Posts

கோழிக்குஞ்சுகளாக பொரித்து நிற்கிறாள்

Image
கோழிக்குஞ்சுகளாக பொரித்து நிற்கிறாள் 1 இசக்கியம்மையே கோழிக்குஞ்சுகளாக பொரித்து நிற்கிறாள் அடைகாக்கிறாள் காபந்து செய்கிறாள் கோழிகளை மேய்க்கவும் செய்கிறாள் 2 விஷ வேட்டாளிகள் நான்கைந்து கூடி எனது படுக்கையறையில் கூடுகள் அமைத்திருக்கின்றன பகலிரவு பாராத வேலைகள் அவர்களுக்கு நான் எப்போதேனும் வருகிறேன் தூங்குகிறேன் போய்விடுகிறேன் முதலில் எல்லோரும் பயமுறுத்தினார்கள் அவர்கள் உன்னை கொன்றுவிடுவார்கள் குடைந்து விடுவார்கள் என்றெல்லாம் சொன்னார்கள் எரித்துவிடவேண்டும் என்றார்கள் இந்த அறையில் அவர்கள் வேலைகளை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் எனது வேலைகளை நான் செய்து கொண்டிருக்கிறேன் காலையில் புலரி எழுப்புகையில் முதுகை சடவு வளைத்து குட் மார்னிங் சொல்கிறார்கள் அனைத்து களைப்பினையும் நீரில் வடித்து இரவில் அவர்களுக்கு குட் நைட் சொல்கிறேன் 3  ### மனிதர்கள் மிகவும் சுவாரஸ்யமாக தெரிகிறார்கள் 1 ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமான லௌகீகம் சிறந்த பெண் சிறந்த லௌகீகம் கடினமான பெண் கடினமான லௌகீகம் அவளுடைய விலங்கு அவளுடைய புன்சிரியில் இல்லை அழகில் இல்லை இடைவள...

இஸ்லாமிய இசக்கி

Image
இஸ்லாமிய இசக்கி எங்களூரில் ஒருசிறிய இசக்கி உண்டு.தேவகுளத்தில் இருந்து இங்கே வந்து அமர்ந்து கொண்டாள் என்று சொல்வார்கள்.சிறுவயது தொடங்கி இப்போதுவரையில் அவளை  பார்த்துக் கொண்டிருக்கிறேன்.சன்னதம் துளிர்த்து ஆடுகையில் படையலில் இட்ட பிச்சுவெள்ளைகளில் நறுமணம் போதவில்லை என்கிறாள்.ஆரம்பத்தில் அவள் இருந்தது சிறிய குடில் .ரொம்பவும் அழகான குடில் அது.மர அளிகள் கொண்ட தணுப்பான குடில்.இந்த குடிலில் நீ இருப்பாயா ? உன் பிள்ளைகள் இருக்குமா ? என ஊர் பெரியவர்களைக் கேவலமாகக் கேட்பாள்.பிறகு கோட்டை அமைத்து இருத்தினார்கள்.இப்போது குடில் போல வருமா ? கூட்டாளி தெய்வங்கள் பலரும் இன்னும் குடில் விட்டு இங்கே கோட்டைக்கு வந்து சேரவில்லை என்று அடுத்த தலைமுறையினரை கலவரப்படுத்துகிறாள்.ஏராளம் மின்விளக்குகள் வந்தாயிற்று ,புதிய புதிய பெருஞ்சாலைகள் அதனால் என்ன அவளுக்கு பிச்சி வெள்ளையில் மணம் குறைவு.என் இடை ஒடிந்து விழும் மலர் அலங்காரம் எப்போது வைப்பாய் ? என்னும் கேள்வி . இப்படி இப்படி அவளுடைய பிரச்சனைகள்.ஒருவிதத்தில் இசக்கி என்பவள் பெண்ணின் ஆழ்மனதிற்கு அசல் சான்று.அதனாலேயே அவளை ஒருபோதும் புறக்கணிக்கவே ...

