சாமிதோப்பு வைகுண்டசாமி பதியில் உண்ணாவிரதப் போராட்டம்
சாமிதோப்பு வைகுண்டசாமி பதியில் உண்ணாவிரதப் போராட்டம்
ஒன்றுபடுவோம் சமய உரிமை காப்போம்
எங்களுடைய சமய உரிமைகளுக்காகவும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதில் வருத்தமுற்றிருக்கிறேன்.இந்து சமயத்தில் அய்யாவழி தனித்த வழிபாடுகளும் ,தனித்தன்மையும் கொண்டது.தென்திருவிதாங்கூர் சுவாதி திருநாள் ஆட்சி காலத்தில் சாதி சமயங்களுக்கு அப்பாற்பட்ட இந்த வழிபாட்டை அய்யா வைகுண்டசாமிகள் உருவாக்குவதற்காக 112 நாட்கள் சிறையிருந்த வரலாற்றைக் கொண்டது.இப்போது மீண்டும் தமிழக அரசின் அற நிலையத் துறையினரிடம் இருந்து அய்யாவழி வழிபாட்டு முறைகளைக் காப்பதற்காக போராட வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.இந்த போராட்டத்திற்கு அரசாங்கம் செவி சாய்க்காத பட்சத்தில் இந்த போராட்டம் தீவிரமடையும் என்பதில் சந்தேகமில்லை.இந்த இக்கட்டில் இருந்து எங்களை பாதுகாக்க இந்து சமய பெரியவர்களும் ,சமூக நீதிபேரிலும் அய்யாவழியின் பேரிலும் பற்று கொண்ட சான்றோர்களும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
வருகிற ஞாயிறுக்கிழமை மார்ச் 18 ம் தேதி முதல்கட்டமாக சாமிதோப்பு தலைமைப்பதியில் வைத்து ; அற நிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் சாமிதோப்பு அய்யா பதியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் நடைபெறுகிறது.ஏற்கனவே அற நிலையத்துறையின் பணியாளர்கள் பதி விதிமுறைகளை அவமதிப்பு செய்கிறார்கள்.இது அய்யா வைகுண்டசாமியை அவமதிப்பதற்கு சமம்.
அனைவரும் ஒத்துழைப்பு நல்குங்கள் .
இது எங்கள் வழி.எங்கள் நம்பிக்கை.வைகுண்டசாமிகள் காட்டிய நெறிகளுக்கு மாறாக நாங்கள் நடந்து கொள்ள இயலாது.நாங்கள் அமைதி ,பொறுமை ஆகிய வைகுண்டசாமியின் போதனைகளை பெரிதும் மதிப்பவர்கள்.ஆதீனங்கள்,மடங்கள் இந்து மதத்தில் தன்னிச்சையாக இயங்கி வருவதை போல எங்களுடைய நம்பிக்கைகளையும் ,வழிபாட்டு உரிமையையும் தன்னிச்சையாக இருக்க விடுங்கள்.
தேவையற்ற தலையீட்டை அய்யாவழி பதிகளில்,தாங்கல்களில் அரசு ஏற்படுத்துவதன் மூலம், எங்கள் அமைதியான சமூக வாழ்விற்கு அரசு இடையூறு செய்கிறது.மேலும் மேலும் பிரச்சனைகளை வளர்க்காமல் அரசு, வைகுண்டசாமிகள் வழிபாடுகளில் தலையிடாதிருக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.
அய்யாவிடம் அன்னதானம் பெற்றே வாழ்ந்த நாம் ஒரு நாள் அந்த தலைமைப்பதியிலேயே உண்ணாவிரதம் இருக்க வேண்டியிருக்கிறது.அமைதியாக எதிர்ப்பைத் தெரிவித்து ஒருங்கிணைவோம்.வாருங்கள்.
"தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம் "
ஒன்றுபடுவோம் சமய உரிமை காப்போம்
எங்களுடைய சமய உரிமைகளுக்காகவும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதில் வருத்தமுற்றிருக்கிறேன்.இந்து சமயத்தில் அய்யாவழி தனித்த வழிபாடுகளும் ,தனித்தன்மையும் கொண்டது.தென்திருவிதாங்கூர் சுவாதி திருநாள் ஆட்சி காலத்தில் சாதி சமயங்களுக்கு அப்பாற்பட்ட இந்த வழிபாட்டை அய்யா வைகுண்டசாமிகள் உருவாக்குவதற்காக 112 நாட்கள் சிறையிருந்த வரலாற்றைக் கொண்டது.இப்போது மீண்டும் தமிழக அரசின் அற நிலையத் துறையினரிடம் இருந்து அய்யாவழி வழிபாட்டு முறைகளைக் காப்பதற்காக போராட வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.இந்த போராட்டத்திற்கு அரசாங்கம் செவி சாய்க்காத பட்சத்தில் இந்த போராட்டம் தீவிரமடையும் என்பதில் சந்தேகமில்லை.இந்த இக்கட்டில் இருந்து எங்களை பாதுகாக்க இந்து சமய பெரியவர்களும் ,சமூக நீதிபேரிலும் அய்யாவழியின் பேரிலும் பற்று கொண்ட சான்றோர்களும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
வருகிற ஞாயிறுக்கிழமை மார்ச் 18 ம் தேதி முதல்கட்டமாக சாமிதோப்பு தலைமைப்பதியில் வைத்து ; அற நிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் சாமிதோப்பு அய்யா பதியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் நடைபெறுகிறது.ஏற்கனவே அற நிலையத்துறையின் பணியாளர்கள் பதி விதிமுறைகளை அவமதிப்பு செய்கிறார்கள்.இது அய்யா வைகுண்டசாமியை அவமதிப்பதற்கு சமம்.
அனைவரும் ஒத்துழைப்பு நல்குங்கள் .
இது எங்கள் வழி.எங்கள் நம்பிக்கை.வைகுண்டசாமிகள் காட்டிய நெறிகளுக்கு மாறாக நாங்கள் நடந்து கொள்ள இயலாது.நாங்கள் அமைதி ,பொறுமை ஆகிய வைகுண்டசாமியின் போதனைகளை பெரிதும் மதிப்பவர்கள்.ஆதீனங்கள்,மடங்கள் இந்து மதத்தில் தன்னிச்சையாக இயங்கி வருவதை போல எங்களுடைய நம்பிக்கைகளையும் ,வழிபாட்டு உரிமையையும் தன்னிச்சையாக இருக்க விடுங்கள்.
தேவையற்ற தலையீட்டை அய்யாவழி பதிகளில்,தாங்கல்களில் அரசு ஏற்படுத்துவதன் மூலம், எங்கள் அமைதியான சமூக வாழ்விற்கு அரசு இடையூறு செய்கிறது.மேலும் மேலும் பிரச்சனைகளை வளர்க்காமல் அரசு, வைகுண்டசாமிகள் வழிபாடுகளில் தலையிடாதிருக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.
அய்யாவிடம் அன்னதானம் பெற்றே வாழ்ந்த நாம் ஒரு நாள் அந்த தலைமைப்பதியிலேயே உண்ணாவிரதம் இருக்க வேண்டியிருக்கிறது.அமைதியாக எதிர்ப்பைத் தெரிவித்து ஒருங்கிணைவோம்.வாருங்கள்.
"தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம் "
Comments
Post a Comment