
மிருகம்
மாட்டிக் கொண்டது
இந்தப்பக்கம் இழுக்கிறாள் பத்திரகாளி
அந்த பக்கம் இழுக்கிறது
மிருகம்
3
அனுமார் வேடம்
பொருதுவதே இல்லை
அது குரங்காகவும் இல்லை
அனுமாராகவும் இல்லை
4
குழந்தைகளுக்கு
எதற்காக
இத்தனை வேடங்கள் ?
5
வேடத்திற்குள்
அமர்ந்து பார்த்த பின்னர்
மனிதனுக்குள்
பாய்கிறது வேடம்
6
பெண்வேடமிட்ட பையனுக்குள்
மெல்ல
பெண்குறி
சுரக்கிறது
7
அத்தனை வேடங்களையும்
தூக்கிச் சுமந்து
வருகின்றன
தாளங்கள்
8
இருசக்கர வாகனத்தில்
விரைந்து செல்லும்
அனுமாரை
சாலையில் நின்று வேடிக்கை பார்க்கிறார்
ராமர்
9
கருங்காளி வேடமிட்டு
தீச்சட்டி ஏந்திவரும் பிள்ளைக்கு
என்ன பிரச்சனை
என்பதை
விளங்கவே இயலவில்லை
10
வேடத்திற்குள் அமர்ந்து பார்த்தவன்
தெரிந்து கொண்டுவிட்டான்
தான் வேறு
தன் வேடம் வேறு
என்பதை
###
ஏற்கனவே தெரிந்தவைதான்
1
ஒரு குழந்தைக்கு
ஆட்டின் சொல்வதற்கு
அது யாருடைய குழந்தை என்கிற
புரோப்பைல்
எனக்கு
தேவைப்படுவதில்லை.
2
தேன் சிட்டு
தேனிருக்கும்
இடமெல்லாம்
தேடித் கொண்டுதானிருக்கும்
3
மொத்த ஆயுளும் சேர்த்து ஒரேநாள்
ஈசலுக்கு ஈசலுடைய ஒருநாள்
தன்னுடைய ஒருநாளை பறந்து பறந்து காண்பித்து
உன்னுடைய ஒரு நாளை
என்ன செய்யப் போகிறாய்
என்று
கேட்கிறது
நாமோ
ஈசலுக்கு ஒருநாள்
என
நினைத்துக் கொள்கிறோம்
4
ஒரு நாளாய் வாழ்வதே
நல்லவாழ்க்கை
ஓய்வும் தெரியாது
சோர்வும் தட்டாது
5
இந்த வயிற்றை
ஒருநாளுக்காக மட்டுமே
படைத்திருக்கிறான் இறைவன்
மறுநாளுக்காக சேமிக்க
ஒரு சதுர மில்லிமீட்டர் கூட
இடமில்லை
6
ஏற்கனவே தெரிந்தவைதான்
எல்லாமே ஏற்கனவே தெரிந்தவைதாம்
அவற்றை அறிந்து கொள்ள
அனைத்தும்
தேவை
7
கத்தியை கீழே போட்டுவிட்டீர்கள்
என வைத்துக் கொள்ளுங்கள்
கத்தி மீண்டும் கைக்கு வருவதேயில்லை
துப்பாக்கியை கீழே விட்டு விட்டீர்கள்
என வைத்துக் கொள்ளுங்கள்
அது மீண்டும் தோளுக்கு வருவதேயில்லை
அறிந்தவனிடமிருந்தே
அவை
கீழிறங்குகின்றன
அறியாதவன்
எடுத்துவைத்து கொஞ்சிக் கொண்டிருக்கின்றான்
கொஞ்சிக் கொண்டிருப்பவன்
தோள் நோக்கி
மீண்டும் அவை
ஏறத் தொடங்குகின்றன
8
எல்லா துப்பாக்கிகளும்
பொம்மைத் தூப்பாக்கிகளே
9
விவசாயி பயன்படுத்தும்
ஆயுதங்கள்
அத்தனையும்
கைலாயத்திற்கு
வழிகேட்டு நிற்பவை
10
அர்ச்சிப்பதற்கு
ஐந்து பூக்கள்
போதும்
11
ஏராளம் ஈசல்கள் பூமியெங்கும் உண்டு
ஒவ்வொன்றிற்கும்
ஒவ்வொரு
வயது
12
மாமாதான்
தன்னை வயசாக்கி விட்டார் என
மாமி
எத்தனை யுகங்களாக
சண்டை
பிடித்து கொண்டே
நிற்கிறாள் ?