அவர் வீடுதிரும்பியது உண்மைதான்

Image
அவர் வீடுதிரும்பியது உண்மைதான் என்னுடைய நண்பர் ஒருவர் கொலைவழக்கு ஒன்றில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சட்டம்சாரா காவலில் காணாமல் ஆக்கப்பட்டார்.மனைவியின் உறுதியான போராட்டத்திற்குப் பின்னரும் அவர் எங்கே வைக்கப்பட்டார் என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை.எங்களிடம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.காரணம் தெளிவாக இருந்தது.கொலையுண்ட நபரின் மனைவி இவர் பெயரை மனுவிலேயே சந்தேகத்தின் பெயரில் இணைத்திருந்தார். இத்தனைக்கும் வீட்டில் வந்து இவரது மனைவியின் முன்னிலையில் அவரைப் போலீஸார் பிடித்துச் சென்றிருந்தார்கள்.அந்த வழக்கில் காணாமலாக்கப்படும் காவலில் ஆறுபேர் கைது செய்யப்பட்டிருந்தார்கள் உடனிருந்த ஆறுபேரும் ஏற்கனவே ஒன்டென் வழக்கு பதியப்பட்டிருப்பவர்கள்.பதினைந்து நாட்களுக்குப் பிறகு : காணாமலாக்கப்படும் காவலின் விருந்திற்கு எவ்வளவு நாட்கள் எந்த எந்த வைத்தியர்களிடம் வர்மம் எடுக்கவேண்டும் என்கிற அறிவுரையும் வழங்கப்பட்டு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.விடுவிக்கப்பட்டமைக்குக் உண்மையான குற்றவாளி பதினான்காவது நாளில் சரணடைந்திருந்ததே காரணம் .அவர் சரணடையவில்லை எனில் இந்த அறுவரில் பின்னணி குறைந்...

எனக்கு அறிவு கிடையாது அதனால் தப்பித்தேன்

Image
எனக்கு அறிவு கிடையாது அதனால் தப்பித்தேன் எனக்கு ஐம்பதாவது வயது பிறந்திருக்கிறது.ஒவ்வொருவருக்கும் நாற்பத்தியைந்திற்கும் மேல் ஒரு கண்டம் வரும்.அது கடந்தால் பின்னர் கண்டம் திரும்பவும் வந்துகூட பத்தாண்டுகள் ஆகும்.அரசபணியில் இருப்பவர்களுக்கு ஓய்வில் கண்டம்.அதாவது ஓய்வு தொடங்குகையில் எப்படி? என்கிற திகைப்பிருக்கும்.சிலர் மனநல பிரச்சனைகளுக்கும் ஆளாவதுண்டு.அதுவரையில் அவர்கள் வாழ்ந்த வாழ்வு போதாது,போலியானது என்பது தெரிய வரும்.சிலர் அதனை குறுக்கு வழிகளில் கடக்காமல் நேர்வழிகளில் எதிர ்கொள்ள பழகிக் கொண்டார்கள் எனில் எண்பதுவரையில் தடங்காமல் செல்லமுடியும். நீள் ஆயுள் மீண்டும் பிறவாமைக்கு நல்மருந்து.ஏக்கங்கள் அனைத்தும் தணிந்து சாதல் நலம்.பூரண வாழ்வு அது.அதனால் நீள் ஆயுள் வாழ்பவரேல்லாம் பூரண வாழ்வு கொண்டவர்கள் என்றோ பூரணமாக வாழ்ந்தவர்கள் என்றோ சொல்ல முடியாது.வாழ்வினை ஒரு கப்பல் பயணம் போல சாதிப்பவர்களுக்கு அது விளங்கும். கவிஞர் தேவதச்சன் ஒரு சமயம் " நமக்கு புறத்தில் இருப்பவர்கள் நமக்கு வயது கூடிக் கொண்டிருப்பதை பார்க்கிறார்கள் ,அகத்தில் நமக்கு வயது கூடுவதில்லை " என்று சொன்னார். அது...

மூட நம்பிக்கைகள் நுட்பமான மனதின் கண்டுபிடிப்புகள்

Image
மூட நம்பிக்கைகள் நுட்பமான மனதின் கண்டுபிடிப்புகள் போர்ஹே பின்னாட்களில் அவருடைய நேர்காணல் ஒன்றில் "தான் மூட நம்பிக்கையாளனாக மாறிக் கொண்டிருக்கிறேன் " என்று தெரிவிக்கிறார். போர்ஹே இந்திய தத்துவங்கள் குறித்தும் எழுதியவர்.கரடு முரடான முரட்டு மனதிற்கு எதுவும் தேவையில்லை.அதற்கு மதுரையில் பேருந்திலேறினால் நேரடியாக சென்னை சென்று சேரலாம் என்பதை மட்டும் தெரிந்து வைத்திருந்தால் போதுமானது. ஆனால் கலைஞன் அன்றாடம் பொருள் விளங்காத பல்வேறு விஷயங்களை பார்த்துக் கொண்டிருக்கிறான்.சாதாரணமான மக்களும் அப்படி காண்கிறார்கள்.அவற்றில் உண்மை இருப்பது விளங்குகிறது.ஏன் எப்படி என்பவை விளங்குவதில்லை.யாரேனும் அவற்றை விளக்குவார்கள் எனிலும் கூட அவை முறையாக விளங்குவதில்லை.கலைஞனுக்கும் கவிஞனுக்கும் இவையெல்லாம் மிகவும் முக்கியமானவை. பிரென்ச் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் இரண்டாம் நூற்றாண்டில் தான் தினந்தோறும் கண்ட கனவுகளை பதிவு செய்து வைத்திருக்கிறார்.அவற்றில் இந்திய சமூகத்திற்கு பொதுவான கனவுகள் கூட இருக்கின்றன. பூக்கோ தனது ஆய்வுக்காக இருபதாம் நூற்றாண்டில் அவன் கண்ட கனவுகளை எடுத்துக் கொள்கிறார்.ச...

