காதல் என்பது சுயத்தின் தெளிந்த விழிப்பு நிலை.

காதலர் தின நல்வாழ்த்துக்கள்

காதல் என்பது சுயத்தின் தெளிந்த விழிப்பு நிலை.

அடைதல் தொடர்பான விஷயம் இல்லை .பருவத்தின் பரவசமும் இல்லை.பயமும் இல்லை.சந்தேகித்தலும் உடமை மோகமும் இல்லை.பொறுப்பெடுத்துக் கொள்ளுதலும் இல்லை.பொறுப்பெடுத்துக் கொள்ளுதலின் பெயர் அமைப்பு,
குடும்பம் .கூட்டு சேர்ந்து வாழ்தலும் இல்லை.

உணர்தலே அது.ஈடுபடுதலே அது.
அகத்தின் புற ஊற்று காதல்.புறத்தை உயிரால் ஈடு செய்தல்..

காதலே கர்மாவின் பயன் மதிப்பு.காதலின்றி உயரிய காரியங்கள் ஏதுமில்லை.

நமது சமூகம் பெரும்பாலும் காதலை பருவங்களின் பரவச உணர்வு என அர்த்தம் கொள்ளப் பார்க்கிறது.அடைதலை நோக்கி அது நகர வேண்டும் என முயற்சி செய்கிறது.அடைதலில் கொள்ளும் இடர்பாடுகளை துயரங்களை அது பாசாங்கு செய்கிறது.

இணை சேர்தலும் வசப்படலாம்.அப்படியாயின் நன்று ஒரு பறவையைப் போன்ற கதி நிலையில். .ஆனால் ஒன்றில் மட்டும் இணை சேர்தல் அல்ல காதல் .புறம் அத்தனையிலும் இணை சேர்தல் .புறஉலகின் உயிர் ஊற்றுடன் கொள்ளும் தொடர்பிலிருந்து ஒன்றைப் பற்றி கொள்ளுதலாகவும் இருக்கலாம். கலையை , கவிதையைப் பற்றிக் கொள்ளுதலைப் போல.

நமது அர்த்தங்கள் பொருட்களில் இணை சேர்தல் என்கிற கற்பிதம் கொண்டது.நபர்கள் மீது கொண்ட பற்றை காதல் என சொல்லுதல் துர்பாக்கியமானது.நபர்களில் இணை சேர்தல் அது லீலை.

காதல் ஒரு தெளிந்த பிரக்ஞை.ஆக்ரோஷம். ஆன்மீகத்தின் உயர்நிலை. வெறுப்பில் விடுபடுதல்.
பிரபஞ்சத்தின் மீதான இருப்பு கைகூடுதல்.


காக்கைச் சிறகினிலே ...

"கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாதன்பர் கூட்டந்தன்னை ...
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு ...
உள்ளே அனைத்திலும் / கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே..."

- ஸ்ரீ அபிராமி பட்டர்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"