###
பறக்கப் பறக்க தூரம் குறையும்
1
பழசானது அத்தனைக்கும்
பராதி அதிகம்
2
லௌகீகத்திற்குத்தான்
எத்தனை எத்தனை
பெண்
வடிவங்கள் ?
3
எரியாத அடுப்பு போலும்
வெறுமை
சுடுகாட்டில்
எப்போதும் பேச்சரவம்
இடுகாட்டில்
மழைபெய்த சுடுகாடு
அனைத்தும் அணைந்து விடுகிறது
மழை நனைந்த இடுகாட்டில்
அனைத்தும் எழும்பி விடுகின்றன
எல்லாம் ஒன்றென்று
யார் சொன்னது ?
4
ஆதி மூலம்
நட்சத்திரம்
5
நீயொரு நட்சத்திரம்
ஆகிவிட முடியுமா ?
முடியும் என்றும் சொல்வதற்கில்லை
முடியாது என்றும் தள்ளுவதற்கில்லை
6
பிறந்து விட்ட
அத்தனை பெண்களாலும்
இயங்கிக் கொண்டிருக்கிறது
இவுலகு
7
பறக்காதிருக்கையில்
பாரம் அதிகம்
பறக்கப் பறக்க
தூரம் குறையும்
8
செய்வினை செய்வது
எப்படியென்றா கேட்கிறீர்கள் ?
ஐந்துபடி அரிசியெடுத்து
முழக்காலில் போட்டு வைத்து
கொள்ளி நீர் எடுத்து
பாடை தயார் செய்யுங்கள்
பிணம்
தானாக
விழும்
###
என்பது பொருள்
1
எதைக் கொண்டு நிராகரிக்கிறீர்களோ
அதைக் கொண்டே நானும்
நிராகரித்து விடுகிறேன்
விஷயம்
வேறொன்றுமில்லை
2
பங்கேற்பில்லாத காரியங்களில்
பங்கேற்பில்லை
ஏற்பில்லாத இடத்தில்
இசைவில்லை
3
கள்ளஉறவென்பது
கள்ளஉறவு மட்டுமே
4
நான்
இருக்குமிடத்திலிருந்து
எல்லாவற்றையும்
பார்த்துக் கொண்டிருப்பவன்
நான்
இருக்கும் இடம் என்பது
எனது
நான்
இருக்குமிடம்
5
நீங்கள் ரகசியமாக வந்தாலும்
ரகசியமாக தருவதற்கு
என்னிடம்
ஒன்று
உண்டு
பிறரிடம் காட்டயியலாத
ஒன்று
6
நான் வேறொன்றுமில்லை
அதுவல்ல என்று சொல்லிப்பாருங்கள்
அதுவாக இருப்பேன்
புனிதன் அல்ல என்று
சொல்லிப் பாருங்கள்
புனிதனாக
இருப்பேன்
முட்டாள் அல்ல என்று சொல்லிப் பாருங்கள்
முட்டாளாக இருப்பேன்
நோய்தீர்ப்பவன் அல்ல
என்று சொல்லிப்பாருங்கள்
நோய்தீர்ப்பவனாக
இருப்பேன்
கழுதை அல்ல என்றாலோ
கழுதையாக
அல்ல அல்ல
என்னும் இடங்களெல்லாம்
என்னுடைய
இடங்கள்
7
பிச்சை எடுக்க நீளும் எனது கரங்களுக்கு பின்பாக
நான்கு குழந்தைகள்
பசியோடு
இருக்கக் கூடும்
8
நம்பிக்கை இல்லையென்று சொல்வீரேயாயின்
நீங்கள் நம்பிக்கை கொள்ள
வேண்டியவர்
என்பது
பொருள்
###
தள்ளிநிற்பவன் பார்த்து விடுகிறான்
1
நண்பர்கள் சுருங்கி
சிறிதாகி விட்டார்கள்
அகம் வளர்ந்து
பெரிதாகி விட்டது
2
மழையை மழையென்று
சொல்லாதீர்கள்
அது வேறு ஏதோ
ஒன்று
3
உலகெல்லாம் பறந்து திரியும்
குருவிக்கு
கூட்டுக்குள்
ஒரு சதுர அடி கூட
கிடையாது
கூட்டிற்குள் சதுர அடியில்லாத
பறவை
கூட்டிற்கு
வெளியில்
அவ்வளவு
ப்ரகாஸம்
4
ஒருமுகமானால்
வடிவம்
பலமுகமானால்
பரப்பிரம்மம்
5
வழிபடவேண்டியவை
ஏராளம்
6
எதற்கும்
யுத்த களத்தில்
நின்று கொண்டிருக்கிறோம்
என்று
தெரிந்திருப்பது
நன்று
7
வைத்துக் கொண்டிருக்கும் பெயர்கள்
அத்தனையுமே
சும்மா
8
அகாலத்தில் விழும் சொற்கள் எல்லாம்
