கடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன.

கடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன.


இன்று காலையிலேயே வழக்கத்திற்கு மாறாக கன்னியாகுமரி மாவட்டம் விடிந்தது.கடற்கரைகளில் இருந்து வர வேண்டிய பேருந்துகள் வரவில்லை.பின்னர் இடைகிராமங்கள் வரை சென்று கடற்கரைகளைத் தொட்டு விடாமல் திரும்பும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளது.காவல் வளையங்கள்.
மீறி பேருந்துகளில் ஏறுகிற கடற்கரை மக்கள் காவலர்களால் இறக்கி விடப்படுகிறார்கள்.இது என்ன வகையான ஒடுக்குமுறை என்பதே விளங்கவில்லை.ஊடகங்கள் இதனை பொருட்படுத்தாமல் இருக்கின்றன.
மணக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சரக்கு பெட்டக துறைமுக வேலைகளுக்கு எதிராக மக்கள் இன்று; மாவட்டத்து தலைநகரான நாகர்கோயிலுக்கு சென்று மனு கொடுக்கவிருக்கிறார்கள் என்பதனை முன்னிட்டு இந்த நடவடிக்கை.கடலோர கிராமங்களை சிறை வைக்கும் நடவடிக்கை.பொய் வழக்குகள்,தனி மனிதர்களை சிறை வைத்தல் போன்ற நடவடிக்கைகளை மிஞ்சும் விதத்தில் இந்த அரசின் கடலோர கிராமங்கள் சிறை வைப்பு நடவடிக்கை .அரசின் அடக்குமுறைகள் நாள்தோறும் புதுப்புது வடிவங்களை அடைந்து வருவதற்கு சான்று இந்த நடவடிக்கை.இது அப்பட்டமான மக்கள் விரோதம் என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.
இந்தியாவில் வளர்ச்சியின் பெயரால் கொண்டு கொட்டப்படும் திட்டங்கள் அனைத்துமே ;அந்த பகுதி பூர்வீக குடிமக்களை அழித்து அவர்கள் இருந்த இடத்தில் வெளியிலிருந்து வருகிற நவீன குடிகளை அமர்த்தும் காரியமாகவே உள்ளது.அடிப்படை முரணும் சிக்கலும் எழுகிற இடம் இதுவே.வந்து சேரவிருக்கிற நவீன குடிகளின் கூலியாட்களாக பூர்வீகக் குடிகள் உருமாற்றமடைகிறார்கள்.கூலியாட்களாகவேனும் உருமாறும் தகுதியை அவர்கள் பெற்றிருக்கவில்லையானால் .கேளிக்கை பொருட்களாகவேனும் மாறும் திறனை அவர்கள் கொண்டிருக்க வேண்டும்.வெளியிலிருந்து வருவோருக்கு முன்பாக நடனமாடிக் காட்ட வேண்டும்.
இந்தியா பிற வளர்ச்சியடைந்த நாடுகளின் பண்புகளை கொண்ட தேசமல்ல.பல கலாசாரம்,பல்வேறு விதமான சமூகக் காரணிகள் நிறைந்தது.இந்தியா பல்வேறு திறத்திலான தொகுப்பு மனிதர்களின் குடியிருப்புகளால் நிறைந்தது.இங்கே ஒரு குடியிருப்பை அழித்து பிறிதொரு குடியிருப்பை ஸ்தாபிக்கிற எல்லாவிதமான முயற்சிகளும் ஆதிக்க முயற்சிகளே.இப்படித்தான் தூத்துக்குடி போன்ற நகரங்கள் இப்போது நமக்கு அந்நிய நகரங்களாகியிருக்கின்றன.
இந்தியாவில் வளர்ச்சி என்ற வார்த்தை அர்த்தம் பெற வேண்டுமாயின் பூர்வீகக் குடிகளை மேம்படுத்தி ;அவர்களை நவீன குடிகளாக மலர்ச்சி செய்வதில் மட்டுமே இருக்க முடியும்.அப்படியல்லாத வளர்ச்சியென்பது வேறு வேறு காரணிகளுக்கான பாசாங்குகள்.
துறைமுகம் வந்தால் வேலை கிடைக்கும் அல்லவா ? என்று கேட்கிறார்கள்.உனக்கு வேலை கிடைப்பதற்காக நாங்கள் எதற்காக சாக வேண்டும் ? ராஜஸ்தானில் உள்ள ஒருவனுக்கு வேலைகிடைப்பதற்கு ,பிகாரில் உள்ளவனுக்கு வேலை கிடைப்பதற்கு எங்கள் தலை எதற்காக மொட்டையிடப் படவேண்டும் ?
இங்கே பூர்வீகமாக வாழும் சமூகத்தை அழித்து ;அதில் நவீன சமூகத்தை குடியமர்த்துவதை வளர்ச்சியென குறிப்பிடுவார்கள் எனில் அதனோடு வலுக்கட்டாயமாக வல்லுறவு கொள்ளுமாறு எங்களை எதற்காக நிர்பந்தம் செய்கிறீர்கள் ?
சென்னைக்கு ஒரு மணிநேரத்தில் வந்தே சேர வேண்டிய ஒரு அவசியத்திலும் எங்கள் மக்கள் இல்லை.எங்களுக்கு எதற்காக விமான நிலையம் ?
விபத்தென்னும் பெயரால் இந்த சாலைகளில் தினமும் இருபதுக்கும் மேற்பட்ட எங்கள் மக்கள் கொல்லப்படுகிறார்கள்.விபத்திற்குள்ளாபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகம் .எலும்பு முறி மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.டிப்பர் லாரிகள் எங்கள் குழந்தைகளை பயமுறுத்துகின்றன.
துறைமுகம் அவசியம்,அணுவுலை அவசியம் , உனக்கு வளர்ச்சி அவசியம் என்றால் அதனை உனது ஊரில் நிறுவு. யார் வந்து கேட்க போகிறார்கள் ?
எனது தலைகளின் மேலேயுனக்கு விமான பயணமா ?
உனது குறியின் வளர்ச்சி உன்னிடம் இருக்கட்டும் .என்னிடம் கொண்டு அதனை நீட்டாதே...
கிராமங்களை சிறை வைத்து நடைபெறுகிற வளர்ச்சி இங்கே யாருக்காக ?
வன்மையான கண்டனங்கள்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"