மகிழ்ச்சியை ஏற்றுக் கொள்ள பழகுதல்

வெடிவழிபாடு -
மகிழ்ச்சியை ஏற்றுக் கொள்ள பழகுதல்

எல்லாவிதமான பண்டிகைகளுக்குப் பின்னரும் அதனைத் தாங்கிப் பிடித்த வண்ணம் நிற்கும் ஒருவனோ ஒருத்தியோ உண்டு.அப்படியான தியாகங்கள் இல்லாமல் மகிழ்ச்சியில்லை.மகிழ்ச்சிக்குப் பின்னிருக்கும் திருவுருவம் அது.பல சமயங்களில் அது வெளிப்டையாகத் தெரியாது.உள்ளடங்கியிருக்கும்.மகிழ்ச்சியின் உள்முகமாக இருக்கும் பிசின் அது.பதற்றமானதும் கூட . தானாக ஒன்றை உருவாக்க முயல்பவர்களுக்கெல்லாமே இந்த பதற்றம் பொதுவானது.வாழ்வை எந்த நிலையிலும் எதிர்கொள்ள துணை நிற்கும் சக்தி நிறைந்ததிந்த பதற்றம்.

கன்னியாகுமரி மாவட்டத்தைத் தாண்டி கேரளாவிற்குள் நுழைபவர்கள் குழித்துறை பாலத்தைக் கடக்கும் போது சாஸ்தா கோவிலில் இருந்து கேட்கும் வெடிவழிபட்டுச் சத்தத்தை போகும் போதும் , வரும் போதும் கேட்கமுடியும்.முழுநேர வெடிவழிபாடு கொண்ட கோவில் அது.சபரிமலையில் வெடிவழிபாடு விஷேசம் .ஒரு சத்தம் முடிய அடுத்த சத்தத்திற்கு மருந்தடைத்து திரி கொளுத்துபவனை ஒருமுறையேனும் கவனித்துப் பாருங்கள்.கரியடைந்து கசக்கிப் போயிருப்பான்.அது துன்பமெல்லாம் இல்லை.கரியடைந்து  கசங்காமல்  சப்தமில்லை.

திருமணங்களைத் தாங்கிப் பிடித்து நடத்தி முடித்ததும் மயங்கிவிழுகிற தகப்பன்மார்களை காணமுடியும் .அவன் மயங்கி விழுந்ததால் ஏற்று நடத்திய திருமணமும் ,சிறப்பும் தவறென்று ஆகிவிடாது.ஒரு சக்தியை செலவு செய்யாமல் மற்றொரு சக்தி உருவாகாது என்பதே தத்துவம். அவன் தன் மேனியிலிருந்து நெய்யை உருக்கியுருக்கி  வாழ்க்கையை  உருவாக்கியிருப்பான். சில இடங்களில் தாய்மார்களிடம் இந்த பணி ஒப்படைக்கபட்டிருக்கும்.சில இடங்களில் பொறுப்பெடுத்துக் கொள்கிற அண்ணன்மார்கள் தம்பிகள் உண்டு.மறைந்திருந்து நெய்யை உருக்கியொருவன் தராமல் நீங்கள் ஒரு அழகையும் புறத்தே காண முடியாது.மேனியை பிய்த்துக் கொடுக்காமல் மற்றொன்று வராது.எவனோ ஒருவனின் உடல் அப்பமாக மாறும்போதே அழகும் மகிழ்ச்சியும் கிடைக்கின்றன.  புறவயமாக வெடித்து ஒளிபெருக்கும் பட்டாசுகள் ;மறைந்திருக்கும் ஒருவனின் ஊன் உருக்கிச் சிதறுகிற எண்ணைய். அகப்புறத்தில் நின்றெரியும் நெய்யை ;அழகு மதிப்பு செய்ய வேண்டும்.வணங்க வேண்டும்.

இந்தப் பட்டாசுச் சத்தமெல்லாம் பின்னின்று இயங்கும்  கர்த்தாவின் நெய்விளக்கு .மகிழ்ச்சி

 

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்