காலத்திற்குள்
முளைக்கின்றன
புஷ்பம் போலும் பெய்கிறது
மழை
9
ஏக்கம் நின்று பார்க்கிறது
ஏக்கமில்லாததற்கு
ஏக்கம்
என் நின்று பார்க்கிறது
என்பதே
தெரிவதில்லை
அப்படி தெரியாததிலிருந்துதான்
இந்த ஏக்கமும்
வந்து நின்று
பார்க்கிறது
10
எல்லாதவறுகளுக்கும்
ஒவ்வொரு குணம் இருக்கிறது
இந்த குணத்தால் வந்திருந்தால் இது
அந்த குணத்தால் அது
தள்ளிநிற்பவன் பார்த்து விடுகிறான்
பார்த்து விடுபவனை பாராதவன்
தாக்கத் துணிகிறான்
11
விளைவு வேண்டாமென்றால்
பிறவாமை வேண்டும்
12
பெண்ணின்பம் விளைவின்பம்
1
எல்லோருக்கும் ஒரு உருவம் கிடைத்ததைப் போலவே
எனக்கொரு உருவம் கிடைத்தது
குள்ளம்
சராசரி
மாநிறம்
உருவம் உருவத்திற்கான வேலைகளையெல்லாம்
செய்து கொண்டிருக்கிறது
நான் எனக்குரியவற்றை
செய்து கொண்டிருக்கிறேன்
உருவம் கைவிட்டுச் செல்லும்
உருவமற்றது மிஞ்சும்
2
உருவம் தானமாக
வந்தது
தானமாக வந்தது ;
அது
உருவமற்றத்தை
உற்றுப் பார்த்து கொண்டிருக்கிறது
3
உருவம் சின்ன உருவமானாலும்
அது பார்த்துக் கொண்டிருப்பது
பேருருவம்
4
உருவத்தைக் கொண்டே
உருவமற்றதை
செய்து கொண்டிருக்கிறோம்
5
பேயுருவம் உருவத்தின் உச்சம்
பேருருவம்
உருவமற்றதின்
உயரம்
6
உருவம் தரப்பட்ட போதே
எடுத்துக் கொள்ளவும் பட்டது
இடையில் ஏராளம்
செய்கிறோம்
செய்யாமலும்
விடுகிறோம்
7
உருவத்திற்கு
உருவமில்லை
8
ஒவ்வொரு உருவத்திலிருந்தும்
உருவமற்றதே எஞ்சும்
எஞ்சாவிடில்
உருவம்
வாழ்ந்திருக்கிறது
விழுந்திருக்கிறது
9
உருவத்திற்காக உண்ட உணவு
செய்த பிரார்த்தனை
கண்ட கனவு
செய்த செயல்
எல்லாம் வீணாயிற்றே
10
உருவமல்லாததற்கு
உருவம் செய்து கொண்டான்
பேரலங்காரப் பிரியன்
11
மயிலென்றாலும் உருவம்
மானென்றாலும்
நாயென்றாலும் நரியென்றாலும் உருவம்
சுட்டி நிற்பதோ
பேருருவம்
12
பேருருவம் காணாத பேறென்ன
பேறோ
###
காலைப் பொன்நிறத்தின் சாரல்
மின்மினிகள்
ஒழுகுவது போலும்
நிலம் நோக்கி
இறங்குகிறது
மழையைப் பார்க்க வேண்டுமெனில்
முதலில்
மழை என்ற சொல்லை
மறக்க வேண்டியிருக்கிறது
அல்லாமல் காணும் மழை
மழை என்கிற அர்த்தம்
மழை
அதற்கு வெளியில்
பெய்து கொண்டிருப்பது
###
வரவழைக்கப்பட்டவன் வந்து சேர்ந்திருக்கிறான்
அவனை அடிக்கடி பார்க்கிறேன்
அடுக்குமாடிப் பணியிடத்தில்
இல்லை போஜன விடுதிகளில்
இல்லை
இரும்புப் பட்டறைகளில்
கரிப்படித்து
நிற்கிறான்
கொத்தன் கையாளாக
இன்று பார்த்தேன்
ஒரு கறிக்கடையில்
நேற்று பார்த்தேன்
வெற்றுக் கூலியாக
அவனை என்ன வேண்டுமாயினும்
செய்து கொள்ளலாம்
புகாரில்லை
எப்படி வேண்டுமாயினும்
நடத்தலாம்
தண்டனைகள்
கிடையாது
ஓரினப்புணர்ச்சிக்கு
வலிந்து இழுத்தால் வெளியில்
செய்தி
வராது
நிராதரவானவன்
பழிவாங்கவும் போவதில்லை
கோபம் வந்தால் என்ன செய்வீர்கள் ?