குழந்தை ரௌடி

Image
குழந்தை ரௌடி 1 ரௌடி கொல்லப்பட்ட ஊரில் அடக்கம் முடிந்ததும் அடங்கா பிணம் எல்லார் மனதிலும் மேலெழும்பியது என்னை ஆதரித்தோர் எதிர்த்தோர் எல்லாம் நீங்கள்தானே அல்லவா என்று கேட்டது உங்களிடம் எழும்புவதும் அடங்குவதுமாக நான் இருக்கிறேன் அல்லவா தெருமுனையில் நான் வெட்டிச் சாய்கையில் நீங்களும் உடன்சேர்ந்து சாய்ந்தீர்கள் அல்லவா பிறகு இப்போது எழும்பி நிற்கிறேன் அல்லவா மீண்டும் ஒருமுறை முதலில் தொடங்கி சடங்குகள் செய்து அடக்குங்கள் மீண்டும் மேலெழும்ப இயலாவண்ணம் என்னை மீண்டும் ஒருவன் எடுத்து அணிந்து கொள்ளல் ஆகாது மீண்டும் ஒருவனுக்கு நீங்கள் அணிவித்து விடுவதும் கூடாது கோரிக்கை செய்தது பிணம் என்னை நானாக எடுத்து அடக்கம் செய்ய இயலாது மீண்டும் ஒருமுறை அடக்கம் செய்யுங்கள் தேவைப்பட்டால் என்னுடைய குழந்தைகள் அறியாமல் மனைவிக்குத் தெரியாமல் மீண்டும் மீண்டும் அடக்கம் செய்து கொண்டிருங்கள் நீங்களோ நானோ அடங்குவதுவரை 2 வெட்டிச் சாய்ந்ததும் தேனாய் இனித்து குருதியை வற்றக் குடித்தது நிலம் சுற்றிலும் வட்டக்கறைகள் 3 பிணச்சோறு தின்றவர்கள் விட்டுச் ...

அமைதி தனித்திருக்கிறது

Image
அமைதி தனித்திருக்கிறது 1 போற்றப்படுவதெல்லாம் வளர்வதை போலவே தூற்றப்படுவதெல்லாமும் வளர்கிறது தனக்குள் தானாக 2 புறத்தில் இருந்து காரணங்கள் வந்தால் உள்ளம் சிதைகிறது உள்ளத்தின் காரணம் புறத்தை அழிக்கிறது புறத்தை அழிக்கும் அகம் அகோரம் 3 எல்லாம் ஒரே வகை விதவையர் ஒரே வகையாக இருக்கிறார்கள் விடோவர் ஒரே வகையாக இருக்கிறார்கள் விவாகரத்து பெறுவோர் ஒரே வகையாக இருக்கிறார்கள் திருமணம் ஆனவர்கள் ஒரு வகை ஆகாதவரெல்லாம் ஒரே வகை ஆகவே முடியாதவர்கள் ஒரு வகை முரண்படுவோர் ஒரே வகையாக இருக்கிறார்கள் நிம்மதியற்றோர் ஒரே வகையாக இருக்கிறார்கள் எதிர்வாது செய்வோர் ஒரே வகையாக இருக்கிறார்கள் சகிப்பற்றோர் ஒரே வகையாக இருக்கிறார்கள் சண்டையிடுவோர் ஒரே வகையாக இருக்கிறார்கள் சண்டையிடத் தூண்டுவோர் ஒரே வகையாக இருக்கிறார்கள் சச்சரவிடுவோர் ஒரே வகையாக இருக்கிறார்கள் பொது மண்டபம் இடிப்போர் ஒரே வகையாக இருக்கிறார்கள் ஏன் ஒரே வகையாக இருக்கிறார்கள் என்பது தெரியாததால் ஒரே வகையாக இருக்கிறார்கள் ### அமைதி தனித்திருக்கிறது 4 அமைதிக்கும் நமக்குமிடையில் தான் எவ்வளவு பெரிய பேருந்து நெரிசல...