யுகாந்தா

யுகாந்தா 
ஒரு யுகத்தின் முடிவு
[மகாபாரதம் மற்றும் அதன் பாத்திரங்கள் பற்றிய புகழ் பெற்ற புத்தகம் ]

ஐராவதி கார்வேயின் "யுகாந்தா" பல நண்பர்களிடமும் வாசிக்கக் கோருகிற நூல்.மகாபாரதம் பற்றிய என்னுடைய முன்முடிவுகளை இந்த நூலின் வாயிலாகத்தான் கழற்றிக் கொண்டேன்.அந்தவகையில் இந்த நூலுக்கும் ஐராவதி கார்வேக்கும் கடமைப்பட்டவன்.தமிழில் அழகியசிங்கர் மொழிபெயர்ப்பு. ஓரியன்ட் லாங்மன் தமிழில் இந்த நூலை 1994லில் முதற்பதிப்பாக வெளியிட்டிருக்கிறார்கள்.மறுபதிப்புகள் இந்த நூலுக்கு தமிழில் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை.மராத்தியில் இந்த நூல் வந்தது 1967லில் .ஆங்கில மொழியில் பெயர்த்து 1969லில் வெளியிடப்பட்டிருக்கிறது.

நண்பர் தளவாய் சுந்தரத்தின் அவர் கையொப்பு இடப்பட்ட பிரதியை மீண்டும் கையில் எடுத்திருக்கிறேன்.ஒருவாரமாகக் கையிலேயே வைத்திருக்கிறேன் என்பதே சரி.மகாபாரதத்தை இவ்வண்ணம் அணுகிப் பார்க்க முடியுமா எனும் விந்தையை அது மீண்டும் ஏற்படுத்துகிறது.மீண்டும் மீண்டும் வாசித்தலில் சலிப்படையாத நூல் இது .இது மானுடவியல் அணுகுமுறை இல்லையெனில் வேறொன்று என ஆயிரம் வியாக்கியானங்கள் இதற்கு சொல்லலாம்.இந்த புத்தகம் கொண்டுள்ள ஈர்ப்பிற்கு எத்தகைய வியாக்கியானங்கள் சொன்னாலும் பற்றாக்குறையாகவே அவை செலவாகும்.இது போன்றதொரு படைப்பை உருவாக்க முடிந்தால் போதும் இந்த குறைபட்ட ஆன்மாவிற்கு என்றே படுகிறது.

வடிவரீதியில் இது ஒரு கட்டுரை நூல்தான் .மொத்தமே கிரவ்ன் சைசில் 224 பக்கங்கள்.ஆனால் அளப்பெரிய படைப்பாற்றல் .

எனக்குள்ளிருக்கும் அகமனிதனை கொலை செய்யாத நூல்களை நம்புகிற பழக்கம் எனக்கில்லை.அப்படியான நூல்களைப் பரிந்துரைப்பதும் இல்லை.யுகாந்தா அப்படியானதொரு நூலுக்கு ஒரு உதாரணம்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"