வேட்கை வந்தால் என்ன செய்வீர்கள் ?
உங்கள் பிள்ளையின் முன்பாக
என்ன செய்வீர்கள் ?
அனைத்தையும்
அறிய வந்தவன்
அவன்
வந்து சேர்ந்தவனில்லை
வரவழைக்கப்பட்டவன்
வந்து சேர்ந்திருக்கிறான்
சரியாக வந்து மாட்டிக் கொண்டுவிட்டான்
என்று
நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்
மிகச் சரியாக
மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள்
அவனிடம்
எப்படியானாலும்
இப்படியாக
நேர்ந்திருக்கக் கூடாது
உங்களுக்கு
###
உன்னுடைய எதிரியை
வெறுத்தபடி
உன்னிடம்
வந்து சேர்பவன்
அவனைச் சென்று சேருவதற்கான
வழி உன்னிடம் இருக்கிறதாவென
துப்பறிய
வந்தவனாகவும்
இருக்கலாம்
காதலனை எப்படி கண்காணிப்பது
என்பதறிய
உனது மடியில்
ஒருத்தி
சண்டையிட்டுக் கொண்டே
படுத்திருக்கலாம்
எந்த சண்டைக்கு எப்படி வினை
புரிவாய்
என அறிந்து கொண்டிருக்கலாம்
எதுவெதற்கு
அன்பில் கரைவாய்
என தெரிந்து கொண்டிருக்கலாம்
காதலன் நிராகரிக்கையில்
அவள்
உன்னையும்
நிராகரிக்கலாம்
காதலனை அறிய இயலாத மடி
அவளுக்கெதற்கு ?
ஏற்றுக் கொண்டாலோ
பின்னர்
ஒரு மடியிருக்க உன் மடி
எதற்கு ?
###
பெண்ணைத் தொடுவது பற்றி ...
பெண்ணை எப்படி வேண்டுமானாலும்
தொட முடியாது
அவள்
குகைகளில்
ஒளிந்திருக்கிறாள்
சொரூபம்
மட்டுமே இங்கிருக்கிறது
ஒரு பெண்ணைத் தொடும்போது
அதன் பழமையான பேய்மையையும் சேர்த்துத்
தொடுகிறீர்கள்
அதன் எதிர்பார்ப்புகளில்
பின்வலிக்க
இயலாது
அவள் தொன்மைக் குகையில்
தெய்வங்கள்
அமர்ந்திருக்கின்றன
நிலாவெளிச்சங்களைக் களிக்கின்றன
பூஜை கேட்கின்றன
களபம் சந்தனம்
அவற்றுக்குத்
தேவை
அவற்றில் ஆண் தெய்வங்களும்
உண்டு
ஏதேனும் ஒன்றை மட்டும்
பற்றியெடுத்து விட்டு
கரையேறிவிடலாம்
என நினைக்க
இயலாது
அடுக்கு அடுக்கடுக்காக
மடிந்திருக்கும்
மலர்
ஒன்றைப் பற்றுகையில்
அத்தனையும்
அதிரும்
ஏதேனும் ஒன்றினைப் பகிரமாக
சாற்றாமல்
அதனை
எடுக்க முடியாது
உங்களை வைத்து அதனை
எடுக்கலாம் வாய்ப்புண்டு
அதனை நிகழ்த்தி
உங்களை எடுத்துக்கொள்ளவும் வாய்ப்புண்டு
பல அடுக்குகளில் இருந்து
ஒன்று மட்டுமே
பார்ப்பதற்கு
தலைநீட்டித்
தெரிகிறது
தெரிகிறதென்று
தெரிவதை மட்டும்
எடுத்துக் கொள்ள
வாய்ப்பில்லை
நொய்மை தொட்டெடுத்தால்
நொய்மை படியும்
பொய்மை தொட்டெடுத்தால்
பொய்மை படியும்
பேய்ப்பற்றியெடுத்தால்
பேய்
