கம்பனிக் குதிரைகள்

கம்பனிக் குதிரைகள்
பிறக்கும் போது கம்பனிக் குதிரைகளாகப்
பிறப்பதில்லை
கம்பனிக்குதிரைகளின் எள்ளும் கொள்ளும்
ஒன்றுதான்.
கம்பனிக்குதிரைகள் ஆனதால்
கம்பனிக்குதிரைகளுக்கென்று
புதிதாக எதுவும் நடைபெறுவதில்லை.
எஜமானன் வந்து தடவி ரசிப்பது வெறும் பாவனைதான்
அதன் நிமித்தம் குறி கூட எழும்புவதுவுமில்லை.
என்னவானாலும் கம்பனிக்குதிரைகள் கம்பனிக் குதிரைகளாக
இருப்பதைத் தான் விரும்புகின்றன.
அவை கம்பனிக் குதிரைகளாக இருப்பதற்கு
வேறு ஒரு காரணங்களும் கிடையா
கம்பனிக்குதிரைகளுக்கு தாங்கள் இல்லையெனில்
கம்பெனி கவிழும் என்றோரு பிரேமை உண்டு
தனிமையில் அது உண்மைதானோ என்று அசைபோட்டுப் பார்த்தாலும்
கம்பனிக்குதிரைகளுக்கு அதன் பேரிலும்
நம்பிக்கை கிடையா
இதுவரையில் ஒரு கம்பனிக்குதிரை கூட
கம்பெனிக் குதிரையாகப் பிறந்ததில்லை.
ஆனால் எல்லா கம்பனிக்குதிரைகளும்
கம்பனிக் குதிரைகளாக மட்டுமே
சாகின்றன.
கம்பனிக்குதிரைகள் மாடுமேய்க்கப் போன கதை
இவ்வாறுதான் முடிவுக்கு வந்தது
"புல்லு மேய்ந்த ஆட்டையும் காணோம்
களனி குடித்த பசு மாட்டையும் காணோம் "

இதில் கம்பனிக்கோழிகள்
கம்பனி ஆடுகள் எல்லாம்கூட உண்டு
அவை அத்தனை விஷேசமில்லை
கம்பனிக்காளைகளோ அடிமாட்டுக்கும்
ஆகாது

Comments

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"