படியும்
சாமி தொட்டெடுத்தால்
மனம்
சாமியாகும்மே
விலகித் திரும்பும் இடத்தில்
அவள் தொன்மம்
பலி நிகழ்த்தி
விடைபெறுகிறது
ஒவ்வொரு
முறையும்
அவளிடத்தே
எளிதல்லவே எளிதல்லவே
எடுப்பது
எளிதல்லவே
###
மஞ்சள் பூமரம்
அவளுயரத்திற்கு ஒரு மடங்கு அதிக உயரம்
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு
வேகமாக அசைக்கிறாள்
வியர்வை வழிய
வழிப்போக்கிற்கு வந்த பெண்
சேகரித்து வைத்திருந்த மழைத் துளிகளோடு
அத்தனை பூக்களையும்
அவள் மீது கொட்டுகிறது
மரம்
அவள் வரவிற்காகவே
காத்திருந்து
யாருமே அறியாதது போல
அவள் விலகிச் செல்கிறாள்
மரம் இரண்டொரு அடிகள்
எடுத்து வைக்கிறது அவளை நோக்கி
பிறகு அவள் விலகிய தடத்தில்
பின்னோக்கிக் கால் பதித்து
தனது
இடத்தில்
அமர்கிறது
பூமியெங்கும்
மஞ்சள் பூக்கள்
அவள் முகமெல்லாம்
பூரிப்பு
###
மனிதனுக்குள் பாய்கிறது வேடம்
1
பாவித்து
கடவுளாகும்
பத்ரகாளி வேடம்
பாவித்து பணிவு வேண்டும்
பிச்சைக்காரன் வேடம்
பாவித்து வீரம் வேண்டும்
சுடலை மாடன்
வேடம்
பாவித்து அதிகாரம் எழுப்பும்
போலீஸ்கார்
வேடம்
தெருவே வேடமணிந்து
நிற்கிறது
தசரா தெய்வங்கள்
உள்ளிருப்பவர் எல்லோரும்
வெளியேறிய
பின்னர்
இந்த
வேடங்கள் எல்லாம்
எங்கே போகும் ?
2
உதிர்ந்து விடப்பட்ட
ஒரு
வனப்பத்திரகாளி வேடத்திற்குள்
தப்பித்து ஓட முயன்ற
மிருகம்
மாட்டிக் கொண்டது
இந்தப்பக்கம் இழுக்கிறாள் பத்திரகாளி
அந்த பக்கம் இழுக்கிறது
மிருகம்
3
அனுமார் வேடம்
பொருதுவதே இல்லை
அது குரங்காகவும் இல்லை
அனுமாராகவும் இல்லை
4
குழந்தைகளுக்கு
எதற்காக
இத்தனை வேடங்கள் ?
5
வேடத்திற்குள்
அமர்ந்து பார்த்த பின்னர்
மனிதனுக்குள்
பாய்கிறது வேடம்
6
பெண்வேடமிட்ட பையனுக்குள்
மெல்ல
பெண்குறி
சுரக்கிறது
7
அத்தனை வேடங்களையும்
தூக்கிச் சுமந்து
வருகின்றன
தாளங்கள்
8
இருசக்கர வாகனத்தில்
விரைந்து செல்லும்
அனுமாரை
சாலையில் நின்று வேடிக்கை பார்க்கிறார்
ராமர்
9
கருங்காளி வேடமிட்டு
தீச்சட்டி ஏந்திவரும் பிள்ளைக்கு
என்ன பிரச்சனை
என்பதை
விளங்கவே இயலவில்லை
10
வேடத்திற்குள் அமர்ந்து பார்த்தவன்
தெரிந்து கொண்டுவிட்டான்
தான் வேறு
தன் வேடம் வேறு
என்பதை
###
ஏற்கனவே தெரிந்தவைதான்
1
ஒரு குழந்தைக்கு
ஆட்டின் சொல்வதற்கு
அது யாருடைய குழந்தை என்கிற
புரோப்பைல்
எனக்கு
தேவைப்படுவதில்லை.
2
தேன் சிட்டு
தேனிருக்கும்
இடமெல்லாம்
தேடித் கொண்டுதானிருக்கும்
3
மொத்த ஆயுளும் சேர்த்து ஒரேநாள்
ஈசலுக்கு ஈசலுடைய ஒருநாள்
தன்னுடைய ஒருநாளை பறந்து பறந்து காண்பித்து
உன்னுடைய ஒரு நாளை
என்ன செய்யப் போகிறாய்
என்று
கேட்கிறது
நாமோ
ஈசலுக்கு ஒருநாள்
என
நினைத்துக் கொள்கிறோம்
4
ஒரு நாளாய் வாழ்வதே
நல்லவாழ்க்கை
ஓய்வும் தெரியாது
சோர்வும் தட்டாது
5
இந்த வயிற்றை
ஒருநாளுக்காக மட்டுமே
படைத்திருக்கிறான் இறைவன்
மறுநாளுக்காக சேமிக்க
ஒரு சதுர மில்லிமீட்டர் கூட
இடமில்லை
6
ஏற்கனவே தெரிந்தவைதான்
எல்லாமே ஏற்கனவே தெரிந்தவைதாம்
அவற்றை அறிந்து கொள்ள
அனைத்தும்
தேவை
7
கத்தியை கீழே போட்டுவிட்டீர்கள்
என வைத்துக் கொள்ளுங்கள்
கத்தி மீண்டும் கைக்கு வருவதேயில்லை
துப்பாக்கியை கீழே விட்டு விட்டீர்கள்
என வைத்துக் கொள்ளுங்கள்
அது மீண்டும் தோளுக்கு வருவதேயில்லை
அறிந்தவனிடமிருந்தே
அவை
கீழிறங்குகின்றன
அறியாதவன்
எடுத்துவைத்து கொஞ்சிக் கொண்டிருக்கின்றான்
கொஞ்சிக் கொண்டிருப்பவன்
தோள் நோக்கி
மீண்டும் அவை
ஏறத் தொடங்குகின்றன
8
எல்லா துப்பாக்கிகளும்
பொம்மைத் தூப்பாக்கிகளே
9
விவசாயி பயன்படுத்தும்
ஆயுதங்கள்
அத்தனையும்
கைலாயத்திற்கு
வழிகேட்டு நிற்பவை
10
அர்ச்சிப்பதற்கு
ஐந்து பூக்கள்
போதும்
11
ஏராளம் ஈசல்கள் பூமியெங்கும் உண்டு
ஒவ்வொன்றிற்கும்
ஒவ்வொரு
வயது
12
மாமாதான்
தன்னை வயசாக்கி விட்டார் என
மாமி
எத்தனை யுகங்களாக
சண்டை
பிடித்து கொண்டே
நிற்கிறாள் ?
###
பறக்கப் பறக்க தூரம் குறையும்
1
பழசானது அத்தனைக்கும்
பராதி அதிகம்
2
லௌகீகத்திற்குத்தான்
எத்தனை எத்தனை
பெண்
வடிவங்கள் ?
3
எரியாத அடுப்பு போலும்
வெறுமை
சுடுகாட்டில்
எப்போதும் பேச்சரவம்
இடுகாட்டில்
மழைபெய்த சுடுகாடு
அனைத்தும் அணைந்து விடுகிறது
மழை நனைந்த இடுகாட்டில்
அனைத்தும் எழும்பி விடுகின்றன
எல்லாம் ஒன்றென்று
யார் சொன்னது ?
4
ஆதி மூலம்
நட்சத்திரம்
5
நீயொரு நட்சத்திரம்
ஆகிவிட முடியுமா ?
முடியும் என்றும் சொல்வதற்கில்லை
முடியாது என்றும் தள்ளுவதற்கில்லை
6
பிறந்து விட்ட
அத்தனை பெண்களாலும்
இயங்கிக் கொண்டிருக்கிறது
இவுலகு
7
பறக்காதிருக்கையில்
பாரம் அதிகம்
பறக்கப் பறக்க
தூரம் குறையும்
8
செய்வினை செய்வது
எப்படியென்றா கேட்கிறீர்கள் ?
ஐந்துபடி அரிசியெடுத்து
முழக்காலில் போட்டு வைத்து
கொள்ளி நீர் எடுத்து
பாடை தயார் செய்யுங்கள்
பிணம்
தானாக
விழும்
###
என்பது பொருள்
1
எதைக் கொண்டு நிராகரிக்கிறீர்களோ
அதைக் கொண்டே நானும்
நிராகரித்து விடுகிறேன்
விஷயம்
வேறொன்றுமில்லை
2
பங்கேற்பில்லாத காரியங்களில்
பங்கேற்பில்லை
ஏற்பில்லாத இடத்தில்
இசைவில்லை
3
கள்ளஉறவென்பது
கள்ளஉறவு மட்டுமே
4
நான்
இருக்குமிடத்திலிருந்து
எல்லாவற்றையும்
பார்த்துக் கொண்டிருப்பவன்
நான்
இருக்கும் இடம் என்பது
எனது
நான்
இருக்குமிடம்
5
நீங்கள் ரகசியமாக வந்தாலும்
ரகசியமாக தருவதற்கு
என்னிடம்
ஒன்று
உண்டு
பிறரிடம் காட்டயியலாத
ஒன்று
6
நான் வேறொன்றுமில்லை
அதுவல்ல என்று சொல்லிப்பாருங்கள்
அதுவாக இருப்பேன்
புனிதன் அல்ல என்று
சொல்லிப் பாருங்கள்
புனிதனாக
இருப்பேன்
முட்டாள் அல்ல என்று சொல்லிப் பாருங்கள்
முட்டாளாக இருப்பேன்
நோய்தீர்ப்பவன் அல்ல
என்று சொல்லிப்பாருங்கள்
நோய்தீர்ப்பவனாக
இருப்பேன்
கழுதை அல்ல என்றாலோ
கழுதையாக
அல்ல அல்ல
என்னும் இடங்களெல்லாம்
என்னுடைய
இடங்கள்
7
பிச்சை எடுக்க நீளும் எனது கரங்களுக்கு பின்பாக
நான்கு குழந்தைகள்
பசியோடு
இருக்கக் கூடும்
8
நம்பிக்கை இல்லையென்று சொல்வீரேயாயின்
நீங்கள் நம்பிக்கை கொள்ள
வேண்டியவர்
என்பது
பொருள்
###
தள்ளிநிற்பவன் பார்த்து விடுகிறான்
1
நண்பர்கள் சுருங்கி
சிறிதாகி விட்டார்கள்
அகம் வளர்ந்து
பெரிதாகி விட்டது
2
மழையை மழையென்று
சொல்லாதீர்கள்
அது வேறு ஏதோ
ஒன்று
3
உலகெல்லாம் பறந்து திரியும்
குருவிக்கு
கூட்டுக்குள்
ஒரு சதுர அடி கூட
கிடையாது
கூட்டிற்குள் சதுர அடியில்லாத
பறவை
கூட்டிற்கு
வெளியில்
அவ்வளவு
ப்ரகாஸம்
4
ஒருமுகமானால்
வடிவம்
பலமுகமானால்
பரப்பிரம்மம்
5
வழிபடவேண்டியவை
ஏராளம்
6
எதற்கும்
யுத்த களத்தில்
நின்று கொண்டிருக்கிறோம்
என்று
தெரிந்திருப்பது
நன்று
7
வைத்துக் கொண்டிருக்கும் பெயர்கள்
அத்தனையுமே
சும்மா
8
அகாலத்தில் விழும் சொற்கள் எல்லாம்
காலத்திற்குள்
முளைக்கின்றன
புஷ்பம் போலும் பெய்கிறது
மழை
9
ஏக்கம் நின்று பார்க்கிறது
ஏக்கமில்லாததற்கு
ஏக்கம்
என் நின்று பார்க்கிறது
என்பதே
தெரிவதில்லை
அப்படி தெரியாததிலிருந்துதான்
இந்த ஏக்கமும்
வந்து நின்று
பார்க்கிறது
10
எல்லாதவறுகளுக்கும்
ஒவ்வொரு குணம் இருக்கிறது
இந்த குணத்தால் வந்திருந்தால் இது
அந்த குணத்தால் அது
தள்ளிநிற்பவன் பார்த்து விடுகிறான்
பார்த்து விடுபவனை பாராதவன்
தாக்கத் துணிகிறான்
11
விளைவு வேண்டாமென்றால்
பிறவாமை வேண்டும்
12
பெண்ணின்பம் விளைவின்பம்
Comments
Post a Comment